Monday, June 1, 2026

திமுகவை கைப்பற்ற வைகோவுக்கு உதவிய புலிகள்! பழி தீர்த்துக்கொண்ட வைகோ

 ராதா மனோகர் : வைகோ ஒரு அயோக்கியர் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை 
ஆனால் அவரின் புத்திசாலித்தனத்தை என்னால் மெச்சாமல் இருக்கவும் முடியவில்லை 
இவர் ஒரு அசல் ஆர் எஸ் எஸ் காரர் 
திராவிட இயக்கத்திற்குள் ஊடுருவிய சனாதனவாதி 
தனது சுயரூபத்தை மறைத்து புலிகளோடு உறவு கொண்டாடி அவர்களை மிக சரியாக இனம் கண்டு பயன்படுத்தினார் 
அது ஓரளவு பயனளித்தது   ஆனாலும் அதன் முழு பயனை இவர் அடையவில்லை 
அந்த சோகம் வாழ்நாள் முழுவதும் இவருக்கு உண்டு ..பாவம் 
புலிகளை பயன்படுத்தி திமுகவை கைப்பற்றும் முயற்சி ஓரளவு வெற்றி பெற்றது என்றுதான் கூறவேண்டும் 
அந்த முயற்சிக்கு புலிகளின் பூரண ஒத்துழைப்பை இவர் பெற்றுக்கொண்டமை இவரின் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றி என்று எண்ணுகிறேன் 
புலிகள் இவரின் திறமையை இவரின் செல்வாக்கை இவரின் விசுவாசத்தை எல்லாம் பூரணமாக நம்பினார்கள் 
உலகில் எவருக்குமே உண்மையாகவோ விசுவாசமாகவோ இருந்து  பழக்கப்படாத புலிகள் இவரிடம் உண்மையிலேயே விசுவாசமாகவே நடந்து கொண்டார்கள் 
தங்கள் கஜானாவையும் விளம்பர வெளிச்சத்தையும்  தாராளமாக வழங்கினார்கள்