ராதா மனோகர் : 1965 ஆண்டு தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் பெரும்பான்மையை தரவில்லை
ஐக்கிய தேசிய கட்சியும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியும் ஏறக்குறைய சம பலத்தில் வெற்றி பெற்றிருந்தன.
இந்நிலையில் ஸ்ரீமாவோ அம்மையாரும் டட்லி சேனாநாயவும் தமிழரசு கட்சியின் (14ஆசனங்கள்) ஆதரவை கோரினார்கள்.
தமிழரசு கட்சியினர் ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவை கொடுத்தார்கள் அதற்கு ஏதோதோ காரணங்களை கூறினார்கள் பின்பு வழமை போல ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றி விட்டதாக கூறி வெளியே வந்தார்கள்
இது தமிழ் தேசிய அரசியலின் வழமையான விக்டிம் டிராமாதான்
ஆனால் உண்மையான காரணம் வேறு!
தமிழரசு கட்சி டட்லியோடு சேர்ந்து ஆட்சி அமைந்ததற்கு முக்கிய காரணம் அவர்கள் அப்போது திரு அல்பிரட் துரையப்பாவின் வளர்ச்சியை பார்த்து மிரண்டு போயிருந்ததுதான்.
1965 இல் ஸ்ரீமாவோடு சேர்ந்து ஆட்சி அமைத்திருந்தால் அப்போதே யாழ்ப்பாண பல்கலை கழகத்தை ஸ்ரீமாவோ அம்மையார் நிறுவியிருப்பார்.
ஏனெனில் ஏற்கனவே அவர் யாழ் எம்பி திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ்ப்பாண பல்கலை கழக கோரிக்கைக்கு சம்மதம் தெரிவித்து ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை (1964) எடுத்திருந்தார்
கல்வி அமைச்சர் பதியுதீன் மொகமத்தை திரு அல்பிரட் துரையப்பாவோடு ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் பார்த்து அவரை பல்கலை கழகத்திற்கு ஏற்றவைதானா என்று அறிந்து கொண்டார்.
யாழ்ப்பாண பல்கலை கழகம் நிச்சயம் வரும் ஆனால் அதன் பெயர் புகழ் எல்லாம் திரு அல்பிரட் துரையப்பாவுக்கே போய் சேரும் என்று செல்வநாயகம் கோஷ்டியினர் பயந்தனர்.