Tuesday, February 21, 2023

திரு அருணாசலம் மகாதேவா! இலங்கையின் உள்நாட்டமைச்சர் - இந்திய தூதர் - மலையக மக்களின் வாக்குரிமை இழப்பு

ராதா மனோகர் திரு அருணாசலம் மகாதேவா 5 October

Arunasalam Mahadeva


1885 இல் மாத்தறையில் பிறந்தார் 8 June 1969 இல் 83 வயதில் காலமானார்! இவர் சேர் பொன்னம்பலம் அருணாசலத்தின் மகனாவார்
1924–1930 காலப்பகுதிகளில் மேல் மாகாணத்தின்  பிரதிநிதியாக Legislative Council of Ceylon  Western Province Tamil
பணியாற்றினார்.
அதன் பின்பு யாழ்ப்பாணத்தின் பிரதிநிதியாக Member of the State Council of Ceylon 1934–1947 காலப்பகுதிகளில் பணியாற்றினார்.
பிரிடிஷ்  அரசு இலங்கைக்கு சுதந்திரம் வழங்கும் காலக்கட்டமான 1942–1946 இல் இலங்கையின் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.
 இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவராகும்
1947 இல் நடந்த முதல் சுதந்திர இலங்கையின் நாடாளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண தொகுதியில் போட்டியிட்டார்  

அதே தொகுதியில் போட்டியிட்ட திரு ஜி ஜி பொன்னம்பலம் வெற்றி பெற்றார்
அத்தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி  பெரும்பான்மையை பெறவில்லை . ஆனாலும் பல சுயேச்சை அங்கத்தவர்களின் துணையோடு ஆட்சியை அமைத்தது.

Thursday, February 9, 2023

Alfred Leo Saverimuthu Thambiayah அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா

ராதா மனோகர் :  Alfred Leo Saverimuthu Thambiayah  அல்பிரட் லியோ சவரிமுத்து தம்பையா  (1903 நவம்பர் 8)  இலங்கையின் வடக்கே வேலனைதீவு தீவில் உள்ள கரம்பொன் என்ற இடத்தில் பிறந்தார்
.இவரது தந்தை ஊர்காவற்துறையில் கப்பல் உரிமையாளராக இருந்தார். ஊர்காவற்துறை, புனித அந்தோனியார் கல்லூரி, யாழ்ப்பாணம் புனித பேட்ரிக் கல்லூரி, கொழும்பு புனித பெனடிக்ட் கல்லூரி மற்றும் கொழும்பு புனித ஜோசப் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
இவர்  21 வயதில் ஒலிம்பியா சினிமாவை குத்தகைக்கு எடுத்து தனது வணிக வாழ்க்கையை தொடங்கினார்.பின்பு பிரபல வர்த்தகரான சேர்  சித்தம்பலம் கார்டினருடன் சேர்ந்து  சிலோன் தியேட்டர்ஸ் லிமிடெட்  என்ற திரைப்பட விநியோக நிறுவனத்தை நிறுவினார்கள்   பின்னர்  கார்கில்ஸ் & மில்லர்ஸ் நிறுவனத்தை வாங்கி வர்த்தகத்தை  விரிவாக்கினார்கள்  பின்னர் 1936 ஆம் ஆண்டு ஹாரி மற்றும் ஜான் காஸ்மாஸிடமிருந்து சரக்கு படகு டிஸ்பாட்ச் கம்பெனி என்ற கப்பல் நிறுவனத்தை வாங்கினார்கள். .  

 கொழும்பு துறைமுகத்திற்கு வெளியே வணிகத்தின் பெரும் பகுதியைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரிய நிறுவனமாக இவர்களின் தொழில் சாம்ராஜ்யம் வளர்ந்தது <1947 br="" nbsp=""> அரசுக்கு சொந்தமான கொழும்பு துறைமுக அதிகாரசபையுடன் அவரது சரக்கு கப்பல் அனுப்பும் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதால், தம்பையா தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர் என்று கூறி சட்டப்பூர்வ மனு ஒன்றை தாக்கல் செய்தார்.