ராதா மனோகர் : வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர்
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார்
அது ஓரளவு பயனளித்தது ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை
அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு ..பாவம்
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும்
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன்
புலிகள் இவரின் திறமையை இவரின் செல்வாக்கை இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள்
உலகில் எவருக்குமே உண்மையாகவோ விசுவாசமாகவோ இருந்து பழக்கப்படாத புலிகள் இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள்
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும் தாராளமாக வழங்கினார்கள்
சுயமரியாதை சமூகநீதி சுயசிந்தனை - HOME
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Monday, June 1, 2026
திமுகவை கைப்பற்ற வைகோவுக்கு உதவிய புலிகள்! பழி தீர்த்துக்கொண்ட வைகோ
Monday, May 18, 2026
யாழ் பொதுசன நூலக தீவைப்பு - வட்டுக்கோட்டை எம்பி தியாகராசா கொலை - யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!
![]() |
யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!
1981 மேமாதம் 30 ஆம் தேதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில்
தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது
யாழ் மேயர் ராஜா விசுவநாதன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்த கூட்டத்தில் பாதுகாப்பு கடமையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்
அங்கிருந்த ஒரு தேநீர் கடை (bench) வாங்கில் நான்கு போலீசார் உட்கார்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கிறார்கள்
எங்கிருந்தோ வந்த சில தமிழ் பயங்கரவாதிகள் அந்த போலீஸ் மீது சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள்.
அதில் புஞ்சி பண்டா என்ற சிங்கள சார்ஜன்டும் கனகசுந்தரம் என்ற தமிழ் சார்ஜன்டும் இறந்து விடுகிறார்கள்
கான்ஸ்டபில்கள் உஸ்மான் குலசிங்க ஆகியோர் மீதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. நல்வாய்ப்பாக அவர்கள் தப்பி விட்டார்கள்.
Sergeant Punchi Banda and constable Kanhagasuntharam died and constables Usman and Kulasinghe were wounded.
தமிழர் விடுதலை கூட்டணியால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த விஷ செடிகள்தான்,
தமிழர் விடுதலை கூட்டணி தேர்தல் ஆயுதங்கள்.
அதிலும் இவர்களில் தலைவராக இருந்தவர் முன்பு தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராக வேறு இருந்தவர்.
இதே நபர்கள் இந்த சம்பவத்திற்கு ஐந்து நாட்கள் முன்பாக (25 மேமாதம் 1981) வட்டுக்கோட்டை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் தியாகராசாவை சுட்டு கொன்றிருந்தார்கள்.
திரு ஆறுமுகம் தியாகராசா அவர்கள் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி அதிபராக இருந்தவர். பின்பு தமிழ் காங்கிரஸ் சார்பில் (1970 இல்) வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தோற்கடித்திருந்தார்.
Tuesday, April 21, 2026
வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!
![]() |
ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில் குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு
இந்த நாடகம் யாழ்ப்பாண சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
அன்றாட வாழ்வியலில் காணப்படும் அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது
கடுமையான விமர்சனங்களையும் கூட நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்! நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை
அதன் காரணமாகவோ என்னவோ இந்நாடகம் மிக ஆரோக்கியமான சிந்தனை மட்டுமே தூண்டி விட்டது எனலாம்!
Sunday, April 19, 2026
திரு ஆலாலசுந்தரம் திரு தர்மலிங்கம் கொலையும் அந்நிய சக்தியின் சதியும்
ராதா மனோகர் : Saturday Review : If a man J.R. Jeyavardana threw out of parliament can be shot like this, where does that leave us?
dont we know who did this? Can you hide a pumkin in a bowl of rice?
1985 செப்டம்பர் 5 ஆம் தேதி இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள்
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள்
![]() |
குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள்
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின் தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள்
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
இயக்கங்களை சந்தேக படலாம்.
அல்லது இயக்கங்களை முன்னே தள்ளி தங்கள் காரியத்தை முடித்து கொள்ள விளைந்த அந்நிய சக்திகளை சந்தேக படலாம்.
நீண்ட காலமாக பலரும் குழம்பி போயிருந்த விடயம் இது.
இந்த கொலைகள் பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள் குறிப்பிடும் போது இது ஒரு ஆழ்ந்த சதி என்று கூறி உள்ளார்
மேலும் அவர் , ஆலால் தர்மர் கொலையுண்ட நேரம் சூழ்நிலை ஆகியன ஒரு ஆழ்ந்த சதி முயற்சியை குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வுக்கான நகல் யோசனைகளை பரிசீலிக்க இலங்கை அமைச்சரவை கூடியபோது இவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tuesday, April 14, 2026
தோழர் வரதராஜ பெருமாளரிடம் இலங்கை குடியுரிமை இருக்கவில்லை
ராதா மனோகர் : இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள் இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது எல்லோரும் அறிந்ததே.
Monday, April 13, 2026
ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்
![]() |
ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
ஈழப்போராட்டம் தனது முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை ராணுவம் போராளிகளை போர் முனையில் தோற்கடித்து விட்டால் பின்பு இலங்கையை கேள்வி கேட்க இந்தியாவால் முடியாது என்ற நிலையே அன்று இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு இலங்கையில் காலூன்ற முடிவெடுத்தது.

1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 4 ஆம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது அத்துமீறி பறந்தன
அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகளை யாழ்ப்பாணத்தில் போட்டன.
Wednesday, March 11, 2026
அருந்ததி ராய்களும் ஆ ராசாவும் ! ஆரிய அருந்ததியும் திராவிட ராசாவும்!
![]() |
![]() |
![]() |
ராதா மனோகர் : உலக புகழ் பெற்ற மனித உரிமை பிரபலமும் எழுத்துலக பிரபலமுமான அருந்ததி ராய் பற்றி முன்பு எழுதியிருக்கிறேன்.
மீண்டும் மீண்டும் அவரை விமர்சிக்க வேண்டுமா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.
ஆனாலும் அவ்வளவு இலகுவாக இந்த குற்றவாளியை தப்ப விட முடியாது என்ற எண்ணமே எனக்குள் மேலோங்குகிறது.
இந்திய இடதுசாரிகள் முற்போக்குகள் பெரிதும் பார்பனிய கோட்பாட்டு பாதுகாவலர்கள்தான்!
இந்த கும்பலுக்கு ஒரு சரியான உதாரணமாக அருந்ததி ராய்தான் எனக்கு தெரிகிறார்.
நுனி நாக்கு ஆங்கிலம், அசல் ஆரிய வெள்ளை நிறம் , இலகுவாக மனதில் நிற்க கூடிய முகம் . சினிமாவுக்கு உரிய முகவெட்டு, மிக சிறந்த கதை சொல்லும் திறமை . போதிய அளவு எழுத்தாற்றல் நல்ல வாசிப்பு, புகழ் பெறக்கூடிய பிரச்சனைகளை கண்டறியும் ஆற்றல் போன்றவை இவர் மீடியாக்களுக்கு எப்போதும் அசல் தீனி போடும் ஆளுமையாக தெரிகிறார்.
இதை விட மிக முக்கியமான விடயம் ஊடகங்களுடனான இவரின் குடும்ப தொடர்புகள் மிக மிக அதிகம்!
இவ்வளவு திறமையும் ஆற்றலும் உள்ள இவர் மீது ஏனிந்த விமர்சனம் என்று பலரும் கருத கூடும்.
Sunday, February 15, 2026
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு! அது ஒரு coding language
சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல . ஆண்களால் மட்டுமே பயன்படுத்தப்பட்ட ஒரு இரகசிய குறியீடு அது ஒரு coding மட்டுமே!
சமஸ்கிருதம் என்பது ஒரு மொழியே அல்ல! அது சாதாரணக் 'கோடு வேர்ட்'தான் என பரபரப்பு ஆய்வுத் தகவல் ஒன்று .மொழி ஆர்வலர்கள் மத்தியில். உலா வருகிறது.!
ஏராளமான கேள்விக் கணைகளைத் தொடுக்கும் அந்த முழு நீளத் தகவல் இதுதான்:
இந்தோ யூரோப்பியன் மொழியியலாளர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்து., ‘சம்ஸ்கிருதம்’ என்ற மொழி எக்காலத்திலும் இருந்ததில்லை என.ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்.!
அதில கூறியிருப்பதாவது :எந்த ஒரு மொழியும் தோன்ற,ஒரு இனம் தேவை..
இனமே இல்லாமல் எந்த மொழியும் தோன்ற முடியாது.
எடுத்துக்காட்டாக ,ஜப்பானியர்கள், ஜ,ப்பானிய மொழியைத் தோற்றுவித்தார்கள்.
அதுபோல் ,தமிழர் தமிழையும் , ஜெர்மானியர் ஜெர்மன் மொழியையும் தோற்றுவித்தார்கள்.
அப்படி சமஸ்கிருதத்தை எந்த இனம் தோற்றுவித்தது?.
இரண்டாவதாக , எந்த ஒரு மொழியும் பேசப்பட்டால்தான் மொழியாகும்! .
அப்படி பேசப்படவில்லையென்றால்... “First, solve the problem. Then, write the code.. அது ‘குறியீடு' எனப்படும் . எந்த இயல்பான மொழியும் பேச்சில் முதலில் தொடங்கி பின்னர் பெரு வளர்ச்சி அடைந்த பின்தான் எழுத்து வடிவம் பெறமுடியும் .
Monday, February 9, 2026
Nallur Kandaswamy Kovil - Declared a Public Temple -
Nallur Kandaswamy Kovil - Declared a Public Temple -
JUDGMENT IN FAVOUR OF Plaintiff
Judgment was delivered on Monday last by Mt. J. C. W. Rock, District Judge, Jaffna, In the well-known Nallur Kandaswamy Temple case instituted by Mr. C.K. Swaminathas of Nallur and six others to have the Temple declared a charitable trust under the Trusts Ordinance. The defendants are the present Manager, Mr. Ragunatha Mappana Mudaliyar and his mother, Ponnuppillai widow of the late Mr. Sangarapillai.
The following are excerpts from the interesting judgment which runs into several closely type written pages:-
This is dispute regarding the Kandaswamy Temple at Nallur. The issues are concerned not only wish the management of the temple, but have reference to the origin and purpose of the foundation of the fabric itself. Several issues have been framed in this ease; and there are three partied to it.
The ------- as members of the public, have availed themselves of the provisions of section 102 of the Trusts Ordinance NO.9 of 1917
Sunday, February 1, 2026
Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks 23- !2 1940
D.S.Senanayake Prime Minister |
Why Indo Ceylon talks failed? Ceylon betrayed by Indians here? Mr.Senanayaka speaks
Congress camp saturday ;
Details about abortive indo ceylon talks at delhi reveals for the first time Mr.D.S.Senanayaka, one of ceylon delegates to delhi. When he spoke as chairman of the reception committee at today's session the Ceylon National Congress at Mirigama Mr.EAP Wijyearatna president elect occupied the chair.
Remarking that the vast number of Indians in ceylon regarded India as their home and
Ceylon only as their place of occupation, Mr.Senanayak specifically mention the tentative proposals which were laid before the Delhi conference as embodying conditions under which the status of indian in ceylon should be determine.
I make bold to say declared Mr.Senanayaake ' that the chief reason why our confrence with the representatives of the Indian Government failed was because fo the poisonous atmosphere already crated by so called indian leaders from Ceylon who are betraying this country"
The vast majority of the Indians in Ceyon have no intention of permanently settling down in Ceylon . They do no bring their families here. They are here only ot earn and make money and take ti away to India" said Mr.Senanayake.
Saturday, January 10, 2026
பாலகிருஷ்ணா மேனன் என்கின்ற RSS சுவாமி சின்மயானந்தா! அரசு காணியை ஆட்டைய போட்டு Ramboda ஆஞ்சநேயர் கோயில்
![]() |
ராதா மனோகர் 1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் .
அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார்
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய பாகிஸ்தான்) Abbottabad என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம் பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
Friday, January 2, 2026
சிங்களரும் தமிழரும் ஒன்றே இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு
![]() |
இலங்கை சிங்கள மக்களின் மரபணு வரலாறு: புதிய ஆய்வுகள் வெளிப்படுத்தும் உண்மைகள் என்ன?
இலங்கைத் தீவானது பல்லாயிரம் ஆண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்கள், மொழிகள் மற்றும் இனங்களின் சங்கமமாகத் திகழ்ந்து வருகிறது.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இந்த அழகிய தீவு,
வரலாற்றின் பக்கங்களில் எப்போதும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது.
இலங்கையின் மக்கள்தொகையில் பெரும்பான்மையாக உள்ளவர்கள் சிங்கள மக்கள் ஆவர். இவர்களின் தோற்றம், வரலாறு மற்றும் இவர்களுக்கும் இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்து பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
மகாவம்சம் போன்ற வரலாற்று நூல்கள் சிங்களவர்களின் தோற்றத்தை வட இந்தியாவுடன் இணைக்கின்றன. அதேவேளையில், புவியியல் ரீதியாக அவர்கள் தென் இந்தியாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள். இந்த இரண்டு கருத்துக்களில் எது சரியானது?
அல்லது இரண்டுமே உண்மையானதா?
என்ற கேள்விகளுக்கு விடை காணும் முயற்சியாக ஒரு புதிய மற்றும் விரிவான மரபணு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Saturday, December 27, 2025
Thursday, December 11, 2025
இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு - இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen -
![]() |
ராதா மனோகர் : இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும் சென்று வரமுடியும்.
நிரந்தரமாக தங்க முடியும்
நிரந்தரமாக தொழில் செய்ய முடியும்
வியாபாரம் செய்ய முடியும் .
கல்வி கற்க முடியும்!
சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது!
விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.
மலையக மக்களின் வாழ்வோடு விளையாடும் சுயநிர்ணய உரிமை கூவல்!
ராதா மனோகர் : இலங்கை மலையக மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சிலர் கூவ தொடக்கி உள்ளார்கள்!
இதன் மூலம் இவர்கள் என்னதான் கூறவருகிறார்கள்?
எஸ்ஜேவி செல்வநாயகத்தின் வெறுப்பு அரசியலின் மற்றுமொரு பக்கவிளைவுதான் இது!
இலங்கையின் 80 வீத பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் வெறுப்பை அறுவடை செய்து வயிறு வளர்க்கும் கும்பலின் கடைந்தெடுத்த கயமை அரசியல் இது!
மலையக சுயநிர்ணய உரிமை என்ற முணு முணுப்புக்கள் அண்மை காலங்களாக கொஞ்சம் உரத்த முழக்கமாக உருமாறுவது தெரிகிறது
துரோகிஸ்தானியர்களின் பணம் இதன் பின்னணியில் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளது!
இலங்கை இன மோதல்களில் ஏழைகளை பலிகொடுத்து திருடர்கள் கோடீஸ்வரர்கள் ஆனதைத்தான் கண்கூடாக பாரிக்கிறோமே!
அந்த பாசிச கூட்டத்திற்கு ஒரு கேள்வி!
மலையக சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
மலையக மக்கள் மலையகத்தில் தனிநாடு கேட்கிறார்களா?
அல்லது வேறு எதாவது நாடு ஒன்றோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்கிறார்களா?
Saturday, November 22, 2025
இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை - வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
Prime Minster Jawaharlal Nehur - Prime Minister D.S.Senanayaka
ராதா மனோகர் : இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான் எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான் எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
Wednesday, November 19, 2025
திருகோணமலை புத்த சிலை - வழிபாட்டு தலமல்ல ..அது ஒரு உணவகம்
ராதா மனோகர் : இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத ஜாதிவாத சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை.
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.
Friday, November 7, 2025
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வந்த சுப்பிரமணியம் சாமி . தடுத்த சந்திரஹாசன்
![]() |
![]() |
ராதா மனோகர் : திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் 10 November 1990 – 21 June 1991 காலப்பகுதியில் இந்திய சட்ட அமைச்சராக பணியாற்றினார்!
இந்தியாவில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான காலக்கட்டம்,
(மேலே குறிப்பிட்ட காலப்பகுதியைவிட மேலும் சில மாதங்கள் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் காபந்து அரசிலும் care taker government அதே பதவியில் இருந்தார்)
அப்போதுதான் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முன்வந்தார்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் திரு எஸ் சி சந்திரகாசனிடம் தெரிவித்தார்.
Sunday, November 2, 2025
சோவியத்தின் ஸ்டோர் ரூம் - டெத் ஆப் ஸ்டாலின் சினிமா விமர்சனம்
![]() |
ராதா மனோகர் : சோவியத் ஸ்டோர் ரூம்!
பிரான்ஸ் பிரிட்டன் ஹாலந்து கூட்டு தயாரிப்பான டெத் ஆப் ஸ்டாலின் திரைப்படம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியானது.
லா மோர்த் து ஸ்டாலின் la mort de staline என்ற பிரெஞ்சு வரலாற்று நாவல் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சோவியத் அதிபர் ஸ்டாலினின் Joseph Stalin மறைவும் அதற்கு பின்பு எப்படி குருஷேவ் Nikita Khrushchev பதவிக்கு வந்தார்.
அதுவும் சர்வ வல்லமை பொருந்திய இரகசிய படை தலைவன் பெரியா NKVD head Lavrentiy Beria ஒரு புறம்
ஸ்டாலினுக்கு எல்லா விதத்திலும் இரண்டாவது இடத்தில் இருந்த மலங்கோவ் Deputy Chairman Georgy Malenkov போன்றவர்களையும் மெதுவாக ஒதுக்கி தள்ளிவிட்டு மேலே வருவது என்பது திகைப்பையும் திகிலையும் ஊட்டும் சம்பவமாகும்.
![]() |
ரேசர் பிளேட்டின் மீது நடப்பது போன்ற சாகசம் அது.
கொஞ்சம் தவறினாலும் தலை போய்விடும்
அப்படித்தான் குருஷேவ் அதிபர் பதவியை நோக்கி மேலே நடந்து வரும்போதே பெரியா இதர கூட்டாளிகளால் போட்டு தள்ளப்பட்டார்
அவரோடு அதுவரை கூட இருந்து (ஒரு சமாந்திர அதிகார பீடத்தின்) சோவியத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருந்தவர்களும் போட்டு தள்ளப்பட்டார்கள்.

















