ராதா மனோகர் : ஆரிய திராவிட பாஷாவிருத்தி சங்கம்
1921 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையில் கூடிய கல்விமான்கள் உட்பட பெருமளவு மக்கள் கூடிய மன்றத்தில் தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரிய திராவிட பாஷா அபிவிரித்தி சங்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது
ஆங்கில அரசின் கல்வி பொறுப்பதிகாரியான திரு எவனாஸ் பிரபு தலைமை வகித்தார்
இந்த சங்கம் அதுவரையில் தமிழ் மொழிக்கு சேவையாற்றி கொண்டிருந்த பலரின் ஆவணங்களையும் ஒழுங்கு படுத்தி பணியாற்றியது
இச்சங்கத்தின் சேவையையும் முக்கியத்துவத்தையும் உணர்ந்த இலங்கை பல்கலை கழகம் அதன் செனெட் சபைக்கு இச்சங்கத்தின் இரு அங்கத்தவர்களை நியமித்தது
சுமார் அரை நூற்றாண்டுகள் இச்சங்கம் தமிழுக்கு அளப்பரிய பணியை ஆற்றியது.
தமிழிலும் சமஸ்கிருதத்திலும் அடிப்படை பண்டிதர் . பால பண்டிதர் மற்றும் பண்டிதர் பரீட்சைகளை நடத்தியது.
பல நூல்களையும் பத்திரிகைகளையும் வெளியிட்டது
மற்றும் சங்கத்தினால் நடத்தப்பட்ட வகுப்புக்களை பரீட்சைகள் மூலம் அரும்பணியாற்றியது
தமிழில் பல மட்டங்களில் நடத்தப்பட்ட தமிழ் பண்டிதர்கள் பரீட்சைகளினால் சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் பயனடைந்தனர்
சமஸ்கிருதத்தில் சுமார் முப்பது மாணாக்கர்கள் பயன்பெற்றனர்
ஆரிய திராவிட பாஷா அபிவிருத்தி சங்கத்தின் மூலம் சமஸ்கிருதம் பெரிதாக வளரவில்லை
மாறாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு பெரும்பணியாற்றியது
இலங்கையில் தமிழ் ஆசிரியர்கள் பெருமளவு புகழ் பெற்று தமிழ் வளர்ச்சியில் பெரும்பங்காற்றியுள்ளனர்