Wednesday, June 21, 2023

1933 இல் பிரெஞ்சு அரசாங்கத்தின் ஆதரவில் புதுசேரிக்கான பத்திரிகையாக யாழ்ப்பாணத்தில் இருந்து வித்தகம் என்ற பத்திரிக்கை வெளி வந்திருக்கிறது

May be an image of text that says 'Û. VITTAGAM JAFFNA CEYLON. JOURNAL HEBDOMADAIRE PARAISSANTLE JEUDI வித்தகம் வியாழக்கிழமை தோறும் வெளிவருவது நத்தம்போற் கேடு முளதாகுஞ் சாக்காடும் வித்தகர்க் கல்லா லரிது, குரள். VOL,1 புதுவை, ஸ்ரீமுகளுர மார்கழி மா கச No. 22C Cloudy'

ராதா மனோகர்  : வித்தகம்" என்ற வாரப்பத்திரிகை யாழ்ப்பாணத்தில் இருந்து இற்றைக்கு தொண்ணுறு ஆண்டுகளுக்கு முன்பு வந்திருக்கிறது.
!933 ஆம் ஆண்டில் இருந்து 1936 ஆம் ஆண்டுவரை மூன்று ஆண்டுகள் தங்குதடையின்றி வெளிவந்திருக்கிறது
இதில் மிக சுவாரசியமான ஒரு செய்தி இருக்கிறது
அன்றைய (பாண்டிசேரி) புதுவை மாநிலத்தின் தனித்தன்மையோடு இப்பத்திரிகை வெளிவந்திருக்கிறது
இப்பத்திரிகை பிரெஞ்சு அரசாங்கத்தின் பதிப்பாகவே யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்திருக்கிறது என்பது முக்கியமாக கவனிப்படவேண்டிய வரலாற்று செய்தியாகும்
பிரெஞ்சு மொழி ஆட்சி மொழியாக இருந்த புதுவையின் ஒரு தமிழ் ./ பிரெஞ்சு பத்திரிகை யாழ்ப்பாணத்தில் பதிப்பிக்கப்பட்டு இருக்கிறது
பிரெஞ்சு இந்தியாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையே இருந்த இந்த தொடர்பு பற்றி விரிவான செய்திகள் இன்னும் அறியப்படவில்லை  
இப்பத்திரிகை தமிழ்நாட்டில் பதிப்பிப்பதில் எதாவது சிக்கல் இருந்திருக்க கூடும்
ஆங்கில காலனியாக தமிழ்நாடு அப்போது இருந்தமை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்
பிரெஞ்சு ஆங்கில காலனி நிலப்பரப்புக்களில் இருந்த முறுகல் நிலையை கருத்தில் கொண்டு இதை நோக்கலாம் என்று கருதுகிறேன்

Thursday, June 1, 2023

துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே மாற்றிய SJV and EMV combo

துரோகம் என்ற சொல்லை ஒரு அரசியல் கோட்பாடாகவே மாற்றிய SJV  செல்வநாயகம் and   EMV நாகநாதன் சம்பந்திகள்!
பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் குடும்பத்தினர் ( விக்கி குடும்பம்) இலங்கை முழுவதையும் ஒரே நாடாகதான் கருதினார்கள்
அதற்கேற்பவே தங்கள் அரசியலையும் வாழ்வியலையும் முன்னெடுத்தார்கள்
இக்குடும்பத்தின் முக்கியமான சொத்துக்கள் தென் இலங்கை முழுவதும் விரவி இருக்கிறது .
எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இக்குடும்பத்தினரின் ஆதிக்கம் இன்றுவரை இருக்கிறது
மலையக மக்களின் வாக்குகள் இலங்கையை ஒரு கம்யூனிஸ்டு நாடாக்கி விடும் என்ற நிலைமை இருந்தபோது
டி எஸ் சேனநாயக்காவின் அமைச்சரவையில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக இருந்த திரு அருணாசலம் மகாதேவா அந்த கம்யூனிச வாக்கு வங்கியை இல்ல்லாமல் செய்வதில் பெரும்பங்கு ஆற்றினார்
பின்பு சுதந்திர இலங்கையின் முதல் தேர்தலில் திரு ஜி ஜி பொன்னம்பலத்தால் தோற்கடிக்கப்படடார் .
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் மிக மிக மிக நெருங்கிய தொடர்புகள் இருந்த காலக்கட்டம் அது.
அப்போதெல்லாம் இலங்கையின் இந்திய தூதர் பதவி என்பது இலங்கையின் உதவி பிரதமர் பதவிக்கு ஒப்பானது.
அந்த பொறுப்பை திரு அருணாசலம் மகாதேவாவிடமே திரு டி எஸ் சேனநாயக்க ஒப்படைத்திருந்தார்
அடிப்படையில்  திரு . அருணாசலம் மகாதேவா அவர்கள் தஞ்சாவூரை சேர்ந்தவராகும்.