ராதா மனோகர் : Saturday Review : If a man J.R. Jeyavardana threw out of parliament can be shot like this, where does that leave us?
dont we know who did this? Can you hide a pumkin in a bowl of rice?
1985 செப்டம்பர் 5 ஆம் தேதி இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள்
![]() |
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள்
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின் தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள்
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.
அல்லது இயக்கங்களை முன்னே தள்ளி தங்கள் காரியத்தை முடித்து கொள்ள விளைந்த அந்நிய சக்திகளை சந்தேக படலாம்.
நீண்ட காலமாக பலரும் குழம்பி போயிருந்த விடயம் இது.
இந்த கொலைகள் பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது இது ஒரு ஆழ்ந்த சதி என்று கூறி உள்ளார்
மேலும் அவர் , ஆலால் தர்மர் கொலையுண்ட நேரம் சூழ்நிலை ஆகியன ஒரு ஆழ்ந்த சதி முயற்சியை குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வுக்கான நகல் யோசனைகளை பரிசீலிக்க இலங்கை அமைச்சரவை கூடியபோது இவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




















