Thursday, January 6, 2022

இலங்கையில் பார்பனீய கோட்பாடுகள் வேருன்றிய சென்ற நூற்றாண்டு ..சில தரவுகள்

சேர் பொன்.ராமநாதன்
   இராதா மனோகர்

இந்துபோர்ட் ராசரத்தினம்
     இலங்கை தமிழர்களின் அரசியல் 
கலாச்சாரம், சமுகவியைல்  என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது  என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம்
மலையக மக்களின் சிந்தனையானது முற்றிலும் வேறு ஒரு விதமாக இருக்கிறது .
எல்லோரும் தமிழர்கள்தான் என்றாலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக  இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம்  பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல  தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.
விடுதலை போராட்டத்தை பாசிச சக்திகள் ஹைஜாக் பண்ணி முழுக்க முழுக்க ஒரு பாசிச வெறியாட்டமாக ஆடி முடித்த வரலாறு ஒரு பெரிய பாடத்தை உலகுக்கு வழங்கி இருக்கிறது
ஜாதி மத பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை உள்ளகத்தே ஒழித்து மறைத்து கொண்டு எழும் குறுந்தேசிய வாதம் எப்படி இருக்கும் என்பதை இது காட்டுகிறது.
இந்த பாசிச சக்திகளின் உருவாக்கம் வளர்ச்சியானது  வடமாகாண தமிழர்களின் வாழ்வியலின் ஒரு அரசியல் பரிணாம வளர்சியாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.


மலையக மக்களை மட்டுமல்ல எந்த மக்களையும் சக மனிதர்களாக பார்ப்பதை ..அவர்களின் வைதீக பார்ப்பனீய சைவ சமய கோட்பாடுகள் அனுமதிப்பதில்லை.
வீரகேசரி வாசு அய்யர்
அது தவறென்று கூட இவர்கள் உணர்வதில்லை.
தனிப்பட்ட ரீதியில் மிகவும் நல்லவர்களாகவும் மென்மையானவர்களாகவும் இருக்கும் மனிதர்கள் கூட யாழ்மையவாதத்தின் அடாவடி நோயால் பாதிப்புற்று சக மனிதர்களை நேசிக்க மறந்து போயினர்.
 
முல்லைத்தீவு கிளிநொச்சி வவுனியா மன்னார் மூதூர் திருகோணமலை மட்டகளப்பு அம்பாறை மாவட்டங்களில் குடியமர்ந்த மலையக மக்களின் முழு சக்தியையும் இந்த பாசிச சக்திகள் பயன்படுத்தின.
அதனால் பாதிக்கப்பட்ட மலையக  மக்கள் மூச்சு காட்டாமலேயே மௌனமாகி போனார்கள்.
அவர்களின் உறவினர்களும் அயலவர்களும் மலையகத்தில் சிங்களவர்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள்
இந்நிலையில்  தங்களின் போராட்ட பங்களிப்புக்களினால் மலையகத்தில்
ஈழநாடு ஹரன்  அய்யர்
வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு ஆபத்துக்கள் ஏற்பட்டு விடக்கூடாதென்று மௌனமாகி போனார்கள் .
அவர்களின் ஆழமான மௌனம் இன்றுவரை தொடர்கிறது.
உரத்து குரல் எழுப்பாது மௌனமாக கண்ணீர் வடிக்கும் மலையக குடும்பங்கள் எத்தனை என்று எந்த புலம் பெயர்ந்தவராவது மெழுகுதிரி ஏற்றி  இருப்பாரா?

இந்த யாழ்ப்பாண  சைவசித்தாந்தம் கட்டமைத்த வைதீக வெறி  கொஞ்சம்கொஞ்சமாக அங்குள்ள எல்லா ஜாதிகளுக்குள்ளும் எல்லா மதங்களுக்குள்ளும் ஊடுருவி உள்ளது என்பதுதான் இன்றாய நிலை
ஏனைய கிறிஸ்தவர்களை யாழ்மையவாத கிறிஸ்தவர்கள் தங்களை கொஞ்சம் புனிதர்களாக கருதுகிறார்கள் . யாழ் சைவர்கள் எனைய இந்துக்களை விட தாங்கள் மேலோர் என்று கருதுவதை போல..
இந்த யாழ் மையவாதகோட்பாடுகள் வெறுமனே ஒரு ஜாதிக்கு மட்டும்தான் உரியது என்பது அல்ல . ஒரு காலத்தில் அப்படி இருந்திருக்கலாம் . ஆனால் இன்று எல்லா ஜாதிக்குள்ளும் அந்த யாழ் மையவாத வியாதி பரவிவிட்டது.
அதாவது சக மனிதரை சக மனிதராக கருத முடியாமை!
சுததந்திரன் ஷர்மா
இந்த நான் வேறு நீ வேறு என்ற மனுதர்ம ஜாதீய கோட்பாடு எப்படி இலங்கையில் , அதிலும் யாழ்ப்பாணத்தில் வேருன்றியது என்று பார்த்தால் சில பேர்வழிகள் இதன் பின்னணியில் இருந்திருக்கிறார்கள் என்று தெரியவருகிறது.
சுமார் நூறு ஆண்டுக்களுக்கு முன்பு வரை அங்குள்ள கோயில்களில் அந்தந்த ஊர் பூசாரிகளே பூசைகளை செய்துவந்தனர் .. கோயில்களும் அவர்களுக்கே உடமையாகவும் இருந்தன.
தமிழ்நாட்டு மடங்களுக்கும்,  தமிழ்நாட்டு பார்ப்பனர்களுக்கும் இடையே ஏற்பட்ட தொடர்புகளால் இந்த நிலை மாறத்தொடங்கியது.
தமிழ்நாட்டில் இருந்து மனுதர்ம வைதீக கோட்பாடுகளை பெருமளவில் இறக்குமதி செய்தவர் ஆறுமுக நாவலர் . சேர் பொன்னம்பலம் ராமநாதன் . இந்து போர்ட் ராஜரத்தினம் போன்றோர்
 

1923 டிசம்பர் 1 இல் சேர் பொன்னம்பலம் இராமநாதன், வழக்கறிஞரும் ஆசிரியருமான மு சி ராசரத்தினம் சேர் வைத்திலிங்கம் துரைச்சாமி போன்றோரின் ஆதரவுடன் ஆரம்பிக்கப்பெற்ற சைவ வித்தியாபிவிருத்திச் சங்கத்தின் (இந்துபோர்ட்) வளர்ச்சியிலே முக்கிய பங்காற்றினார்.
 சைவ வித்தியா விருத்திச்சங்கத்துடன் ஒன்றிணைத்தார். இதனால் "இந்து போர்ட்' என்றால் சு.இராசரத்தினத்தையே குறிப்பதாக அமைந்தது.
மணி அய்யர்

யாழ்ப்பாணக் குடாநாடு, முல்லைத்தீவு, பதுளை, நாவலப்பிட்டி, புத்தளம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, ஊர்காவற்றுறை உட்பட நெடுந்தீவு முதலான இடங்களில் 174 சைவப் பாடசாலைகள், 7 ஆங்கிலப் பாடசாலைகள், 16 பன்னவேலைப் பாடசாலைகள், தற்காலிக அங்கீகாரத்துடனான மேலும் 63 பாடசாலைகள், 2 அநாதை இல்லங்கள், ஓர் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை என்பவற்றை சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின் மூலம் உருவாக்கி இயங்கச் செய்தார்.
1928 அக்டோபரில் திருநெல்வேலியில் சைவாசிரியர் பயிற்சி நிறுவனம் இவரது முயற்சியால் உருவானது.
 
 1923 ஆம் ஆண்டு உருவான சைவ வித்தியா விருத்தி சங்கம் நடாத்திய பள்ளிக்கூடங்களில்  தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த சிறுவர்கள் சேர்க்கப்படவில்லை
இதன் காரணமாக இதில் இருந்து வெளியேறிய  மு சி ராசரத்தினம்  
 .
சம ஆசனம் . சமபந்தி போசனம். ஆலைய நுழைவு போராட்ட காலங்களுக்கு முன்பிருந்த சாதீய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்தி கொண்டு வழக்கறிஞரும் ஆசிரியருமான மு சி ராசரத்தினம் செயல்ப்பட்டார் .என்று தெரிகிறது  
இவரின் முயற்ச்சியால்  தாழ்த்தப்பட்டவர்களின் சங்கம் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட   பாடசாலைக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி 27 - 11  -1927 இல் நடந்தது.
அந்த பாடசாலையின் பெயர் "சுன்னாகம் திராவிட வித்தியாசாலை"

இப்பாடசாலை கட்டுவதற்கு நிதி உதவி செய்வதாக வாக்குறுதி அளித்த இந்து போர்ட் ( சைவ வித்தியா விருத்தி சங்கம்)  எட்டு மாதங்களாகியும்  உறுதி அளித்தபடி நிதி அளிக்கவில்லை என்று 1928  திராவிடன் ஆவணி இதழில் மனவருத்தத்துடன் ஆசிரிய தலையங்கம் எழுதப்பட்டிருந்தது.

 ( 1927 பெப்ரவரி 11ஆம் திகதி இச்சங்கம் சார்பாக திராவிடன் எனும் மாத இதழ் வெளியிடப்பட்டது. சுமார் நான்கு ஆண்டுகள் வெளியான இந்த இதழிலிலிருந்து சங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அறிய முடிகிறது
 
சைவவித்தியா விருத்திச் சங்க நிர்வாகத்தின்  கல்வி முயற்சிகள் எல்லாமே சைவசமயத்தை முதன்மை படுத்தியே ஆரம்பித்தனர்
 
சைவவித்தியா விருத்திச் சங்க பள்ளிகூடங்களில் பெரும்பாலும் ஆறுமுக நாவலர் எழுதி பதிப்பித்த நூல்களே இருந்தன .
அவை சின்னசிறு சிறார்களின் மனதில் எல்லாம் ஜாதிய விசத்தையும் மதவெறியையும் தவறாமல் போதித்தன.
தேடி எடுத்த நாயன்மார்களின் கதைகள் இவற்றில் மிகவும் பிரபலமனவையாகும். அத்தனை நாயன்மார்களின் வரலாறுகளும் ஆரம்பிக்கும் தொடக்க வரிகளாக "
இவர் உயர் குடி வேளாளர் மரபில் உதித்தவராகும் அல்லது இவர் உயர்குடி அந்தணர் மரபில் உதித்தவராகும் என்று இருக்கும்
சாதிப்பாகுபாடு என்பது மிகவும் சாதரணமான விடயம் , அது தவறே இல்லை . மேலும் அதை படைத்தது எல்லாம் வல்ல முருகப்பெருமான் என்பது போல கற்பிதம் செய்தனர்.
 
அடுத்தபடியாக பத்திரிகைகள் இந்த ஜாதீய வைதிக மத வியாதிகளை பரப்பின.
கல்வி முயற்சிகளில்  ஜாதீய  பார்ப்பனீய கோட்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த காலங்களுக்கு சற்று பின்பாக இலங்கை தமிழ் பத்திரிக்கை துறையில் பார்ப்பனீயம் எப்படி காலூன்றியது என்பதை இனி பார்ப்போம்
 
தமிழ்நாட்டில் இருந்து வந்த மூன்று பார்ப்பனர்கள் சுமார் முப்பது ஆண்டுகள் இந்த கைங்காரியத்தை செய்தார்கள்
 
வீரகேசரி -  ஆசிரியர் ஸ்ரீ நிவாசன் அய்யங்கார் (இந்து பத்திரிகையின் கஸ்தூரி ரங்கன் குடும்ப சம்பந்தி),
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர்  கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர் .இவர் திருவையாறு வைதீக பார்ப்பனராகும்
மகேஸ்வர சர்மா,-  சுதந்திரன் பத்திரிகை ஆசிரியர் ..
இந்த மூன்று பார்ப்பன பத்திரிகையாளர்கள் கற்றுகொடுத்த வழியிலேயே பின்வந்த இலங்கை தமழ் பத்திரகை ஆசிரியர்களும் பணியாற்றினார்கள்
தாங்களும் பார்ப்பனீய வழியில் எழுதி எழுதிய ஒரு fake பார்பனர்களாகவாவது மாறிவிடலாம் என்று முயற்சி செய்தார்கள்.

இத்தனையும் போதாதென்று கல்கி ஆனந்தவிகடன் குமுதம் கலைமகள் போன்றவையும் தம் பங்கிற்கு பார்பனீயத்தை இலங்கையில் வளர்த்தன.

இதே காலப்பகுதியில் நல்லூரில் இருந்த சிவசுபிரமணிய அய்யர் என்பவர் நல்ல கதாபிரசங்கியாக இருந்தார் .( CSS மணி பாகவதர் அல்லது மணி அய்யர் ) கந்த புராணம் அறுபது மூன்று நாயன்மார்கள் புராணம் மகாபாரதம் ராமயாணம் போன்றவற்றை இலங்கை முழுவதும் குறிப்பாக யாழ்ப்பான கோயில்களில் திருவிழாக்களில் இவரது புராணங்கள் இடம்பெறும் .. தமிழகத்து  கிருபானந்த வாரியார் பாணியில் அவரை விட கொஞ்சம் அதிகமாக ஜன ரஞ்சகமாக பாட்டுபாடி புராண புனை கதைகளை பரப்பினார்.

இவர் பின்னாளில் நல்லூரில் ஒரு ஆதீனத்தை நிறுவினார்.
தற்போது உள்ள புதிய மடாதிபதியிடம்  இலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் தலைவர்கள் வந்து ஆசீர்வாதம் வாங்குவது ஒரு மரபாகிவிட்டது . காஞ்சி சங்கராச்சாரி பாணியில்..


பார்பனீயம் கட்டமைத்த சமுகம் ஒரு இருட்டில்தான் இருக்கும் என்பதற்கு உத்தர பிரதேசத்தை விட சரியான உதரணமாக இலங்கை வடக்கு மாகாணத்தை கொள்ளலாம்
ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் இலங்கையில் ஆட்சி செய்த பெரும்பான்மயின மக்கள் பௌத்த மதத்தை சார்ந்தவர்கள்.
பௌத்தம் கல்விக்கு முக்கியத்துவம கொடுத்தது,
எல்லா மக்களுக்கும் இலவச கல்வியை கொடுத்தது.
ஜாதி மத வித்தியாசங்களை புறந்தள்ளியது .
இன்று இலங்கை வடமாகாண மக்கள் கல்வியில் பின் தங்காமைக்கு காரணம் பௌத்தம் கட்டமைத்த அரசியல் சாசனம்தான்


கல்வியில் உயர்ந்திருந்த இலங்கை வடக்கு மாகாண மக்களின் அரசியல் தோல்வி அடைந்தமைக்கு காரணம் :
பார்ப்பனீயம் கட்டமைத்த சைவசித்தாந்தமும் அதன் கோட்பாடாகிய
 நான் வேறு நீ வேறு ..
நான் இந்த ஜாதி நீ அந்த ஜாதி ..
 நான்  உசத்தி   நீ தாழ்த்தி
என்ற கருத்தியல் கோட்பாடுதான்.
இந்த  பார்ப்பனீய கோட்பாடானது பொருளாதார ரீதியான ஒற்றுமையையும்  தாண்டி மனிதர்களை பிரிக்கும்
அப்படி பிரித்து வைப்பதுதான் பார்பனீயம்
இதை உணராதவரையில் மீட்சி இல்லை

No comments:

Post a Comment