Wednesday, November 8, 2023

இலங்கை பதிவு பிரஜைகளின் குழந்தைகள் இந்திய தமிழரே! Flash Back

ராதா மனோகர்  : ஈழநாடு 11 பெப்ருவரி 1961
பதிவு பிரஜைகளின் குழந்தைகள் இந்திய தமிழரே!
ரிஜிஸ்டர் ஜெனெரல் உத்தரவு!
இந்தியா பாகிஸ்தான் பிரஜா உரிமை சட்டப்படி இலங்கை பிரஜைகளாகி உள்ளவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளை  இந்திய தமிழர் என்றே பிறப்பு பதிவு புத்தகத்தில் குறிப்பிட வேண்டும் என்று கேட்டு,
ரிஜிஸ்டர் ஜெனரல் பிறப்பு பதிவு அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளதாக தெரிகிறது,
இச்செய்தி மலைநாட்டு தமிழர் வட்டாரங்களில் புதிய கவலையை அளித்துள்ளது,
இது பற்றி விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க முயற்சிகள் நடைபெறுவதாக தெரிகிறது

(இலங்கை குடிமக்கள் அனைவரும் இலங்கையின் முதல்தர குடிமக்களாகவே கருதப்படவேண்டும் என்று அன்று போராடிய வரலாறு தெரியாமல் இன்று பலரும்,
நாங்கள் எப்போதும் ஒரு தனியான அதாவது இரண்டாம் தர குடிமக்களாகவே இருப்போம் என்று கச்சை கட்டி கொண்டிருப்பதை என்ன சொல்வது?


அன்று இலங்கையர்களில் வம்சாவளி பிரஜைகள் பதிவு பிரஜைகள் என்ற பேதம் இருக்க கூடாது . அது எம்மை ஒரு எப்போதும் அந்நிய படுத்தவே பயன்படும் என்று தலைவர்கள் போராடியே அந்த பதிவு பிரஜைகள் என்ற அவச்சொல் நீக்கப்பட்டது
நாம் எல்லோரும் இலங்கையர் என்பதை  எல்லா வழிகளிலும் நிலை நிறுத்த பாடுபட்டார்கள் அன்றைய தலைவர்கள்
ஆனால் இன்று நடப்பதென்ன?
தனி அடையாளம் என்ற மாயமானுக்கு பின்னால் சென்று ஒரு இரண்டாம் தர குடிமக்களாகவே இருப்போம் என்று  புலம்புகிறார்கள்
சிந்திக்க வேண்டும் மக்களே .. நாம் இலங்கையர்கள்!  )

No comments:

Post a Comment