Friday, July 31, 2020

16-08-1983-ல் அன்னை இந்திரா காந்தி மாநிலங்களவையில் ஆற்றிய உரை

அன்னை இந்திரா ஆற்றிய உரை   : 
துணை தலைவர் அவர்களே! நான் பாராளுமன்றத்தில் இறுதியாகப் பேசிய பின், இலங்கைப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், இலங்கைத தமிழ் மக்களின் பிரதான அரசியற் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆன திரு.  அமிர்தலிங்கம் யாழ்ப் பாணத்திலிருந்து டெல்லி வந்தார்.
அவர் என்னைச் சந்தித்தார். வெளி நாட்டு அலுவல்கள்
திரு அமிர்தலிங்கம் தம்பதிகள்
அமைச்சருடனும், ஏனைய அமைச்சர்கள் வெவ்வேறு கட்சிகளைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடனும் பேசினார்.
இலங்கையில் சிறுபான்மைச் சமூகம் மிருகத்தனமான தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டதைப் பற்றி நெஞ்சைத் தொடும் விவரங்களைத் தந்திருக்கிறார். இங்கு பேசிய உறுப்பினர்கள் போலவே நான் தனிப்பட்ட முறையிலும், எனது அரசாங்கமும் எனது கட்சியும் ஆழ்ந்த வேதனை அடைந்துள்ளோம். இலங்கையில் தமிழர்களுக்கு இழைக்கப்படுகிற இனக்கொலை, துன்பம், அந்தி ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். ஆனால் எமது உணர்ச்சி எவ்வளவு ஆழமாக இருந்தாலும் அரசாங்கம் கூடிய கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டி இருக்கின்றது.
ஏனெனில் நாம் விருப்பமின்றியோ தயக்கமாகவோ, இருப்பதால் அல்ல, ஆனால் நாம் ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும் போதும் எமது சொற்கள், எமது செயல்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு உதவியாக இருக்குமா இன்றேல் தீமை பயக்குமா என்று யோசிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம்.
இந்த இடத்தில், இலங்கையில் தனக்கு மனக் கவலையும் வெறுப்பும் ஏற்பட்ட போதும், என்னுடனும் ஏனையோருடனும் நடந்த உரையாடல்களில் திரு. அமிர்தலிங்கம் காட்டிய அரசியல் ஞானத்திற்கு என் உயாந்த பாராட்டை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
தனது கட்சியின் சார்பில் எமது நல்லெண்ணச் சேவையைத் திரு அமிர்தலிங்கம் வரவேற்றுள்வார்.

இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 1 .. (செல்வா ஈட்டிய செல்வம்)

இலங்கை முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்  அமரர் திரு.  அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் :
இலங்கை - இந்திய  ஒப்பந்தம் வந்த வரலாறு 1
இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் 1987 ஆக 29-ஆம் திகதி செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் உலகில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அவசரத்தில் செய்யப்பட்ட உடன்படிக்கை என்று இந்தியாவிலும், இலங்கையிலும் அரசாங்கங்கள் மீது குற்றங்காண விரும்பும் பலர் கூறுகின்றனர். இலங்கைத் தமிழ் மக்களைப் பாதிக்கும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திடுமுன் சம்பந்தப்பட்ட தமிழ் மக்கள் கலந்து
ஆலோசிக்கப்படவில்லை. என்று சிலர் குற்றஞ் சாட்டுகின்றனர். இவற்றில் உண்மையுண்டா என்று புரிந்து கொள்வதற்கு ஒப்பந்தம் வந்த வரலாற்றை அறிவது அவசியமாகும்.
இந்தியாவும், இலங்கையும் ஆங்கில ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றபின் இலங்கை அரசு தனது நாட்டுக் குடியுரிமையை வரையறுக்கும் சட்டங்களை ஆக்கமுற்பட்டது. 1948 ஆகஸ்டில் நிறைவேற்றப்பட்ட இலங்கைக் குடியுரிமைச் சட்டமே இரு நாடுகளுக்குமிடையில் பிணக்கை
ஏற்படுத்துவதாக அமைந்தது. அச்சட்டத்தினால் இந்திய வம்சாவழியினரான மலைநாட்டுத் தமிழ்த்தொழிலாளர் பத்து லட்சம் பேரும் நாடற்றவர் ஆக்கப்பட்டனர். இலங்கையின் பூர்வீகக் குடிகளான தமிழ் மக்களும் தமிழ் பேசும் இஸ்லாமிய மக்களும் சந்தேகப் பிரஜைகளாக்கப்பட்டனர். குடியுரிமை பறிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளரின் நிலை பற்றி இரு நாட்டு அரசுகளுக்குமிடையில் நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வி கண்டது. பாரதப்பிரதமர் பண்டித நேருவின் சம்மதத்தைப் பெறாமலே இந்திய பாகிஸ்தானிய குடியுரிமைச் சட்டம் 1948 டிசம்பரில் இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972.. இலங்க- இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 2

மணவை தம்பி  -அமிர்தலிங்கம் - கலைஞர் - மங்கையர்கரசி அமிர்தலிங்கம்
அமரர் . அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்:
தந்தை செல்வாவின் தமிழ் நாட்டு வருகை- 1972.  தமிழ் மக்களுக்கு
இழைக்கப்பட்ட கொடுமைகளுக்குச் சிகரமாக ஒரு புதிய அரசியல் அமைப்பை யாத்து, முந்திய அரசியல் அமைப்பில் ஆங்கில ஆட்சி சிறுபான்மையோருக்கு வழங்கிய பாதுகாப்புக்களையும் பறிக்க இலங்கை அரசு முற்பட்டது. வங்க மக்களுக்குப் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி போரில் இறங்கி அவர்களுக்கு விடுதலை பெற்றுத் கொடுத்த சம்பவம் இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஓர் புது நம்பிக்கையைக் கொடுத்தது.
கிழக்கு வங்காளத்திற்குச் சார்பாக இந்தியா செயல் படுவதற்குத் தூண்டுகோலாக அமைந்தது. மேற்கு வங்கம் பொங்கி எழுந்து இந்தியா அரசுக்கு ஏற்படுத்திய நிர்பந்தமே. அதே போல் இலங்கைத் தமிழ் மக்களுக்காக இந்தியா குரல் கொடுக்கச் செய்வதற்குத் தமிழ் நாடு பொங்கி எழ வேண்டும் என்று கண்டோம்.
1972 பிப்ரவரியில் என்னையும் அழைத்துக் கொண்டு தமிழ் நாடு வந்தார்தந்தை செல்வநாயகம். டாக்டர் இரா. ஜனார்த்தனம், மறைந்த திரு ஆ. இராசரத்தினம், திரு மணவைதம்பி ஆகியோர் முதலமைச்சர் திரு. கருணாநிதி அவர்கள் முதல் எல்லா அமைச்சர்களையும் தந்தைப் பெரியார், பெருந்தலைவர் காமராஜர், சிலம்புச் செல்வர் ம. பொ. சி, காயிதே மில்லத், அன்று தி.மு.க . பொருளாளராக இருந்த திரு.எம்.ஜி.ஆர் போன்ற அரசியல் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் முதலிய எல்லோரையும் பார்த்து இலங்கையில்தமிழ் மக்களின் வரலாறு, இன்று எழுந்துள்ள பிரச்சனைகள், அவை தீர எமது கோரிக்கைகள் ஆகியவற்றை விளக்கவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தனர். "புதுடெல்லி செல்ல வேண்டும், பாரதப் பிரதமரைப் பார்த்து வங்க தேச மக்களின் உரிமைக்கு உதவியது போல ஈழத்தமிழ் மக்களுக்கும் உதவிடக் 'கோர வேண்டும்", என்று தந்தை செல்வா விரும்பினார். ஆனால் அதற்கான வாய்ப்போ, வசதியோ அவருக்கு ஏற்படவில்லை.

பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசின் கொள்கை. - இலங்கை இந்தியா ஒப்பந்தம் வந்த வரலாறு 3

பிரதமர் மொரார்ஜி தேசாய்
அமரர் திரு. அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் ( தமிழர் விடுதலை கூட்டணி பொதுசெயலாளர் ,முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்)
 பிரதமர் மொரார்ஜி தேசாய் அரசின் கொள்கை.
 1977-ம் ஆண்டு இலங்கையில் ஜயவர்த்தனா அரசும் டெல்லியில் மொரார்ஜி தேசாய் அரசும் ஆட்சிக்கு வந்தன. இரண்டும் வலதுசாரி அரசுகள். இரு
பிரதமர்களுக்குமிடையில் கருத்தொற்றுமையும் நட்புறவும் நிலவியது. 1978-இல் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் மொரார்ஜி
தேசாயை, எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான் பார்த்து இலங்கைத் தமிழரின் நிலை, 1977-ம் ஆண்டு நடைபெற்ற தமிழருக்கு எதிரான தாக்குதல்கள், நாம் தமிழ் ஈழம் கோருவதற்கான காரணங்கள் ஆகியவற்றை விளக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
இதனால் 1979-ல் நானும் என் மனைவியும் தமிழ் நாட்டுக்கும் டெல்லிக்கும் சென்ற போது அரச விருந்தினராக வரவேற்கப்பட்டோம். தமிழ் நாடு முழுவதும் எல்லா கட்சியினராலும் வரவேற்கப்பட்டு லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் எம் நிலையை எடுத்து விளக்கும் சந்தர்ப்பத்தைப் பெற்றோம்.
 புதுடெல்லி சென்று பிரதமர் மொரார்ஜி தேசாயையும் மற்றும் அமைச்சர்களையும் பார்த்துப் பேசினேன். அவர் அப்போது ஆச்சரியமான ஓர் யோசனையை வெளியிட்டார்.இலங்கை அரசுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் எழுந்துள்ள பிரச்சனையில் தான் மத்தியஸ்தம் செய்யத் தயாராய் இருப்பதாகக் கூறினார்.

1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி! .. இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 4

அமரர் .திரு .அப்பாபிள்ளை அமிர்தலிங்கம்:
1980-ல் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சி: திருமதி இந்திரா காந்தி 1980-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் பிரதமராக வந்தார். அவரைச் சந்தித்து ஏறத்தாழ இரண்டு மணித்தியாலம் உரையாடும் வாய்ப்புக் கிடைத்தது.
எம்.சிவசிதம்பரம் MP
அவர் தமது அனுதாபத்தை வெளிப்படையாகவே கூறினார். ஆக்க பூர்வமான பல ஆலோசனைகளையும் தந்தார். 1981 82-ஆம் ஆண்டுகளிலும் அவரையும் அவருடைய அரசின் வெளியுறவு அமைச்சராக இருந்த திரு. நரசிம்மராவ் அவர்களையும் சந்தித்து விரிவாகப் பேசினேன். இதற்கிடையில் இலங்கை அரசின் அடக்கு முறையினால் இலங்கையை விட்டு வெளியேறி தமிழ்நாட்டில் வாழத் தொடங்கிய தீவிரவாத தமிழ் இளைஞர்களின் பிரச்சாரங்களும், செயற்பாடுகளும் தமிழ் நாட்டில் ஈழத்தமிழர்களின் துன்பங்களை ஒட்டி ஆழ்ந்த அனுதாபத்தையும் உணர்ச்சி வேகத்தையும் ஏற்படுத்தின.
1981-ஆம் ஆண்டு யாழ் நூலகம் எரிக்கப்பட்டதும், தமிழ் நாட்டிலிருந்து கதிர்காம யாத்திரை வந்த தனபதியின் கொலை போன்ற சம்பவங்களும் தமிழ் நாட்டு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தத் தொடங்கின. 1972-ஆம் ஆண்டு தந்தை செல்வநாயகம் பெற விரும்பிய தமிழ்நாட்டு மக்களின் உணர்ச்சி பூர்வமான ஆதரவும், மத்திய அரசின் அனுதாபமும் 1982-ஆம் ஆண்டில் பூரணமாக எமக்குக் கிடைக்கத் துவங்கின. 
இலங்கை அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கை இந்த நிலைப்பாட்டை மேலும் உறுதி செய்வதாக அமைந்தது. திருகோணமலையில் ஆங்கிலேயர் விட்டுச் சென்ற எண்ணெய்க் கொள்கலங்களை ஓர் அமெரிக்க நிறுவனத்திற்குக் குத்தகைக்குவிட இலங்கை அரசு மேற்கொண்ட முயற்சியைப் பாராளுமன்றத்தில் எமது உறுப்பினர்கள் அம்பலப் படுத்தினர். இதன் விபரங்களை இந்திய அரசுக்குத் தெரியப் படுத்தினோம். இந்துமாக்கடல் அமைதிப் பிராந்தியக் கொள்கைக்கு எ திராக இலங்கை அரசு செயல்படுகிறது என்ற கருத்து இந்தியாவில் வளர்ந்தது.

டெல்லியில் உலகின் கவனத்தை தமிழர் பக்கம் திருப்பிய பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் ..... இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 5

அமரர் அப்பாபிள்ளை  அமிர்தலிங்கம்  ( இலங்கை முன்னாள் எதிர்கட்சி தலைவர்)
இந்த சூழ்நிலையில் இலங்கைக்குத் தன் வெளிநாட்டு அமைச்சர் திரு.
நரசிம்மராவ்   அவர்களை அனுப்பினார் பாரதப் பிரதமர் திருமதி இந்திரா
காந்தி. ஜூலை 29-ந் திகதி இந்திய அமைச்சரின் வருகைக்குப் பின் தான்
ஜனாதிபதி ஜயவர்த்தனா நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தார். இதைத் தொடர்ந்து இந்திரா அம்மையாரைத் திருப்திப் படுத்துவதற்காக       தன் சகோதரர் திரு. எச். டபிள்யூ. ஜயவர்த்தனாவை டெல்லிக்கு அனுப்பிவைத்தார். இச்சந்தர்ப் பத்தில் தான் பாரதப் பிரதமர் இலங்கையின்

A.Amirthalingam - M.Sivasithambaram MP
இனப்பிரச் சனையைத் தீர்ப்பதற்கு இந்தியாவின் நல்லெண்ணச் சேவையை நல்க, முன்வந்தார். ஜனாதிபதியோடு தொலை பேசியில் தொடர்பு கொண்டு
பேசியபின் இலங்கை  அரசு அச்சேவையை ஏற்றுக்கொள்வதாகத் திரு. எச். டபிள்யூ. ஜயவர்த்தனா அறிவித்தார். தமிழ் மக்களின் உண்மை நிலையைப் பாரதப் பிரதமருக்கு எடுத்து விளக்குவதற்காக  நான் டெல்லி செல்ல வேண்டுமென்று நமது மக்களில் பலர் கேட்டுக் கொண்டதன் பேரில் நான் மாறுவேடத்தில் கொழும்பு சென்று ஆகஸ்ட் 13-ந் திகதி தமிழ் நாடு வந்து சேர்ந்தேன்.
மக்கள் துன்பப்பட அவர்களைக் கைவிட்டு என்னைக் காத்துக் கொள்ள நான் இந்தியா வரவில்லை. இந்தியாவின் உதவியோடு ஏற்கனவே நாம் பாரதப் பிரதமரோடு சில ஆண்டுகளாக ஏற்படுத்திய தொடர்பைப் பயன்படுத்திக், காலத்திற்குக் காலம் பலிக்களத்தில் நிறுத்தப்படும் இலங்கை தமிழ் மக்களின் இன்னலுக்கு ஓர்  நிரந்தரத் தீர்வுகாண வேண்டுமென்னும் ஒரே உறுதியோடுதான் இந்தியா வந்தேன்.

இந்திய மாநிலங்களுக்கு இணையான அதிகாரம் .... இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 6

   அமரர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் :
16-ந் திகதி டெல்லியில் 200-க்கும் மேற்பட்ட அகில உலக

அமரர் .நீலன் திருச்செல்வம்
பத்திரிகையாளர்களை கொண்ட ஒரு மகாநாடு கூட்டப் பட்டது. பல மணித்தியாலங்கள் அவர்கள் கேள்விகளுக்கெல்லாம் விடையளித்து எமது பிரச்சனையையும், அதற்கான பரிகாரத்தையும் பாரறியச் செய்ய ஒரு வாய்ப்பை இந்திய அரசே ஏற்படுத்தி கொடுத்தத. அப்பத்திரிகையாளர் மகாநாட்டுக்கு டாக்டர். நீலன் திருச்செல்வம் தலைமை தாங்கினார். அதே தினம் ராஜ்யசபையில் திருமதி இந்திரா காந்தி பேசும்போது இலங்கையில் இனக்கொலை (Genocide) நடப்பதாகக் கூறி உலகின் முன் இலங்கையை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தினார். டெல்லியிலிருந்து சென்னை திரும்பிய அன்றே கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு சட்டமன்ற சபாநாயகர் திரு. ராஜாராம் தலைமையில் நான் ஆற்றிய உரை பொதுநல நாடுகளின் பாராளுமன்றக் குழுக்கள் எல்லாவற்றிற்கும், தமிழ்நாடு சட்டமன்ற குழுவின் சார்பில் அதன் தலைவர் என்ற முறையில், திரு. ராஜாராம் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டது. இப்படியே உலக நாடுகளுக்கெல்லாம் எம் நிலையை விளக்க நாம் எடுத்த முயற்சி, மக்கள் துன்பப்பட ஓடிப் பதுங்கும் செயலா, அல்லது துன்பம் துடைக்க இந்திய உதவியை, அதற்கு உலகின் ஆதரவை திரட்டும் முயற்சியா? என்பதை நம்மக்கள் நிச்சயம் அறிந்தே இருக்கின்றனர்.

பிரதமர் இந்திரா காந்தி ஜே ஆர் ஜெயவர்தனாவோடு பல மணித்தியாலங்கள் ஆலோசனை .. இலங்கை - இந்தியா ஒப்பந்தம் வந்த வரலாறு .. 7

திரு.அ. அமிர்தலிங்கம : உலக நாடுகளில் இலங்கைத் தமிழர் பிரச்சனை:
நாம் டெல்லி திரும்பியபோது மேற்கு நாடுகளுக்குச் சென்று இலங்கையில் நடக்கும் இனக்கொலையை நாம் விளக்க வேண்டுமென்று திருமதி காந்தி கூறிய ஆலோசனையை ஏற்று, நான் இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே, அமெரிக்கா, கனடா முதலிய நாடுகளுக்குச் சென்றேன்.
அந்த நாடுகளின் வெளிநாட்டு அமைச்சுகளோடு, அரசியல் தலைவர்களோடு உரையாடினோம். ஐ. நா. சபைக்குத் திருமதி காந்தி சென்றிருந்தார். அங்கு எல்லா நாட்டுத் தலைவர்களோடும் எமது பிரச்சனையை அவர் எடுத்துப் பேசினார்.
அவருடன் ஐ. நா. சபைக்குச் சென்றிருந்த திரு.பார்த்தசாரதியின் அழைப்பின் பேரில் நானும் நியூயோர்க்கில் அவர்களோடு சேர்ந்தேன்,
இந்தியத் தூதுக் குழுவில் இடம் பெற்றிருந்த தமிழ் நாட்டு அமைச்சர் திரு. எஸ். இராமச்சந்திரன் ஐ.நா. சபையில் எமது நிலையை எடுத்து விளக்கினார். இந்த நாலு ஆண்டுகளில் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்கள் எத்தனை நாடுகளுக்கு எத்தனை பயணங்களை மேற்கொண்டு அரசியல் தலைவர்களோடு, பத்திரிகை, வானொலி, தொலைகாட்சி ஆகிய மக்கள் தொடர்புச் சாதனங்களோடு, மனித உரிமை இயக்கங்களோடு தொடர்பு கொண்டனர். பல்கலைக்கழகங்கள் கருத்தரங்குகள், மாநாடுகள் ஆகியவற்றில் எத்தனை தடவை உரையாற்றினர் என்பதை உணர்ந்தால் எமது மக்கள் துன்பப்பட நாம் உறங்கிக் கொண்டிருந்தோம் என்று எவராவது
கூறத்துணிவார்களா?

பிரதமர் இந்திரா காந்தி மறைவு! .இலங்கை - இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 8

பிரதமர் இந்திரா காந்தி  (November 19, 1917 - October 31, 1984  -

(அமிர்தலிங்கம் August 26, 1927 - July 13, 1989).
திரு அ .அமிர்தலிங்கம் :அப்போதே நாம் சர்வகட்சிக் கூட்டத்திலிருந்து வெளி நடப்புச் செய்யப் போவதாக இந்தியாவிற்கு தெரிவித்தோம். தொடர்ந்து  முயற்சி செய்யுமாறு திரு. பார்த்தசாரதி கேட்டுக் கொண்டபடி நாம் அங்கு தொடர்ந்தோம். தீர்வுகாண வேறு திட்டங்களைத் திருமதி காந்தி யோசித்துக் கொண்டிருந்த போது பஞ்சாப் பிரச்சனை வெடித்தது. திருமதி இந்திரா காந்தியின் உயிரைக் குடித்தது. விதிகெட்ட தமிழன் கதியற்றுப் போனான். இந்தப் பயங்கரப்படுகொலை நடந்திராவிட்டால் வரலாறே வேறுவிதமாக இருந்திருக்கும்.
அன்னை இந்திராவின் மரணச் சடங்கின் அடுத்த நாளே திரு. ராஜீவ் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தோம்.
எனது அன்னை உங்கள் பிரச்சனையில் என்ன கொள்கையைக் கொண்டிருந்தாரோ அதையே நானும் பின்பற்றுவேன், உங்களைக் கைவிடமாட்டேன்" என்று உறுதி கூறினார். சர்வ கட்சிக் கூட்டத்தில் தொடர்ந்து பங்கு பெறுமாறு அவரும் திரு. பார்த்தசாரதியும் கேட்டுக் கொண்டபடி தொடர்ந்து கலந்து கொண்டோம். நாம் ஏற்கமுடியாத திட் டத்தை திரு. ஜயவர்த்தனா முன் வைத்தபோது அதை நிராகரித்தோம். சர்வகட்சிக் கூட்டமும் முடிவுக்கு வந்தது. எமது முயற்சிகளை முதலிலிருந்து மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்தியப் பொதுத் தேர்தல்:
பிரதமர் பதவியை ஏற்றவுடன் திரு. ராஜீவ் காந்தி மக்கள் அங்கீகாரத்தைப் பெறுவதற்காகப் பொதுத் தேர்தல் நடத்தினார். அமோக வெற்றி பெற்றார். தேர்தல் முடிந்த சில நாட்களில் மீண்டும் பிரதமரைச் சந்தித்தோம். எமது விடையத்தில் இந்திய அரசாங்கதின் கொள்கையில் மாற்றம் இருக்க மாட்டாது என்று உறுதியளித்ததோடு ஆக்கப்பூர்வமான சில யோசனைகளையும் திரு. ராஜீவ் காந்தி தெரிவித்தார். அச்சந்திப்பைத் தொடர்ந்து தமிழ் இன விடுதலைக்காக உழைக்கும் எல்லா இயக்கங்களையும் ஒன்று சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோம். ஒரு இயக்கம் தவிர ஏனைய இயக்கங்களை 1985 பிப்ரவரி 28-ஆம் திகதி ஓர் இணைப்புக் குழுவில் ஒன்றுபடுத்திச் சேராதிருந்த இயக்கத்திற்கு எல்லோரும் கையொப்பமிட்டு ஒரு வேண்டுகோள் அனுப்பினோம். அந்த முயற்சி தோல்வி கண்டது

பிரதமர் ராஜீவ் காந்தி இயக்கங்களை சந்திக்க விரும்பினார் .. இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - 9

தர்மலிங்கம் எம்பி - ஆலாலசுந்தரம் எம்பி
திரு. அ அமிர்தலிங்கம்  :
நாடு கடத்தல் உத்தரவு:
 இதைத் தொடர்ந்து போராளி இயக்கங்களின் தலைவர்களைப் பிரதமர் ராஜீவ் காந்தி பார்க்க விரும்பினார். அவர்கள் செல்லத் தயங்கினர். இந்திய அரசுக்கும், சில இயக்கங்களுக்கும் இடையில் கசப்புணர்வு ஏற்பட்டது. போராளி இயக்கங்களோடு தொடர்புடைய மூன்று தலைவர்கள் இந்தியாவிலிருந்து நாடு கடத்தப் பட்டனர். அந்த செய்தி டெல்லியில் எனக்குக் கிடைத்தவுடன் திரு. பார்த்தசாரதியோடும் திரு.
ரொமேஷ்பண்டாரியோடும் தொடர்பு கொண்டும் நாடு கடத்தலை நிறுத்துமாறு வேண்டினேன். தமிழ் நாட்டு அரசாங்கம் கேட்டால் பலன் கிடைக்கலாம் என்று அவர்கள் கூறியதன் பேரில் சென்னைக்குத் தொடர்பு கொண்டு முயற்சித்தேன். அடுத்தநாள் ஆகஸ்ட் 25 ந்திகதி நானும் திரு.பார்த்தசாரதியும் பிரதமர் ராஜீவ் காந்தி அவர்களைச் சந்தித்தபோது நாடு கட்டத்தலை நிறுத்தி இயக்கங்களோடு மீண்டும் நல்லுறவை ஏற்படுத்துமாறு வேண்டினேன்.
ஏற்கனவே அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டதாகவும் விரைவில் திரும்புவதற்கு அனுமதி வழங்கப்படும் என்றும் பிரதமர் கூறினார். நாம் இவ்வளவு முயற்சிகள் எடுத்தும் நாடு கடத்தலுக்கு நாமும் உடந்தையாக இருந்ததாகச் சிலர் அப்பட்டமாகக் குற்றம் சுமத்தவும் தயங்கவில்லை. நாம் எவ்வளவு பிரயாசப் பட்டோம் என்பது திரு. பார்த்தசாரதி அவர்களுக்கு நன்குத் தெரியும். திம்பு மாநாட்டில் ஆறு தமிழ் இயக்கங்களும் ஒற்றுமையாக இருந்த நிலைமாறி மீண்டும் வேற்றுமைகள் தலை தூக்கத் தொடங்கின.
தர்மலிங்கம்-ஆலாலசுந்தரம் படுகொலை:

வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தமிழ் மொழிவாரி அரசாக . இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு - - 10

   அமரர் .அ.அமிர்தலிங்கம்: டெல்லி உடன்படிக்கை!
இந்த இருதலைவர்களின் மறைவினால் எமக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஏற்பட்டதென்பதை யாரும் மறுக்க முடியாது. யாழ்ப்பாணத்தில் நாளுக்கு நாள் நடை பெறும் சம்பவங்களை எமக்கு ஒவ்வொரு நாளும் தொலை பேசியில் கொடுத்துக் கொண்டிருந்தவர் திரு. ஆலாலசுந்தரம். எமக்கு மாத்திரமின்றி உலக மக்கள் தொடர்புச் சாதனங்களுக்கெல்லாம் யாழ்ப்பாணத்தில் செய்தி நிலையமாக விளங்கியவர் ஆலாலசுந்தரம் என்று இக் கொலைச் செய்தியைப் பிரசுரித்த இங்கிலாந்து 'கார்டியன்' பத்திரிகையே குறிப்பிட்டது. மோட்டார் வண்டி ஓட முடியாவிட்டாலும்
கந்தரோடையிலிருந்து சைக்கிளில் யாழ்ப்பாணம் வந்து ஆலாலசுந்தரத்துக்கு ஆலோசனை வழங்கி உறுதுணையாக இருந்தவர் திரு. தர்மலிங்கம். மக்களுக்கு என்ன துன்பம் ஏற்பட்டாலும் தமிழர் விடுதலைக் கூட்டணியை இயங்க விடக்கூடாது என்று யாரோ தீட்டிய திட்டத்திற்கு யாரையோ கருவியாகப் பாவித்து இப்படுகொலை நடத்தப்பட்டது. இதனால் எமக்கு செய்திகள் கிடைப்பதும் டெல்லியோடு தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுப்பதும் பெரிதும் தடைப்பட்டது.
இந்த நேரத்தில் டெல்லியில் இலங்கை அரசாங்கத் தூதுக்குழுவிற்கும், இந்திய வெளிநாட்டு அமைச்சுக்கும் இடையில் எமது பிரச்னைக்கு தீர்வுகாண அடிப்படை பற்றி ஓர் உடன்படிக்கை ஆகஸ்ட் 31 ந்திகதி ஏற்பட்டது. இந்த உடன்படிக்கை பற்றி தமிழ் இயக்கங்கள் எல்லாம் ஒரே கருத்தை இந்தியாவிற்கு தெரிவிக்க வேண்டியது அவசியம் என்பதைக் கண்டோம்..
எம் சகாக்களை கொலை செய்த துயரத்தையெல்லாம் ஒதுக்கி வைத்து போராளி இயக்கங்களோடு கலந்து உரையாடினோம். பிரதமர் ராஜீவ் காந்திக்கும் ஓர் விரிவான கடிதம் மூன்று அடிப்படை முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களில் தமிழ் மக்கள் விட்டுக் கொடுக்க முடியாது என்பதை வலியுறுத்தி 9.9,85-ல் எழுதினோம்.

சகோதர போராளிகள் படுகொலை .. கலைஞர் உட்பட நாம் நம்பிக்கை இழந்தோம் ... ஒப்பந்தம் வந்த வரலாறு - 11


அமரர். திரு.அ.அமிர்தலிங்கம் : இந்த திட்டத்தை டெல்லி சென்று நேரில் கையளித்ததோடு பல மணித்தியாலங்கள் வெளிநாட்டு அமைச்சரின்
செயலாளரோடும் ஏனைய அதிகாரிகளோடும் உரையாற்றினோம்.
எமது முயற்சி விரும்பிய பயனைக் கொடுத்தது. இந்திய அரசின் போக்கில மீன்டும் எமக்குச் சார்பான மாற்றம் தோன்றியது.
"இலங்கை அரசின் திட்டத்திற்கு தமிழர் விடுதலைக் கூட்டணி விரிவான ஆக்கப்பூர்வமான மாற்று திட்டத்தைக் கொடுத்திருக்கின்றது' - என்று பத்திரிகைகளுக்குக் கூறிய திரு ராஜீவ் காந்தி, டாகாவில் கூடிய தெற்காசிய பிராந்திய மகாநாட்டில் ஜனாதிபதி ஜயவர்த்தனாவிடம் அதை நேரில் கையளித்தார். எமது திட்டத்தை முற்றாக நிராகரித்து, ஜனவரி 30-ம் திகதி இலங்கை அரசு ஓர் விரிவான பதிலைக் கொடுத்தது.
இந்த பதில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு இலங்கை அரசின் உண்மையான போக்கைக் காட்டிக்கொடுத்தது. அவருக்கு மேலும் விளக்கம் கொடுக்கும் பொருட்டு ஓர் சந்திப்பை நாடினோம். திருவையாறு தியாகையர் உற்சவத்தோடு தென்பிராந்திய கலாச்சார நிலையத்தை அவர் திறந்து வைத்துத் திரும்பிச் செல்லும் போது நாமும் உடன் விமானத்தில் சென்று . விரிவாகப் பேச நேரம் கொடுத்தார்.
நானும் திரு சிவசிதம்பரம், திரு. சம்பந்தன் ஆகிய மூவரும் திருச்சி சென்று அங்கிருந்து டெல்லி வரை இரண்டு மணித்தியாலங்களுக்கு மேலாக அவரோடு விமானத்தில் உரையாடினோம். வடக்குக் கிழக்கு இணைப்பைப் பற்ற அவருக்குத் தவறான கருத்து தரப்பட்டிருந்தது. வட மகாணமும் கிழக்கு மாகாணமும் தொடரான நிலப் பரப்பல்ல என்று கூறப்பட்டிருந்தது. அந்தத் தப்பான கருத்தைத் தெளிவுபடுத்தினோம்.

இந்திய போர் விமானங்கள் யாழ்ப்பானத்தில் உணவு பொட்டலங்களை போட்டன .. இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு -12

 திரு . அ. அமிர்தலிங்கம்   :  டிசம்பர் 19  ஆம் திகதி தி


ட்டம்
இந்திய அமைச்சர்களுக்கும்  இலங்கை அரசுக்கும் நடந்த பேச்சு வார்த்தைகளின் இறுதியில் வடக்கு கிழக்கு மாகாணம் பற்றிய புதிய திட்டம் உருவானது.  கிழக்கு மாகாணத்தில் இருந்து அம்பாறை தேர்தல்  மாவட்டத்தை பிரித்து எஞ்சிய பகுதியை கிழக்கு மாகாணமாக்கி ,  அதற்கு ஒரு மாகாணசபையையும் . வடக்கு மாகாணத்துக்கு ஒரு மாகாணசபையையும் அமைத்து இரு மாகாணசபைகளையும் சில விடயங்களில் ஒன்று பட்டு செயல்பட கூடியவாறு ஒரு அமைப்பை ஏற்படுதுவதென்றும் .
ஒரு குறிப்பிட்ட காலத்தின் பின் மக்களின் தீர்ப்பின் அடிப்படையில் இவை இணைவதற்கு அனுமதிப்பது என்றும் இலங்கை அரசு ஏற்று கொண்டது.
ஆனால் இந்திய அமைச்சர்கள் டெல்லி திரும்பிய இரண்டு நாட்களுக்குள் இடையில் முஸ்லிம் பிரதிநிதிகள் இதை எதிர்ப்பதாக இலங்கை  தூதுவர் மூலம் டெல்லி அரசுக்கு அறிவிக்க பட்டது.
ஏற்று கொண்ட திட்டத்தில் இருந்து இலங்கை பின்வாங்க தொடங்கியது.
இலங்கை அரசின் நிலையை தெளிவு படுத்த தூதுவர் மட்டத்தில் முயற்சிகள மேற்கொள்ள பட்டன்.
ஆனால் இந்திய அரசுக்கு ஓர் உறுதியான பதில் கிடைக்கவில்லை.
இதனால் இத்திட்டம் உத்தியோக பூர்வமாக  தமிழ் இயக்கங்களுக்கு அறிவிக்க படவோ அவர்களின் கருத்துக்கள கோரப்படவோ இல்லை. .  
கிழக்கு மாகாணத்தில் பயங்கர இராணுவ நடவடிக்கை.
மார்கழி மாத பிற்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் கொக் கட்டிச் சோலைப் பகுதியில் இலங்கை இராணுவம் விமானங் களிலிருந்து குண்டு வீசித்தாக்கியும், ஹெலிக் கெப்டர்களி லிருந்து துப்பாக்கிப் பிரயோகம் செய்தும், கனரகபீரங்கி களால் தாக்கியும் ஆயிரக்கணக்கான படைவீரர்களோடு மிகப் பெரிய தாக்குதலை ஆரம்பித்தது. படுவான்கரை முழுவதுமே இப்பயங்கரத் தாக்குதல் நடைபெற்றது.

உயிரை பணயம் வைத்து ஒப்பந்தம் செய்த பிரதமர் ராஜீவ் காந்தி .. ஜூலை 29 1987 . .. இலங்கை இந்திய ஒப்பந்தம் வந்த வரலாறு 13

திரு . அ.அமிர்தலிங்கம் : 
1 . கிழக்கு மாகாணத்தில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படுவதை நாம் முற்றாக எதிர்க்கிறோம்.   ஏற்படுத்தப்படும் அமைதியை அது குலைத்துவிடும். மீண்டும் கலவரம் ஏற்படும். அன்றியும் சிதறிப்போய் இருக்கும் தமிழ் மக்கள் ஒரு வருடத்திற்குள் திரும்பி வரமுடியாது.
2   .1987 மே மாதத்திற்கு பின் நிறுவப்பட்ட ராணுவ முகாம்கள் மாத்திரமின்றி 1983 இன் பின் நிறுவப்பட்ட முகாம்கள எல்லாம் அகற்றப்பட வேண்டும்.
3    . வடக்கு கிழக்கு மாகாண தமிழ் மக்களின்  பாதுகாப்புக்கு இந்திய நேரடி தலையீடு அவசியம் .  சிங்கள போலீசையோ இராணுவத்தையோ அங்கு சட்டம் ஒழுங்கு நிலை நிறுத்தும் வேலையில் ஈடு படுத்த கூடாது.
4 .. மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள் பற்றி மாத்திரம்  மத்திய ஆட்சியில் தமிழ் மக்களின் உரிமை பற்றியும் பேசி தீர்க்கப்பட வேண்டும். 
 இந்திய அரசின் சட்ட நிபுணர்களும் இப்பேச்சு வார்த்தைகளில் பங்கு கொள்ள  வேண்டும் ..
5 .  பங்கரவாத தடை சட்டம் , அவசர கால தடை சட்டம் இவற்றின் கீழ் கைது செய்ப்பட்டவர்கள் மாத்திரம் அல்ல . நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் , தண்டிக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் மன்னிப்பு வழங்க படவேண்டும்.
பயகரவாத தடை சட்டம் நீக்கப்பட வேண்டும் .
6.  ராணுவ போலீசின் வன்முறையினால் பாதிக்கப்பட்ட மக்கள் மாத்திரமின்றி இன கலவரங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் போதிய நஷ்ட ஈடு வழங்கப்பட வேண்டும்.

அமரர் ராஜீவ் காந்தி 02-08-1987 சென்னை மெரினாவில் ஆற்றிய உரை ...

இந்த ஒப்பந்தத்தை சீர் குலைக்க பல சக்திகள் முயலக் கூடும். எந்தெந்த சக்திகளின் நடமாட்டங்கள் இந்த ஒப்பந்தத்தால் அகற்றப்படுகின்றனவோ அவை அனைத்தும் இந்த ஒப்பந்தத்தை முனை முறிக்க முயலக்கூடும். வன்முறை மூலமும் கொடுஞ்செயல்கள் மூலமும் பயன் பெற நினைப்போர் இந்த ஒப்பந்தம் நிறைவேறுவதை விரும்ப மாட்டார்கள்
சென்னையில் பிரதமர் உரை வணக்கம்!
இலங்கையில் அமைதிச் சூழ்நிலை ஒன்று ஏற் பட்டிருப்பதற்காக நாம் இன்று கூடியுள்ளோம்......
ஒப்பந்தத்தில் கையெழுத்திட நான் இலங்கைக்குப் போகும் முன்னர் எல்லாத் தமிழ் போராளிகளிடமும், அதிகளவு மிதவாத உணர்வு கொண்ட இலங்கை தமிழர்களிடமும் நான் பேசினேன். நீதி மற்றும் சமத்தவத்தைப் பெற போராடும் இவர்களிடம் நான் ஆலோசனை மேற்கொண்டேன், நாங்கள் கையெழுத்திட்ட இந்த ஒப்பந்தத்தை தமிழ் போராளிகள் அனைவரும் புரிந்து கொண்டனர்.. இலங்கையின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்காமல், இலங்கை தமிழர்கள் கோரிய அனைத்தையும் தர இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது..... .....
இலங்கையின் மூன்றில் ஒரு பகுதி தனி மாகாணமாக் கப்பட்டு, தமிழர்கள் அதில் பெரும்பான்மையினராக வசிக்க இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இந்திய அரசின் கீழ் இருக்கும் மாநிலங்கள் போன்றே மாநில சுயாட்சி உரிமையும் அவர்களுக்கு உண்டு... ...
நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவு செய்யப் பட்டுள்ளன. கருத்து வேறுபாட்டையும் வன்முறையையும் போரையும் நிறுத்த வேண்டிய நேரம் இது. இது புனரமைக்க வேண்டிய நேரம். தேசிய இணக்க உணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டம் உருவாகி இருக்கிறது.