![]() |
ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
ஈழப்போராட்டம் தனது முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை ராணுவம் போராளிகளை போர் முனையில் தோற்கடித்து விட்டால் பின்பு இலங்கையை கேள்வி கேட்க இந்தியாவால் முடியாது என்ற நிலையே அன்று இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு இலங்கையில் காலூன்ற முடிவெடுத்தது.

1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது அத்துமீறி பறந்தன
அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகளை யாழ்ப்பாணத்தில் போட்டன.




















