Tuesday, April 21, 2026

வெறுப்பு அரசியலும் யாழ்ப்பாண அரசியலும்!

May be an image of text that says "200년년9이입봉 comedy He COMES FROM JAFFNA A vintage production Directed by Jith Pieris THE CAST Anuruddha Fernando Hans Billimoria Ashini Fernando Kanishka Herat Mahesh Senaratne Michael Holsinger Gayatri Natrajan Shohan Chandiram Avishka De Alwis 30th June Opening Night in aid of 1st, 2nd 3rd July"

 ராதா மனோகர் : Prof. E.C.W. Ludowyke எழுதிய ஹி கம்ஸ் பிறோம் ஜாப்னா  என்ற ஆங்கில நாடகம் இலங்கை நாடக வரலாற்றில்  குறிப்பிடப்பட வேண்டிய ஒரு கலைப்படைப்பு 
இந்த நாடகம்  யாழ்ப்பாண  சமூகத்தின் வாழ்வியலை கொஞ்சம் நகைச்சுவையாக வெளிக்கொண்டு வருவதில் பெரும் வெற்றி பெற்றது!.
 அன்றாட வாழ்வியலில் காணப்படும்  அடிப்படை பண்புகளை மிக நுணுக்கமாக அதே சமயம் மிக ஆழமாக காட்சி படுத்தியது 
கடுமையான விமர்சனங்களையும் கூட  நல்ல நகைச்சுவையால் இலகுவாக கடந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுகளாக இன்னும் அடிக்கடி மேடையேறும் பெருமை பெற்ற நாடகமாகும்!
கொஞ்சம் அசந்தாலும் இலகுவாக சமூக எதிர்ப்பை கிளறி விடக்கூடிய விடயங்கள் இதன் உள்ளடக்கமாக இருந்தது!
இந்த நாடகத்தில் மனிதர்கள் வந்து போயினர்!   நல்லவர் கெட்டவர் என்று யாரும் வந்து போகவில்லை 
அதன் காரணமாகவோ என்னவோ இந்நாடகம் மிக ஆரோக்கியமான சிந்தனை மட்டுமே தூண்டி விட்டது எனலாம்!

Sunday, April 19, 2026

திரு ஆலாலசுந்தரம் திரு தர்மலிங்கம் கொலையும் அந்நிய சக்தியின் சதியும்


ராதா மனோகர்
:  Saturday Review :      If a man J.R. Jeyavardana threw out of parliament can be shot like this, where does that leave us?
dont we know who did this? Can you hide a pumkin in a bowl of rice?
1985 செப்டம்பர் 5 ஆம் தேதி  இனம் தெரியாத போராளிகளால் மானிப்பாய் எம்பி தர்மலிங்கமும் கோப்பாய் எம்பி (Advocate) ஆலாலசுந்தரமும் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்கள் 
தமிழர் விடுதலை கூட்டணி எம்பிக்கள் உயிர் பயத்தில் தமிழகத்திலும் வேறு பல நாடுகளிலும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள் 
ஆனால் இந்த இருவர் மட்டும் யாழ்ப்பாணத்தில் தங்கி இருந்து தமிழர் விடுதலை கூட்டணிக்கு உயிர் கொடுத்து கொண்டிருந்தார்கள் 
No photo description available.


குறிப்பாக யாழ் வரும் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உலக ஊடக நிருபர்கள் போன்றவர்களோடு கலந்து பேசி போரில் பாதிக்கப்படும் மக்களின் விடயங்களை வெளியுலகிற்கு கொண்டுவரும் அரும்பணியை செய்து கொண்டிருந்தார்கள் 
ஈழத்தமிழர்களின் எஞ்சிய ஜனநாயக அமைப்பின்  தூண்களாக இந்த இருவர் மட்டுமே செயல்பட்டு கொண்டிருந்தாரக்ள் 
இவர்களின் இந்த வகிபாகத்தை முடக்க வேண்டிய தேவை யாருக்கு இருந்தது? 
இயக்கங்களை சந்தேக படலாம்.
அல்லது இயக்கங்களை முன்னே தள்ளி தங்கள் காரியத்தை முடித்து கொள்ள விளைந்த அந்நிய சக்திகளை சந்தேக படலாம்.
நீண்ட காலமாக பலரும் குழம்பி போயிருந்த விடயம் இது.
இந்த கொலைகள் பற்றி அமரர் அமிர்தலிங்கம் அவர்கள்  குறிப்பிடும் போது இது ஒரு  ஆழ்ந்த சதி என்று கூறி உள்ளார் 
மேலும் அவர் , ஆலால் தர்மர் கொலையுண்ட நேரம் சூழ்நிலை ஆகியன ஒரு ஆழ்ந்த சதி முயற்சியை குறிப்பிட்டுள்ளன.
அத்துடன் இலங்கை பிரச்னைக்கு தீர்வுக்கான நகல் யோசனைகளை பரிசீலிக்க   இலங்கை அமைச்சரவை கூடியபோது இவை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 14, 2026

தோழர் வரதராஜ பெருமாளரிடம் இலங்கை குடியுரிமை இருக்கவில்லை


 ராதா மனோகர்
: இலங்கையின் இணைந்த வடகிழக்கு மாகாண அரசு பற்றிய சில விடயங்களை  கொஞ்சம் பின்னோக்கி பார்க்கலாம் என்றெண்ணுகிறேன்.
இந்த மாகாண அரசு உருவாவதற்கு முன்பே ஒரு முக்கிய இந்திய தலையீடு ஈ பி ஆர் எல் எப் இயக்கத்திற்குள்  இருந்திருக்கிறது என்று நம்புவதற்கு முகாந்திரம் உள்ளது..
ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தின் முக்கிய தலைவர்களாக இருந்த தோழர் டக்ளஸ் தேவானந்தா தோழர் பத்மநாபா தோழர் கேதீஸ்வரன் போன்ற பலர் இருந்தாலும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்பவே ஒருவரை இந்தியா திணித்தது என்பது கொஞ்சம் சிந்திக்க வேண்டிய விடயமாகும்.
எந்த அரசியல் கட்சியும் சார்பற்று உருவாகிய தமிழ் மாணவர் பேரவைக்கு எதிராக தமிழர் விடுதலை கூட்டணியில் செயற்கையாக உருவாக்கப்பட்ட தமிழ் இளைஞர் பேரவையினர் இயக்கங்களுக்குள் ஊடுருவியது  எல்லோரும் அறிந்ததே.

Monday, April 13, 2026

ஆபரேஷன் பூமாலையை கண்டு மிரண்ட பிரபாகரன்

May be an image of ‎blueprint, map and ‎text that says "‎ஆர்த்தி தி ក្កឈឈ់ំត お1の2格 உன்மை- م அஞ்சாமை ரூ. ரூ.1-25 1-25 4τάρ. நடு நிஇலமை 06 មិវល 平国ご8株料1の) المد മමிල 1407 กรุเพี่อมมา பிதை 12 (10 1987) UTHAYANALVELY TAMILDA இரா ணுவத் ரின் பிடி துளடுத்து தஞ்சாவூரில் தெல்லிப்பளயில்.. பின்வாங்கல் வவசர அவசரமாக திய விமானத்தளம் அச்சுவேலியில் வாபஸ் ம்ட்டுநகரில் ipdatas อีเชช លំដ வெனியாகும் பயத்தி મ நாவில் எழுப்பும் முயற்சியை இலங்கை கைவிட்டது! து! 小き油品 சுபநோம் 140166-护年 இளப்பிர இலை இந்தியாவுடன் போராட எம்மிடம் பலம் இல்லல ஓநதிபதுி சொல்கிரர் நோட் 0ေေး டிக்விற் வாசஸ்ட‎"‎‎

 ராதா மனோகர் : 1987 ஆண்டு மே மாதத்தில் இலங்கை ராணுவம் யாழ்ப்பாண குடாநாட்டை கைப்பற்றும் முயற்சியில் வெற்றியின் விளிம்பில் நின்றது.
அச்சுவேலி வரை வந்துவிட்டது ராணுவம்.
ஈழப்போராட்டம் தனது முடிவுரையை எழுதி கொண்டிருந்த காலம் அது.
இலங்கை ராணுவம் போராளிகளை போர் முனையில் தோற்கடித்து விட்டால் பின்பு இலங்கையை கேள்வி கேட்க இந்தியாவால் முடியாது என்ற நிலையே அன்று இருந்தது.
இந்த நிலையில் இந்திய அரசு இலங்கையில் காலூன்ற முடிவெடுத்தது.
   May be an image of ‎text that says "‎2 உதுயன்-நாளகம் 09 06 1987 செவ்வாய்க்மிழமை ਪ வடமராட்சியில் LD கள் கப்பலிலிருந்து Lil ப்படி யாக மூடை இறக்கம் வீடு திரும்ப ிரும்புகின்றனர் இ்ஞர்கள் HAngbuir අමත வாடமராட்பி்் செய்ய்ப்ப あじき 古駅 ប இடங்களில் கடைஉடைப்பு; አርውያልም துைாுகக்கில் கும் வேலெயில் -Pltort உ6ஷம்திகத பொருள்கள் அபகரிப்பு கற்ப்படுகிது. பன்தியாவசிய စသေမပ် விச்சியுல் தசர்க்கப்பட் เช็ดรน பெல்லமெல்ல ச திரும்புயின் காததகல் தேகவில் யிட்டுவந்த யாழ் (صترب 47677 700 ந வாரங்களா செல்வதில் இைளன் Que Quirair படபக்ருச கப்ப்வில் ៥.63ា -ணப்பிய ராஅறிந்தேன் உங்களுக்குக் የ/ርኒቲስ 고동지이니 நங்லிக் QuiT ழுதைச் கழிக்கில் பன்ர், பிப்பாய்க் குண்ட லீச்சின் உதன்ன NO抽田坊 .ሪሚሰው மேற்பப்ட இனைஞரி்கிள்ா 0ாுத ေ ந்து /းပ களிஸ் Oйηp DỦUO திறது விட்ா Kaл @α எம்வி 06na‎"‎
1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம்  4 ஆம் தேதி இந்திய ராணுவ விமானங்கள் யாழ்ப்பாணத்தின் மீது அத்துமீறி பறந்தன 
 அரிசி பருப்பு போன்ற உணவு பொருட்கள் அடங்கிய மூட்டைகளை யாழ்ப்பாணத்தில் போட்டன.