![]() |
![]() |
ராதா மனோகர் தமிழ் பல்கலை கழக இயக்கம் வளர்ந்த வரலாறு!
1956 ஆம் ஆண்டில் தனிச்சிங்கள சட்டம் நிறைவேற்றப்படட சூழ்நிலையில் இலங்கையில் தமிழ் பேசும் மக்களுடைய கலை கலாச்சாரத்தை பாரம்பரியத்தை சிதைத்து அவர்களுடைய தனித்தன்மையை அழித்து அவர்களை வேரோடு ஒழித்துகட்ட இந்த நாட்டிலே அன்று ஆட்ச்சிக்கு வந்தவர்கள் முனைந்து நின்ற வேளையிலே இந்த நாட்டிலே உள்ள தமிழ் பேசும் மக்கள் தமக்கு ஒரு அரசியல் இயக்கம் மாத்திரம் போதாது தமிழு பண்பாட்டை கலையை கலாச்சாரத்தை பேணிக்காக்க பூரணத்துவம் பெற்ற ஒரு பல்கலை கழகமும் அவசியம் வேண்டுமென்று எண்ணினார்கள்
இயக்கம் தொடங்கியது
இப்படி எண்ணியவர் ஒரு பல்கலை கழக இயக்கத்தையும் ஆரம்பித்தார்கள்
வட்டுக்கோட்டை பாராளுமன்ற உறுப்பினர் திரு அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் அவர்கள் மேலும் பேசும்பொழுது ,
இது எங்கள் கட்சியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு இயக்கம் அல்ல.
பல்கலை கழக பேராசிரியர்களாக இருந்த பேராசியர் சின்னத்தம்பி பேராசியர் எலியேசர் பேராசிரியர் மயில்வாகனம் அவர்கள் .
இன்று மலேசிய பல்கலை கழகத்தில் பேராசியாராகஇருக்கின்ற வணக்கத்திற்குரிய தனிநாயகம் அடிகளார் போன்றவர்கள்.

















