ராதா மனோகர் : 1957 ஆம் ஆண்டு அகில இலங்கை பகுத்தறிவு கழகத்தின் சார்பில் தமிழகத்தில் இருந்து வருகை தந்த திராவிட முன்னேற்ற கழக தலைவர் ஒருவர் இந்த படத்தில் இரண்டாவதாக நிற்கிறார். இவரை பற்றி கூறுங்கள் பார்க்கலாம்
இலங்கை முழுவதும் இவர் பல சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளார்
யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு பகுத்தறிவு சொற்பொழிவு கூட்டத்தின் பின்பு இந்த படம் எடுக்கப்பட்டது .
இக்கூட்டம் பற்றிய செய்திகளும் இவரின் விரிவான பேட்டியும் விரைவில் வரும் ...
படத்தில் முதலாவதாக நிற்பவர் இலங்கை பகுத்தறிவு கழக செயலாளர் திரு த. வேலழகன் . இரண்டாவதாக நிற்பவர் திமுக பிரமுகர் மூன்றாவதாக நிற்பவர் பகுத்தறிவு கழக தலைவர் திரு என் பி ராஜதுரை . நான்காவதாக நிற்பவர் பொருளாளர் திரு சி கண்ணன் அவர்கள்
March 13, 2022
இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்
இலங்கை மண்ணில் 1932 ஆம் ஆண்டு தந்தை பெரியார் ஊன்றிய திராவிட விதை!
இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது