ராதா மனோகர் : ஈழநாடு 11 பெப்ருவரி 1961
பதிவு பிரஜைகளின் குழந்தைகள் இந்திய தமிழரே!
ரிஜிஸ்டர் ஜெனெரல் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் பிரஜா உரிமை சட்டப்படி இலங்கை பிரஜைகளாகி உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை இந்திய தமிழர் என்றே பிறப்பு பதிவு புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டு,
ரிஜிஸ்டர் ஜெனரல் பிறப்பு பதிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிகிறது,
இச்செய்தி மலைநாட்டு தமிழர் வட்டாரங்களில் புதிய கவலையை அளித்துள்ளது,
இது பற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது
(இலங்கை குடிமக்கள் அனைவரும் இலங்கையின் முதல்தர குடிமக்களாகவே கருதப்படவேண்டும் என்று அன்று போராடிய வரலாறு தெரியாமல் இன்று பலரும்,
நாங்கள் எப்போதும் ஒரு தனியான அதாவது இரண்டாம் தர குடிமக்களாகவே இருப்போம் என்று கச்சை கட்டி கொண்டிருப்பதை என்ன சொல்வது?
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Wednesday, November 8, 2023
இலங்கை பதிவு பிரஜைகளின் குழந்தைகள் இந்திய தமிழரே! Flash Back
Wednesday, September 6, 2023
ராஜகோபாலச்சாரி ஏன் ஜி ஜி பொன்னம்பலத்தின் கோரிக்கையை புறந்தள்ளினார்?
மலையக வாக்குகளின் பலத்தை வைத்து பிரிட்டன் இந்தியா அமெரிக்காவுக்கு சவால் விட்ட இடதுசாரிகளின் வரலாறு ஏன் இதுவரை மறைக்கப்படுகிறது?
இலங்கையில் பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி நிலவிய காலத்தில்,
20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையின் சுதந்திர இயக்கம் மிகவும் தீவிரமாக வளர்ந்தது
இந்த சுதந்திர உணர்வானது 1888 இல் முதல் சுதந்திரத்திற்கான இயக்கமாக இலங்கை தேசிய சங்கம் உருவானது
இதை தொடர்ந்து 1917 இல் சிலோன் சீர்திருத்த கழகம் உருவானது
மேற்கண்ட அமைப்புக்களின் பின்னால் 1919 டிசம்பர் 11 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் Ceylon National Congress ஒரு அரசியல் கட்சியாக உருவானது
இதுதான் இலங்கையில் உருவான முதல் அரசியல் கட்சியாகும்.
இதன் நிறுவன தலைவராக சேர் பொன்னம்பலம் அருணாசலம் பணியாற்றினார்
அக்டோபர் 1920 இல் நடந்த முதலாவது கூட்டத்தில் சர் ஜேம்ஸ் பீரிஸ் இதன் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்,
இவருக்கு பின்பு தொடர்ந்து எப்.ஆர். சேனநாயக்க,
டி.எஸ் சேனநாயக்க, டி.பி.ஜயதிலக, ஈ.டபிள்யூ பெரேரா, சி.டபிள்யூ.டபிள்யூ.கண்ணங்கர, பட்ரிக்
டி சில்வா குலரத்ன, எச்.டபிள்யூ.அமரசூரிய, டபிள்யூ.ஏ.டி.சில்வா, ஜோர்ஜ் ஈ.டி.சில்வா மற்றும் எட்வின் விஜேயரத்ன ஆகியோர் தொடர்ந்து தலைவர்களாக பணியாற்றினார்கள்..
1943 இல் இலங்கை தேசிய காங்கிரஸ் கட்சியின் மெதுவான போக்கை விமர்சித்து பூரண சுதந்திரத்திற்கான தேவை இருப்பதாக திரு டி எஸ் சேனநாயக்க கருதி இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து பிரிந்த ஏனைய பல தலைவர்களோடு டி எஸ்
சேனநாயக்க தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சியை உருவாக்கினார்கள்.
1934 இல் திரு எஸ் டபிள்யு ஆர் டி பண்டாரநாயக்கா ஏ இ குணசிங்க (நடேசஅய்யரின் அரசியல் குரு) ஆகியோரால் நிறுவப்பட்ட தீவிர சிங்கள இனவாத போக்குடைய சிங்கள மகாஜன சபையும் 1946 இல் டி எஸ் சேனநாயக்க தலைமையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொண்டது.
இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து ஐக்கிய தேசிய கட்சி உருவானபின்பு தமிழர்கள்களுக்கான கட்சியாக 1944 இல் ஜி.ஜி. பொன்னம்பலம் அவர்கள் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை நிறுவினார்
Saturday, August 19, 2023
அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றவேண்டிய தேவை எந்த கட்சிக்கு இருந்தது? தமிழரசு கட்சிக்கு!
ராதா மனோகர் : 1965 ஆண்டு தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை தரவில்லை
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஏறக்குறைய சம பலத்தில் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் ஸ்ரீமாவோ அம்மையாரும் டட்லி சேனாநாயவும் தமிழரசு கட்சியின் (14ஆசனங்கள்) ஆதரவை கோரினார்கள்.
தமிழரசு கட்சியினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை கொடுத்தார்கள் அதற்கு ஏதோதோ காரணங்களை கூறினார்கள் பின்பு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றி விட்டதாக கூறி வெளியே வந்தார்கள்
இது தமிழ் தேசிய அரசியலின் வழமையான விக்டிம் டிராமாதான்
ஆனால் உண்மையான காரணம் வேறு!
தமிழரசு கட்சி டட்லியோடு சேர்ந்து ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் அப்போது திரு அல்பிரட் துரையப்பாவின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிருந்ததுதான்.
1965 இல் ஸ்ரீமாவோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் அப்போதே யாழ்ப்பாண பல்கலை கழகத்தை ஸ்ரீமாவோ அம்மையார் நிறுவியிருப்பார்.
ஏனெனில் ஏற்கனவே அவர் யாழ் எம்பி திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ்ப்பாண பல்கலை கழக கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை (1964) எடுத்திருந்தார்
கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமத்தை திரு அல்பிரட் துரையப்பாவோடு ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் பார்த்து அவரை பல்கலை கழகத்திற்கு ஏற்றவைதானா என்று அறிந்து கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலை கழகம் நிச்சயம் வரும் ஆனால் அதன் பெயர் புகழ் எல்லாம் திரு அல்பிரட் துரையப்பாவுக்கே போய் சேரும் என்று செல்வநாயகம் கோஷ்டியினர் பயந்தனர்.
Wednesday, July 26, 2023
இலங்கை இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த பம்பாய் சிந்தி தலைவர் திரு அப்துல் அஸீஸ்
இலங்கை இந்திய வம்சாவளி / மலையக மக்களின் வாக்குரிமை பறிபோன விடயத்தில் ஏராளமான வரலாற்று பக்கங்களாய் காணவில்லை .. அதில் இது ஒரு முக்கிய பக்கம்
இந்த பக்கத்தின் பெயர் இலங்கை இந்திய காங்கிரசின் தலைவராக இருந்த பம்பாய் சிந்தி தலைவர் திரு அப்துல் அஸீஸ் என்பதாகும்
இலங்கைக்கு சுதந்திரம் வழங்க முதல் இலங்கையின் பல்லின மக்களின் கருத்துக்களை அறிந்து உரிய பணிகளை மேற்கொள்ள பிரித்தானிய அரசால் அனுப்பி வைக்கப்பட்ட திரு சோல்பரி பிரபுவோடு திரு அப்துல் அஸீஸ் அவர்கள் மேற்கொண்ட கருத்து பரிமாற்றம் ஒரு முக்கிய செய்தியாகும்
கௌரவ சோல்பரி பிரபு அவர்கள் இலங்கையின் பல தரப்புடனும் பேச்சுவார்த்தை தொடர்ந்தார்
மலையக இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக இலங்கை இந்திய காங்கிரஸ் தூதுக்குழு சோல்பரி பிரபுவை சந்தித்தது
அக்குழுவுக்கு திரு அப்துல் அஸீஸ் அவர்கள் தலைமை தாங்கி சாட்சியமளித்தார்.
இலங்கையில் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும் இந்திய வம்சாவளி மலையக மக்களுக்கும் இடையே நிலவும் முறுகல் நிலவி வரும் சூழ்நிலையில் பிரித்தானிய இலங்கையை விட்டு வெளியேறுவது பற்றி ,
இலங்கை இந்திய காங்கிரசின் நிலைப்பாடு என்னெவென்று திரு அஸீஸை பார்த்து திரு சோல்பரி பிரபு அவர்கள் கேட்டார்.
அதற்கு பதிலளித்த திரு அஸீஸ் ஓ;இலங்கையின் சிறுபான்மை இனங்களான இந்திய வம்சாவளி / மலையக மக்களை பாதுகாப்பது என்று கூறிக்கொண்டு பிரித்தானியா இங்கு தொடர்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரேயடியாக கூறினார்.
Saturday, July 22, 2023
கையில் கத்திரிகோலும் சீப்புமாக ஒரு நாவிதர் கோலத்தில் திரு ஸ்டாலின்
ராதா மனோகர் : 2019 மே மாதம் வெளியான விகடனில் இந்த படம்
வந்திருக்கிறது . திரு ஸ்டாலின் அவர்களின் கையில் கத்திரிகோலும் சீப்புமாக அவரை ஒரு நாவிதர் கோலத்தில் பார்க்க அவாளின் ஆனந்தவிகடன் ஆசைப்பட்டிருக்கிறது .திமுகவுக்கு இது ஒரு வரலாற்று பெருமை என்பது அவர்களுக்கு புரியாது.
திமுகவின் வரலாற்றில் நாவிதர்களுக்கு ஒரு இடம் இருக்கிறது.
முடிதிருத்தும் சலூன்கள் அந்த காலத்தில் படிப்பகங்களாகவும் பயன்பட்டன.
அந்த சலூன்கள் அரசியல் கருத்துருவாக்கத்தில் முக்கிய பங்கு வகித்தன.
காசு கொடுத்து பத்திரிக்கை வாங்குவது என்பது மிகப்பெரிய ஒரு விடயமாக இருந்த அந்த காலங்களில் சலூன்களில் வாங்கப்படும் பத்திரிகைகள் பலருக்கும் படிப்பகங்களாக ..
குறிப்பாக பத்திரிகைகள் வாங்க காசில்லாதவர்களுக்கு அது ஒரு பெரும் வாய்ப்பு.
மேட்டுக்குடியின் வாழ்க்கையில் இருந்த வாசிப்பு பழக்கம் சாதாரண மக்களுக்கும் சென்றடைவதற்கு சமுக நூல் நிலையங்களுக்கு இணையான அல்லது அதற்கு மேலான ஒரு இடத்தை முடி திருத்தும் சலூன்களும் வகித்தன.
அவைதான் திராவிட முன்னேற்ற கழகத்தின் கருத்துருவாக்க மேடைகளாக பெரிதும் இருந்தன.
Wednesday, July 19, 2023
இலங்கையில் சுயமரியாதை திருமணம் 20 - 10 - 1952 சுதந்திரன் பத்திரிகை
ராதா மனோகர் : இலங்கையில் சுயமரியாதை திருமணம் பற்றிய சில செய்திகள்
திருந்திய திருமணம் என்ற தலைப்பில் 2- 11 - 1952 இல் சுதந்திரன் பத்திரிகையில் வந்திருக்கிறது
சுயமரியாதை திருமணம்
திருந்திய திருமணம் நடராசா - சற்குணம்
கடந்த 20 - 10 - 1952 . கல்முனை மாணிக்கம் ரைஸ் மில் மானேஜரான திரு பொ . நடராஜா (என் பி என் அரசன் ) அவர்களுக்கும் யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த ஆயுர்வேத வைத்தியர் கனகரத்தினத்தின் மகளும் சித்த வைத்தியர் பரமானந்தத்தின் சகோதரியுமான செல்வி சற்குணம் அவர்களுக்கும் பருத்திதுறை வீதியில் உள்ள 257 ஆம் இலக்க இல்லத்தில் திருந்திய முறையில் பதிவு திருமணம் நடைபெற்றது .
இந்த சீர்திருத்த திருமணத்தில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் வாழ்த்து செய்திகள் அனுப்பியவர்களுக்கும் மணமக்கள் இதன் மூலம் நன்றி தெரிவிக்கின்றனர்
16 =- 7- 1962 இலங்கை - (சுயமரியாதை திருமணம்)
சீர் திருத்த திருமணம்
அகில இலங்கை பகுத்தறிவு இயக்க உறுப்பினரான,
வெள்ளவத்தையை சேர்ந்த திரு ம. கணபதிக்கும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வி சே .இராசாத்திக்கும்
பம்பலப்பிட்டி சரஸ்வதி மண்டபத்தில் சீர்திருத்த முறையிலே திருமணம் நடைபெற்றது
அகில இலங்கை பகுத்தறிவு இயக்க பொதுச்செயலாளர் திரு ஆ வேலாயுதம் அவர்கள் திருமணத்தை நடத்தினார்.
பண்டா செல்வா புரிந்துணர்வு அரசியலும் பரஸ்பர இனவாத அரசியல் முன்னெடுப்பும்
சுதந்திர இலங்கையின் முதல் அமைச்சரவையில் ( Solomon West Ridgeway Dias Bandaranaike) சாலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்கா
திரு பண்டாரநாயகா அவர்கள் தனது 27 வயதில் இலங்கை தேசிய காங்கிரஸ் இல் இணைந்து 1926 ஆம் ஆண்டு கொழும்பு நகரசபைக்கு அங்கத்தவராக தெரிவானார்.
1936 ஆம் ஆண்டு சிங்கள மகாஜன சபா என்ற சிங்கள தேசிய இயக்கத்தை நிறுவினார். இந்த அமைப்பின் மூலம் 1931 - 1947 தேர்தல்களில் வியாங்கொடை தொகுதியில் வெற்றி பெற்று உள்ளூராட்சி அமைச்சராகவும் பணியாற்றினார்
பின்பு 1947 ஆம் ஆண்டு தனது சிங்கள மகாஜன சபையை டி எஸ் சேனநாயக்க தலைமையில் இருந்த ஐக்கிய தேசிய கட்சியில் இணைத்தார்.
சுதந்திர இலங்கையின் முதலாவது தேர்தலில் 1947 இல் அத்தனகல தொகுதியில் வெற்றிபெற்று டி எஸ் சேனநாயக்காவின் அரசில் சபை தலைவராகவும் உள்ளூராய்ச்சி மற்றும் சுகாதார அமைச்சராகவும் பணியாற்றினார்.
Saturday, July 15, 2023
ஈழநாடு ஆசிரியர் ஹரிஹர சர்மா அவர்கள் உடுப்பிட்டி சிவா அவர்களை எப்போதும் விளம்பர வெளிச்சத்தில் வைத்திருந்தார்
ராதா மனோகர் : அமரர் உடுப்பிட்டி சிவா அவர்கள் எல்லோரின் நன்மதிப்பையும் பெற்ற தலைவர்
அறுபதுகளில் பிராணதார்தி ஹரிஹர சர்மாவை ஆசிரியராக கொண்டு வெளியான ஈழநாடு தினசரி இதழ் உடுப்பிட்டி எம்பி திரு மு. சிவசிதம்பரம் அவர்களுக்கு கொடுத்த விளம்பரம் சொல்லி மாளாது.
அன்றைய ஈழநாடு முழுக்க முழுக்க தமிழரசு கட்சியின் வெறுப்பு தமிழ் தேசியத்தின் ஊதுகுழலாகவே வந்தது.
ஆனாலும் எஸ் ஜெ வி செல்லநாயகத்திற்கோ அமிர்தலிங்கத்திற்கோ கொடுத்த முக்கியத்துவத்தை விட பல மடங்கு .. ஆமாம் பல மடங்கு திரு மு.சிவசிதம்பரத்திற்கே தவறாமல் கொடுத்து வந்தது.
உடுப்பிட்டி சிங்கம் என்ற பட்டம்கூட ஹரிஹர சர்மாவின் உபயம்தான்!
அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று சிந்தித்தபோது ஒரு சந்தேகம் தோன்றியது
திரு மு சிவசிதம்பரம் அவர்கள் கோயில் மணியக்காரராகவும் அசல் உயர்குடி சைவராகவும் இருந்தமை ஹரிஹர சர்மாவின் தனிப்பட்ட காதலுக்கு காரணமாக இருந்திருக்கும் என்றுதான் தோன்றியது.
அது போகட்டும்
Friday, July 14, 2023
திமுக தமிழ்நாட்டுக்கு வெளியே இலங்கையில் இ.தி.மு.க இருந்தது. Gowra Rajasekaran
ராதா மனோகர் : இலங்கையில் 1960 ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திரு அந்தோணி முத்து தலைமையில் இயங்கிய இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தேர்தல் ஆணையாளரால் பதிவு பெற்ற கட்சியாகும்
இதற்கு முன்பு தோழர் இளஞ்செழியன் தலைமையிலான இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் அவசர காலச்சட்டத்தின் அடிப்படையிலேயே தடை செய்யப்பட்டது . அந்த சட்டம் காலாவதியான பின்பு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் மீதான தடையும் காலாவதியானது
இந்த இடைப்பட்ட காலத்தில் பல இலங்கை திராவிட முன்னேற்ற கழக தோழர்கள் இடது சாரி கட்சிகளிலும் அமைப்புக்களில் இணைந்து விட்டிருந்தார்கள்.
தோழர் இளஞ்செழியன் போன்றோர் பிற்காலத்தில் ஜேவிபியில் ஈடுபாடு கொண்டிருந்தார்
மேலும் பலரை இலங்கை தமிழரசு கட்சி ஈர்த்துக்கொண்டது
குறிப்பாக தோழர் மணவைத்தம்பி இலங்கை தமிழரசு கட்சியோடு நெருங்கிய தொடர்பில் இருந்தார்
இந்த இரு இ தி மு காவிற்கும் இடையில் உரசல் உண்டாக்கி திராவிட முன்னேற்ற கழக தோழர்களை உட்கட்சி சண்டையிலேயே காலத்தை கழிப்பதற்கு கோவை மேகேஸ்வர சர்மாவை ஆசிரியராக கொண்ட தமிழரசு கட்சியின் சுதந்திரன் மிக கேவலமான பிரசாரங்களை மேற்கொண்டிருந்தது.
Wednesday, July 12, 2023
திரு அமிர்தலிங்கம்.. 34 ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)
திரு அமிர்தலிங்கம் அவர்களின் 34 ஆண்டு நினைவேந்தல்! (ஜூலை 13, 1989 கொழும்பில்)
இலங்கை திராவிடர் கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழுவின் செயலாளராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய திரு அமிர்தலிங்கம்,
பின்பு திரு எஸ் ஜெ வி செல்லநாயகத்தின் தமிழரசு கட்சியில் தன்னை இணைத்து கொண்டு நீண்ட அரசியல் பயணத்தை தொடர்ந்தார்.
திரு அமிர்தலிங்கம் அவர்கள் சுயமரியாதை சமூகநீதியை பேசிய திராவிட இயக்கத்தில் இருந்து தடம் மாறி, எந்த அரசியல் சித்தாந்தமும் இல்லாத,
தமிழ் தேசிய அரசியலுக்குள் நுழைந்தது ஒரு பெரிய வரலாற்று தவறாகவே முடிந்தது!
இவரின் அரசியலை புலிகள் முடித்து வைத்தாலும் உண்மையில் இந்த முடிவை தீர்மானித்த முக்கிய காரணியாக திரு எஸ் ஜெ வி செல்வநாயகத்தை தான் நாம் குறிப்பிடவேண்டும்.
திரு அமிர்தலிங்கம் மட்டுமல்ல பிரபாகரனும்கூட எஸ் ஜெ வி செல்வநாயகத்தின் தவறான வெறுப்பு அரசியலின் பகடைக்காய்கள்தான்!
திரு அமிர்தலிங்கம் அவர்களின் திராவிட அரசியல் ஈடுபாட்டின் ஒரு சாட்சியாக இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் தடை செய்யப்பட்டபோது அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை திகழ்கிறது
Monday, July 10, 2023
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமைக்கு வேட்டு வைத்த இடதுசாரிகள்
இலங்கையில் இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிபோன வரலாற்றில் மீண்டும் மீண்டும் பச்சை பொய்களையே வரலாறாக கட்டமைக்கிறார்கள்!
உண்மை வெளிவந்தால் பலரின் அரசியலும் சித்தர்களும் நிரந்தரமாக ஆட்டம் கண்டுவிடும் என்ற ஒற்றை நோக்கத்தில்தான் இந்த இருட்டடிப்பு தொடர்கிறது.
1930 களிலேயே இலங்கையில் இனமுரண்ட்பாடுகள் தோற்றம் பெற்றன.
ஆனால் தற்போது எல்லோரும் கூறுவது போல அந்த முரண்பாடுகள் தமிழ் சிங்களம் என்ற ரீதியில் இருக்கவில்லை.
தென்னிலங்கையில் தோட்ட காணிகளை கைப்பற்றிய காலத்துவவாதிகள் அவற்றில் பணியாற்றுவதற்கு தென்னிந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வந்த போதே இந்த முரண்பாடுகள் முளைவிட்ட தொடங்கியது.
Wednesday, June 21, 2023
1933 இல் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவில் புதுசேரிக்கான பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் இருந்து வித்தகம் என்ற பத்திரிக்கை வெளி வந்திருக்கிறது
ராதா மனோகர் : வித்தகம்" என்ற வாரப்பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இருந்து இற்றைக்கு தொண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது.
!933 ஆம் ஆண்டில் இருந்து 1936 ஆம் ஆண்டுவரை மூன்று ஆண்டுகள் தங்குதடையின்றி வெளிவந்திருக்கிறது
இதில் மிக சுவாரசியமான ஒரு செய்தி இருக்கிறது
அன்றைய (பாண்டிசேரி) புதுவை மாநிலத்தின் தனித்தன்மையோடு இப்பத்திரிகை வெளிவந்திருக்கிறது
இப்பத்திரிகை பிரெஞ்சு அரசாங்கத்தின் பதிப்பாகவே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்திருக்கிறது என்பது முக்கியமாக கவனிப்படவேண்டிய வரலாற்று செய்தியாகும்
பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாக இருந்த புதுவையின் ஒரு தமிழ் ./ பிரெஞ்சு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது
பிரெஞ்சு இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருந்த இந்த தொடர்பு பற்றி விரிவான செய்திகள் இன்னும் அறியப்படவில்லை
இப்பத்திரிகை தமிழ்நாட்டில் பதிப்பிப்பதில் எதாவது சிக்கல் இருந்திருக்க கூடும்
ஆங்கில காலனியாக தமிழ்நாடு அப்போது இருந்தமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்
பிரெஞ்சு ஆங்கில காலனி நிலப்பரப்புக்களில் இருந்த முறுகல் நிலையை கருத்தில் கொண்டு இதை நோக்கலாம் என்று கருதுகிறேன்
Thursday, June 1, 2023
துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே மாற்றிய SJV and EMV combo
பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் குடும்பத்தினர் ( விக்கி குடும்பம்) இலங்கை முழுவதையும் ஒரே நாடாகதான் கருதினார்கள்
அதற்கேற்பவே தங்கள் அரசியலையும் வாழ்வியலையும் முன்னெடுத்தார்கள்
இக்குடும்பத்தின் முக்கியமான சொத்துக்கள் தென் இலங்கை முழுவதும் விரவி இருக்கிறது .
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இக்குடும்பத்தினரின் ஆதிக்கம் இன்றுவரை இருக்கிறது
மலையக மக்களின் வாக்குகள் இலங்கையை ஒரு கம்யூனிஸ்டு நாடாக்கி விடும் என்ற நிலைமை இருந்தபோது
டி எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த திரு அருணாசலம் மகாதேவா அந்த கம்யூனிச வாக்கு வங்கியை இல்ல்லாமல் செய்வதில் பெரும்பங்கு ஆற்றினார்
பின்பு சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் திரு ஜி ஜி பொன்னம்பலத்தால் தோற்கடிக்கப்படடார் .
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக மிக மிக நெருங்கிய தொடர்புகள் இருந்த காலக்கட்டம் அது.
அப்போதெல்லாம் இலங்கையின் இந்திய தூதர் பதவி என்பது இலங்கையின் உதவி பிரதமர் பதவிக்கு ஒப்பானது.
அந்த பொறுப்பை திரு அருணாசலம் மகாதேவாவிடமே திரு டி எஸ் சேனநாயக்க ஒப்படைத்திருந்தார்
அடிப்படையில் திரு . அருணாசலம் மகாதேவா அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவராகும்.
Saturday, April 15, 2023
இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்
ராதா மனோகர் : 1957 ஆம் ஆண்டு அகில இலங்கை பகுத்தறிவு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் இருந்து வருகை தந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஒருவர் இந்த படத்தில் இரண்டாவதாக நிற்கிறார். இவரை பற்றி கூறுங்கள் பார்க்கலாம்
இலங்கை முழுவதும் இவர் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார்
யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பகுத்தறிவு சொற்பொழிவு கூட்டத்தின் பின்பு இந்த படம் எடுக்கப்பட்டது .
இக்கூட்டம் பற்றிய செய்திகளும் இவரின் விரிவான பேட்டியும் விரைவில் வரும் ...
படத்தில் முதலாவதாக நிற்பவர் இலங்கை பகுத்தறிவு கழக செயலாளர் திரு த. வேலழகன் . இரண்டாவதாக நிற்பவர் திமுக பிரமுகர் மூன்றாவதாக நிற்பவர் பகுத்தறிவு கழக தலைவர் திரு என் பி ராஜதுரை . நான்காவதாக நிற்பவர் பொருளாளர் திரு சி கண்ணன் அவர்கள்
March 13, 2022
இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்
இலங்கை மண்ணில் 1932 ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஊன்றிய திராவிட விதை!
இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது
Thursday, April 13, 2023
மறைந்த புதுக்கோட்டை எம் எல் ஏ திரு.பெரியண்ணன் .. இலங்கையில் ஆரம்பித்த திராவிட பயணம்.
1953 ஆம் ஆண்டு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் அழைப்பை ஏற்று தமிழ்நாட்டில் இருந்து சிந்தனை சிற்பி சி பி சிற்றரசு ,மற்றும் கிளர்ச்சி பத்திரிகையின் ஆசிரியரான இரா. சு.தங்கப்பழம் ஆகியோர் இலங்கைக்கு வருகை தந்தனர்
இலங்கையில் 30 இற்கும் மேற்பட்ட கூட்டங்களில் பங்கு பற்றி சொற் பொழிவாற்றினார்கள்
(19 ஏப்பிரல் 1953 ) கொழும்பு மாவட்ட தி மு கழகத்தின் சார்பில் கொழும்பு நகரசபை மண்டபத்தில் தோழர் ஆர் ஆர் கே டெய்லர் தலைமையில் சிந்தனை சிற்பி சிற்றரசுவுக்கும் இரா சு தங்கப்பழம் அவர்களுக்கும் பெரும் வரவேற்பு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது
கூட்டம் ஆரம்பிக்க முன்பு ஆயிரக்கணக்கான கழக தொண்டர்கள் கறுப்பு சிவப்பு கொடிகளை உயர்த்தி பிடித்தவண்னம் ஊர்வலமாக சென்றனர்
Tuesday, April 11, 2023
UNP இந்திய பிரச்சனையை தீர்த்தது வெள்ளி ஜனவரி 9 - 1948 UNP solves Indian problem
ராதா மனோகர் : .டி எஸ் . சேனநாயக்கா பண்டிட் ஜவகர்லால் நேரு பேச்சு வார்த்தை வெற்றி!
ஐக்கிய தேசிய கட்சி UNP இந்திய பிரச்சனையை தீர்த்தது வெள்ளி ஜனவரி 9 - 1948 UNP கட்சி செய்தித்தாள்
இந்திய பிரச்சனையை ஐக்கிய தேசிய கட்சி தீர்க்கும்..
நீதி நிலைநாட்டப்படும் மற்றும் தேசிய நலன்கள் பாதுகாக்கப்படும்.
இலங்கையில் இருக்கும் இந்தியப் பிரச்சனையை ஒரே தடவையிலேயே தீர்த்து வைப்பதாக இலங்கை மக்களுக்கு இந்த உறுதிமொழியை பிரதமர் டி எஸ் சேனநாயக்க அவர்கள் நாட்டு மக்களுக்கு வழங்கினார்..
பிரதமர் கௌரவ டி எஸ் சேனநாயக்க அவர்கள் டில்லியில் நடத்திய பேச்சு வார்த்தையின் பயனாக இந்த விடயத்தில் வெற்றிகரமான தீர்மானம் எட்டப்பட்டது.
பண்டிட் ஜவகர்லால் நேருவுடன் திரு டி எஸ் சேனநாயக்க நடத்திய பேச்சு வார்த்தை இலங்கைக்கு மிகவும் திருப்திகாரமான முறையில் நடைபெற்றது
Sunday, April 2, 2023
திராவிட பிரகாசிகை ஆம் ஆண்டு - யாழ்ப்பாணம் திரு சபாபதி நாவலர்!
தமிழ் மொழியின் முக்கியமான இந்நூலின் பெயர் திராவிட பிரகாசிகை
இந்நூலை எழுதியவர் யாழ்ப்பாணம் கோப்பாயை சேர்ந்த திரு சபாபதி நாவலர் அவர்களாகும். .
தற்போது பலரும் இலங்கையில் திராவிடம் என்ற சொல்லே இல்லை
அது என்னவென்று கூட பலருக்கும் தெரியாது என்றெல்லாம் கூறுகிறார்கள்.
வரலாறு தெரியாத ஒரு சமூகத்தை கட்டமைத்ததுதான் இவர்களின் சாதனை இன்றும் கூட தமிழை காவல் காத்து கொண்டிருப்பது திராவிடம் என்ற அடையாளம்தான்
இது வெறும் நிலம் சார்ந்த விடயம் மட்டுமல்ல
ஆரிய ஜாதீயம் நுழைவதற்கு முன்பிருந்த நிலத்தின் அடையாள பெயர் திராவிடம்
Saturday, April 1, 2023
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம் திராவிடன் -9 ஏப்ரல் 1927
ராதா மனோகர் : திராவிடன் -9 ஏப்ரல் 1927 சுன்னாகம்
யாழ்ப்பாணம்
யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்கள் சங்கம் சுன்னாகம்
கீழ்கண்டிருக்கும் கனவான்கள் தாங்கள் இச்சங்கத்தின் போஷகர்களாக இருப்பதற்கு சம்மதப்பட்டு இருக்கிறார்கள்.
1. ஸ்ரீ மான் சேர் அம்பலவாணர் கனகசபை அவர்கள்
2. கௌரவ ஸ்ரீமான் துரைசாமி அவர்கள்.
3. கௌரவ ஸ்ரீ மான் எஸ் ராஜரத்தினம் அவர்கள்
4. கௌரவ ஸ்ரீ மான் தா மு. சபாரத்தினம் அவர்கள்
இப்பொழுது நாங்கள் சங்கம் தொடங்கி ஏறக்குறைய 3 மாதங்கள் ஆகிறது.
பள்ளிக்கூடம் கட்டுவதற்கான அலுவல்கள் நடந்து வருகிறது.. சங்கத்திற்கு புதிய அங்கத்தினர்கள் தொகையாக சேர்க்கிறார்கள்.
சென்ற மாதத்தில் மயிகம்பட்டி, மயிலணி என்னும் இடங்களில் கிளைச்சங்கங்கள் ஏற்படுத்த பட்டன.
அங்கத்தினர்கள் தயவு செய்து தங்கள் மாதாந்த கட்டணங்களை கொடுத்து ரசீது பெற்றுகொள்ளவும்.
சித்திரை மாதம் பள்ளிக்கூடத்திற்கு அத்திவாரம் போடுவதற்கு தீர்மானிக்க பட்டிருக்கிறது.
Tuesday, March 28, 2023
1930 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி : ஒடுக்கப்படும் தமிழரே .. தீண்டா சாதிகளென்று
ராதா மனோகர் : 1930 ஆகஸ்ட் யாழ்ப்பாணம் ஜனதர்ம போதினி
ஒடுக்கப்படும் தமிழரே .. தீண்டா சாதிகளென்று புறக்கணிக்கப்படுவோரே கீழ் சாதிகளென்றும் தாழ்த்தப்பட்டவரென்றும் ஒதுக்கப்பட்டவர்களே
அன்பான சகோதர சகோதரிகளே விழியுங்கள்! எழுந்திருங்கள்!!
உங்கள் காரியத்தை நீங்களே கைகூடப்பண்ணுங்கள்!
ஆவணி மாதம் 1 ஆம் திகதி தொடங்கி புரட்டாதி மாதம் 11 ஆம் திகதி மட்டும் உங்கள் பெயர்களை பதிவு செய்து புதிய சட்டசபைக்கு அங்கத்தவர்களை தெரிவு செய்யும் உரிமையை பாவியுங்கள்
முந்திய காலத்தில் படித்தவர்களும் பணக்காரருக்கும் மாத்திரம் கவுன்சிலுக்கு (சட்டசபைக்கு) தெரியும் உரித்துடையவர்களாக இருந்தார்கள்.
Saturday, March 25, 2023
தமிழரசு கட்சியும் திராவிட இயக்கத்தின் கடவுள் மறுப்பு கொள்கையும்
ராதா மனோகர் : 1952 இல் தந்தை செல்வாவும் அவரின் சம்பந்தி நாகநாதனும் முறையே காங்கேசன்துறை யாழ்ப்பாணம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் இந்த இருவரும் வெறுப்பு அரசியலை விதைத்து இருக்க மாட்டார்கள்
அந்த தோல்வி இருவரையும் ஒரு தவறான அரசியலை முன்னெடுக்க வைத்து விட்டது அந்த தோல்வியில் இருந்து மீள்வதற்கு தமிழ்நாட்டின் இந்தி எதிர்ப்பு போராட்ட பரப்புரைகளை இரவல் வாங்கினார்கள்
அதை அப்படியே சிங்கள எதிர்ப்பாக கூர் தீட்டினார்கள்
திராவிட கோட்பாட்டாளரான திரு எஸ் டி சிவநாயகத்தையும் அவரது நண்பர் செல்லையா ராசதுரையையும் கொழும்பில் திராவிட கழகத்தின் இந்தி எதிர்ப்பு போராட்ட குழு செயலாளராக இருந்த அமிர்தலிங்கத்தையும் முன்னிறுத்தி தமிழ் தேசிய அரசியல் கடையை விரித்தார்கள்
தமிழினத்தின் மொத்த அரசியலையும் நாசமாக்கிய துரோகி என்ற சொல்லை செல்வநாயகம் நாகநாதன் முதல் முதலில் பயன்படுத்தியது திரு ஜி ஜி பொன்னம்பலத்திற்கு எதிராகத்தான்
இதில் இருந்துதான் தமிழினத்தின் சாபக்கேடான துரோக அரசியல் ஆரம்பித்தது!
ஆரம்பித்து வைத்தவர்கள் செல்வா நாகா குழுவினர்!
இவை எல்லாம் பல இடங்களில் ஏற்கனவே எழுதப்பட்டதுதான்
தமிழரசு கட்சி தங்கள் தேர்தல் பிரசாரத்திற்கு தமிழகத்தின் திராவிட முன்னேற்ற கழகத்தையே
முழுக்க முழுக்க நம்பியிருந்தார்கள் என்பதை சுதந்திரன் பத்திரிகையின் பல செய்திகளை முன்பு தந்திருக்கிறேன்
சுதந்திரன் பத்திரிகையில் கடவுள் மறுப்பு பிரசாரத்தை கூட தமிழரசு கட்சியினர் ஒரு மட்டுப்படுத்த பட்ட அளவில் பயன்படுத்தி இருந்தார்கள்.
Sunday, March 12, 2023
யாழ்ப்பாணம் - ராஜேந்திர பிரசாத் வீதி் சுதந்திரன் 1959 :
ராதா மனோகர் : இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இலங்கை விஜயம்
இந்திய வம்சாவளி தமிழன் கழுத்தில் கத்தி
அதே வேளையில் ராஜேந்திர பிரசாத்துக்கு அமோக வரவேற்பு
இருநாட்டின் நல்லுறவு பற்றி இனிப்பான பேச்சு வேற . வேடிக்கை இல்லை?
இந்திய ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஆறுநாள் விஜயத்தை முடித்து கொண்டு கடந்த 22 ஆம் திகதி தாய்நாடு திரும்பிவிட்டார்
நாமும் இந்த சந்தர்ப்பத்தில் நடந்தவற்றை எல்லாம் திரும்பி பார்ப்பது நலம் அல்லவா?
ஜனாதிபதிக்கு இலங்கையில் அளிக்கப்பட்ட மகோன்னதமான வரவேற்பு பிரமாதம் . இலங்கை அரசும் மக்களும் அவருக்கு அளித்த வரவேற்பில் பார்க்க யாழ்ப்பாணத்தில் டாக்டர் ராஜேந்திர பிரசாத்துக்கு அளித்த வரவேற்பு சொல்லும் தரமன்று
இது பற்றி அன்றய சுதந்திரன் பத்திரிகையில் இருந்த கட்டுரையின் சில பகுதிகள் பின்வருமாறு
திராவிட நேசன் ஜூலை 6 - 1928 சுன்னாகம் யாழ்ப்பாணம்
ராதா மனோகர் : திராவிட நேசன் ஜூலை 6 - 1928 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மலாய் நாட்டிலுள்ள யாழ்ப்பாணத்தவர்களால் தமிழரின் நலத்தை நாடி திராவிட நேசன் என்ற பெயருடன் ஒரு தமிழ் வாரப் பத்திரிகையை சமீபத்தில் நடத்த போகிறார்கள்
பங்கு ஒன்றுக்கு ஒரு வெள்ளி ஒன்று வீதம் அறுபதினாயிரம் பங்குகள் கொண்ட 60000 வெள்ளி மூலதனம் உள்ள ஒரு லிமிடெட் கம்பனி மூலமாகவே இப்பத்திரிகை நடைபெறும்.
பத்து பங்குகளுக்கு குறையாமல் பங்குகள் எடுத்து கொள்ளவேண்டும்.
பிராமணரையொழிந்த மற்றையோருக்கே பங்குகள் கிடைக்கும்.
பல கனவான்கள் இதை ஆதரிக்க முன்வந்துள்ளார்கள்.
இதை பற்றி அறிய விரும்போவோர் கோலாலம்பூர் அம்பாள் வீதி 80
திரு ஆர் வி சுப்பையாபிள்ளை அவர்களுக்கு எழுதி பெற்று கொள்ளாலாம்.
1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்- ஸ்ரீ பூ .சின்னத்தம்பி - "பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும்"
பார்ப்பனர் மீதான ஒரு வெறுப்பாக இதை கருதவேண்டாம் என்று அன்போடு வேண்டிக்கொள்கிறேன்
திராவிடன் 1928 ஜனவரி 28 சுன்னாகம் யாழ்ப்பாணம்
மதிப்புரை : ஸ்ரீ பூ .சின்னத்தம்பி அவர்களால் இயற்றப்பெற்ற பார்பனரின் படுமோசமும் பாரத மக்களின் பரிதாபமும் என்னும் சிறிய நூல் வரப்பெற்றோம்
இது மக்கள் யாவருக்கும் இன்றியமையாது வேண்டப்படும் ஒரு முறையை அனுசரித்தே எழுதப்பட்டிருக்கிறது .
பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை எடுத்து காட்டியிருக்கிறது.
தேவையானோர் ஆக்கியோனுக்கு எழுதி பெற்று கொள்ளலாம்.
விலாசம் : பூ சின்னத்தம்பி, வீமன்காமம் யாழ்ப்பாணம்
மொடேர்ன் சப்பிளை கம்பனி . செந்துல் எப் எம் எஸ்
Wednesday, March 8, 2023
ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம் - 1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம்
ராதா மனோகர் : ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம்
1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் கூடிய கல்விமான்கள் உட்பட பெருமளவு மக்கள் கூடிய மன்றத்தில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிரித்தி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது
ஆங்கில அரசின் கல்வி பொறுப்பதிகாரியான திரு எவனாஸ் பிரபு தலைமை வகித்தார்
இந்த சங்கம் அதுவரையில் தமிழ் மொழிக்கு சேவையாற்றி கொண்டிருந்த பலரின் ஆவணங்களையும் ஒழுங்கு படுத்தி பணியாற்றியது
இச்சங்கத்தின் சேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இலங்கை பல்கலை கழகம் அதன் செனெட் சபைக்கு இச்சங்கத்தின் இரு அங்கத்தவர்களை நியமித்தது
சுமார் அரை நூற்றாண்டுகள் இச்சங்கம் தமிழுக்கு அளப்பரிய பணியை ஆற்றியது.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அடிப்படை பண்டிதர் . பால பண்டிதர் மற்றும் பண்டிதர் பரீட்சைகளை நடத்தியது.
பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிட்டது
மற்றும் சங்கத்தினால் நடத்தப்பட்ட வகுப்புக்களை பரீட்சைகள் மூலம் அரும்பணியாற்றியது
தமிழில் பல மட்டங்களில் நடத்தப்பட்ட தமிழ் பண்டிதர்கள் பரீட்சைகளினால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்
சமஸ்கிருதத்தில் சுமார் முப்பது மாணாக்கர்கள் பயன்பெற்றனர்
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சமஸ்கிருதம் பெரிதாக வளரவில்லை
மாறாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றியது
இலங்கையில் தமிழ் ஆசிரியர்கள் பெருமளவு புகழ் பெற்று தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர்
Tuesday, February 21, 2023
திரு அருணாசலம் மகாதேவா! இலங்கையின் உள்நாட்டமைச்சர் - இந்திய தூதர் - மலையக மக்களின் வாக்குரிமை இழப்பு
ராதா மனோகர் திரு அருணாசலம் மகாதேவா 5 October
Arunasalam Mahadeva |
1885 இல் மாத்தறையில் பிறந்தார் 8 June 1969 இல் 83 வயதில் காலமானார்! இவர் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் மகனாவார்
1924–1930 காலப்பகுதிகளில் மேல் மாகாணத்தின் பிரதிநிதியாக Legislative Council of Ceylon Western Province Tamil
பணியாற்றினார்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்தின் பிரதிநிதியாக Member of the State Council of Ceylon 1934–1947 காலப்பகுதிகளில் பணியாற்றினார்.
பிரிடிஷ் அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் காலக்கட்டமான 1942–1946 இல் இலங்கையின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகும்
1947 இல் நடந்த முதல் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் போட்டியிட்டார்
அதே தொகுதியில் போட்டியிட்ட திரு ஜி ஜி பொன்னம்பலம் வெற்றி பெற்றார்
அத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி பெரும்பான்மையை பெறவில்லை . ஆனாலும் பல சுயேச்சை அங்கத்தவர்களின் துணையோடு ஆட்சியை அமைத்தது.
Thursday, February 9, 2023
Alfred Leo Saverimuthu Thambiayah அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா
ராதா மனோகர் : Alfred Leo Saverimuthu Thambiayah அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா (1903 நவம்பர் 8) இலங்கையின் வடக்கே வேலனைதீவு தீவில் உள்ள கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தார்
.இவரது தந்தை ஊர்காவற்துறையில் கப்பல் உரிமையாளராக இருந்தார். ஊர்காவற்துறை, புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவர் 21 வயதில் ஒலிம்பியா சினிமாவை குத்தகைக்கு எடுத்து தனது வணிக வாழ்க்கையை தொடங்கினார்.பின்பு பிரபல வர்த்தகரான சேர் சித்தம்பலம் கார்டினருடன் சேர்ந்து சிலோன் தியேட்டர்ஸ் லிமிடெட் என்ற திரைப்பட விநியோக நிறுவனத்தை நிறுவினார்கள் பின்னர் கார்கில்ஸ் & மில்லர்ஸ் நிறுவனத்தை வாங்கி வர்த்தகத்தை விரிவாக்கினார்கள் பின்னர் 1936 ஆம் ஆண்டு ஹாரி மற்றும் ஜான் காஸ்மாஸிடமிருந்து சரக்கு படகு டிஸ்பாட்ச் கம்பெனி என்ற கப்பல் நிறுவனத்தை வாங்கினார்கள். .
கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே வணிகத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இவர்களின் தொழில் சாம்ராஜ்யம் வளர்ந்தது <1947 br="" nbsp=""> அரசுக்கு சொந்தமான கொழும்பு துறைமுக அதிகாரசபையுடன் அவரது சரக்கு கப்பல் அனுப்பும் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், தம்பையா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறி சட்டப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.