Thursday, January 6, 2022

இலங்கையில் பார்பனீய கோட்பாடுகள் வேருன்றிய சென்ற நூற்றாண்டு ..சில தரவுகள்

சேர் பொன்.ராமநாதன்
   இராதா மனோகர்

இந்துபோர்ட் ராசரத்தினம்
     இலங்கை தமிழர்களின் அரசியல் 
கலாச்சாரம், சமுகவியைல்  என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது  என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம்
மலையக மக்களின் சிந்தனையானது முற்றிலும் வேறு ஒரு விதமாக இருக்கிறது .
எல்லோரும் தமிழர்கள்தான் என்றாலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக  இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம்  பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல  தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.