Saturday, July 11, 2026

இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?

May be an image of text that says "INDIANS MORE EIndian population 60,000in vear. Vilal Statisties gistrar-General, General, and published June 27th ( 1029) ylon on December 31st.1946. shipping population) 606,000 on December 31st. 1945. xceeded the N number of Kotte: Mr. emigrants 56.790. OCCASION FOR A TAMASHA" Maturata: Kotagala: and E (open"

ராதா மனோகர் சுதந்திர இலங்கையில் ஒரு மார்சிஸ்ட் ஆட்சியை உருவாக்க முடியும் என்று இடதுசாரிகள் நம்பியது ஏன்?
சிங்கள பெரும்பான்மை மக்கள் எப்போதும் பௌத்த சாசன அடிப்படையிலான ஒரு ஜனநாயகத்தைதான் தங்கள் அரசியல் கோட்பாடாக கொண்டுள்ளார்கள் 
பௌத்த மதம் சாதாரண மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்துவதில் எப்போதும் வெற்றி கண்டே வந்திருக்கிறது.
இலங்கையின் அரசியல் நிலை இப்படி இருக்கையில் சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் ஆட்சியை எட்டி பிடித்திருக்க கூடிய அளவு இடதுசாரிகளால்   எப்படி முன்னேற முடிந்தது என்ற கேள்வி இருக்கிறதல்லவா?
அது ஒன்றும் பெரிய மந்திரம் மாயம் கிடையாது 
இந்திய வம்சாவளி மக்களை இந்திய தொழிற்சங்கங்களும் இந்திய இடதுசாரி இயக்கங்களும் ஆழமாக இடதுசாரி வாக்காளராக மாற்றி இருந்தார்கள் 
தமிழகத்தில் இருந்து வந்த நடேசய்யர் முதலாக தொடர்ந்து வந்த அத்தனை பேர்வழிகளும் இடதுசாரி பிரசாரகர்களாகவே வந்தார்கள் ...பிரசாரம் செய்தார்கள்   ... வென்றார்கள்.