Friday, December 9, 2022

தமிழ்நாட்டு பார்ப்பனீயமும் .. யாழ்ப்பாணத்து ஜாதீயமும் !

Dhinakaran Chelliah  :  சாதி வாங்கலையோ சாதி!
தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் ஆதிக்கம் எப்படியோ,அப்படித்தான் யாழ்ப்பாணத்தில்.
வெள்ளாளர்களின் ஆதிக்கமும்.
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான இடைநிலைச் சாதிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் “யழ்ப்பாணக் குடியேற்றம்” எனும் ஆய்வு நூல்.
கேரளம், ஆந்திரம், கன்னடம், துளுவம், கலிங்கம்,
ஒரியா, என பல பிரதேசங்களிலிருந்து மக்கள் குடியேறிய பகுதியே யாழ்ப்பாணம் என்பதை மிகத் தெளிவாக “யாழ்ப்பாணக் குடியேற்றம்”ஆய்வு நூல் ஆசிரியர் திரு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்
(முதற் பதிப்பு 1982).கேரளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு பற்றி இந்நூல் தரவுகளுடன் குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு நூலை எழுதுவதற்கு 36 தமிழ் நூல்களையும்,5 வடமொழி நூல்களையும்,36 ஆங்கில நூல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர் சென்னை லொயாலாக் கல்லூரி தலைமைத் தமிழ் விரிவுரையாளர் மற்றும் இளைப்பாரிய அராவி இந்துக் கல்லூரி அதிபருமாவார்.

Wednesday, December 7, 2022

New menace to lanka Ceylonese party with indian interests by J R. Jayavardana 2 may 1947 UNP party paper

 

The news that Dr.Colvin R de Silva and Mr.S.C.C.Anthonipillai  were arrested in India for participating in strike of  labourers of one of the largest textile mills in south India is an event of passing more than interest.
i do not think  we need to go in to the merits of the strike. For though it is notorious that indian workers are very poorly paid  in comparison with the wages paid in Ceylon. We have not the information nor the power to interfere in a matter coming with in the province of Madras Government
What concern us is the strike, ostensibly under the leadership of the Madras labour party, Is control by the Bolshvic Leninist Party of India.
Four of Whose leaders in India are Ceylonese. Namely Dr.Colvin R.De Silva , Mr.Leslly Gunavardana, Mr. S.C.C.Anthonipillai and Mrs. Carolin Anthonipillai
This then is an Indian political party   
It work lies mainly with Indian workers. To establish itself it must work for and put in the forefront the interest of Indian workers.
Their objects are no doubt  laudable. They follow in  the tradition of Mahatma Gandhi and Pandit Nehru .Who have devoted their life to raising Indian masses ,including worker from poverty and misery.
Similar movements exists in other countries too.
In Ceylon we have the labour party and various socialists parties which have worked  for several years to improve lot of the workers.

Friday, December 2, 2022

சித்ரா சுப்பிரமணியம் (ஆர் எஸ் எஸ்) இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.


ராதா மனோகர்
: Mrs .chitra subramaniam duella  சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.   
இவர்  சுவிஸ்லாந்தை சேர்ந்த  டாக்டர் கியான்கார்லோ டூல்லா  என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு   செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில்  ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.

Thursday, December 1, 2022

இலங்கை தமிழரசு கட்சியின் திராவிட இருட்டடிப்பும் அதன் விளைவுகளும்

Radha Manohar :  இலங்கை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களிடையே ஒரு பொது அரசியல் மேடையே உருவாகி இருக்கவில்லை .
அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக தமிழ் சிங்களம் என்ற பிரிவு பேதம் வெறுப்பு எதிர்ப்பு போன்றவை இருக்கவே இல்லை.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழர்களின் நலன்களை முன்னிட்டு உருவான கட்சி .
அதன் தலைவராக திரு ஜி ஜி பொன்னம்பலம் இருந்தார் அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட பலரில் எஸ் ஜெ வி செல்வநாயகம் ஜான் ஜெபரத்னம்  நாகநாதன் போன்றவர்களும் அடங்குவர்.
தமிழ் காங்கிரஸ்  கட்சியின் ஆதரவு தளம் என்பது பெரும்பாலும் நீண்ட பாரம்பரியம் கொண்ட சைவ கனவான்களின் ஆதிக்கத்திலே இருந்தது.
இந்த சைவ அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு செல்வநாயகம் நாகநாதன் போன்றவர்கள் எடுத்த முயற்சிதான் இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றம் என்று கருதுகிறேன்

புதிய தமிழ் அரசியல் கட்சியை இவர்கள் உருவாக்கியதற்கு   மலையக வாக்குரிமை பறிப்பே காரணம் என்று இவர்கள்  கூறினாலும்,

Saturday, November 12, 2022

வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு!

 ராதா மனோகர்

  : வெளிநாட்டு திராவிடர் நலனுக்கான குழு! பேரறிஞர் அண்ணாவிடம் இலங்கை தி மு க.. (வரலாறு)
 1951 ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற திராவிட முன்னேற்ற கழக மாநாட்டுக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் மூவரை அனுப்புவது என்று கழக தோழர்கள் முடிவு செய்தனர்
அம்மாநாட்டு  நிதியை சேர்க்கும் பணியை தோழர் இளஞ்செழியன் ஏற்று கொண்டார்.
இந்த நிதியை சேர்க்கும் முகமாக  கண்ணீர் என்ற நாடகத்தை எழுதி அரங்கேற்றினார்கள்
மலையக தோட்டங்களில் வாழ்வை தொலைத்து கொண்டிருக்கும் மலையக மக்களின் கண்ணீர் கதையையே ஒரு நாடகமாக தயாரித்திருந்தார்கள்
இந்நாடகத்தை தோழர் வி செம்பனூர்  தோழர் கே கே இராமசாமி ஆகியோர் எழுதி இயக்கி இருந்தனர்
இந்நாடகம் கொழும்பு பொரளை பௌத்த இளைஞர் மண்டபத்தில் மேடையேற்றப்பட்டது
இதன் பிரதான பாத்திரமான தமிழ்மாறன் என்ற பாத்திரத்தை தோழர் இளஞ்செழியன் ஏற்று திறம்பட நடித்திருந்தார்
இந்த நாடகத்தின் மூலம் வசூலான தொகையை தமிழக திராவிட முன்னேற்ற கழக மாநாட்டிற்கு செல்லும் தோழர்களான  அ.நாச்சியப்பன் , திருப்பூர் கந்தசாமி,  எஸ் கே மாயகிருஷ்ணன் ஆகியோரிடம் கொடுக்கப்பட்டது
இவர்களோடு தோழர் எஸ் மணவைத்தம்பி . இரா அதிமணி ஆகியோர் கொழும்பு மாவட்ட இ தி மு க சார்பில் அம்மாநாட்டில் கலந்து கொண்டனர்     இம்மாநாட்டில் இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில்   பேரறிஞர் அண்ணாவிடம் ஒரு முக்கிய வேண்டுகோள் விடுக்கப்பட்டது

Tuesday, November 8, 2022

மூதூர் தமிழரசு வேட்பாளருக்கு இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ஆதரவு - சுதந்திரன் - 10 - 6 - 1962


மூதூர் அபேட்சகருக்கு இ தி மு க ஆதரவு . சுதந்திரன் - 10 - 6 - 1962
ஒன்று சேர்ந்து பாடுபட தொண்டைமானுக்கு வற்புறுத்து
வடகிழக்கு மாகாண தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து திரு .தொண்டமான் ஒத்துழைத்து , தமிழ் பேசும் இனத்தின் விடுதலைக்காக பாடுபடவேண்டும். இல்லையேல் பாராளுமன்ற பதவியில் இருந்து விலகி விடவேண்டும் இ தி மு க பொதுக்குழு வற்புறுத்தி உள்ளது.
நாவலப்பிட்டியில் நடந்து பொதுக்கூட்டத்தில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மூதூர் உபதேர்தலில் தமிழரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் ஜனாப் முகம்மதலியை ஆதரிப்பதெனவும் இக்குழு தீர்மானித்துள்ளது.
தி மு க தொழிற்சங்கம் !
பொதுச்செயலாளர் திரு . இளஞ்செழியன் பேசுகையில் , மலையகத்தில் வாழும் 10 லட்சம் தமிழ் பேசும் தொழிலாளர்களின் நல உரிமைகளை பாதுக்காக்க இ தி மு க அமைக்கும் தொழிற்சங்கமே வழிவகுக்கும் என்று கூறினார்.

Tuesday, October 25, 2022

இலங்கை வீரகேசரியும் ஹரிஜன் என்ற காந்தியின் பார்ப்பனீய லேபிளும்

ராதா மனோகர் : ஆளுநர் ஆர் என் ரவி , பட்டியல் இனமக்களை குறிக்கையில் ஹரிஜன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார். இக்குற்றத்திற்கு   வன்கொடுமை தடை சட்டத்தில் தண்டிக்க வழி உண்டா என்று தெரியவில்லை  
மேலும் மோகன் கரம்சந்த்  காந்தியின் ஹரிஜன் என்ற லேபிள் மாற்றம் தொடர்பான ஒரு இலங்கை வரலாற்று செய்தி முன்பு பதிவிட்டிருந்தேன்   அந்த செய்தியும் முக்கியமானதுதான் :
இதோ அதன் மீள்பதிவு :    இலங்கையில் ஹரிஜன் என்ற சொல் எந்த காலத்திலும் பேச்சு வழக்கில் இருந்ததில்லை.
இந்த சொல்லே பெரும்பாலும் மக்களுக்கு தெரிந்திருக்கவில்லை .
இந்நிலையில்  தமிழக பார்ப்பனர்கள் எப்படி ஒவ்வொரு பார்ப்பனீய கருத்துக்களாக அங்கு விதைத்தார்கள் என்பதை இந்த 1956 ஆம் ஆண்டு இலங்கை வீரகேசரி பத்திரிகை காட்டுகிறது.
இலங்கை அரசியல் அமைப்பிலோ சட்டத்திலோ ஜாதி இல்லை . நடைமுறையில் ஜாதி பாகுபாடு மட்டுமல்ல குற்றங்களும் இருந்தன தற்போதும் ஓரளவு இருக்கின்றன..

Thursday, October 20, 2022

சமஸ்கிருதம் மக்களால் பேசப்பட்ட மொழியல்ல! . ரகசியங்களை பரிமாற பார்ப்பனர்கள் உருவாக்கிய செயற்கை மொழி - கோடிங் லாங்குவேஜ்

ராதா மனோகர்  : சமஸ்கிருதம் ஒருபோதும் சாதாரண சமூகங்களால் பேசப்பட்ட மொழியல்ல!
அன்றாட வாழ்க்கையில் சாதாரண மக்களுக்கு புரிந்து விடக்கூடாது என்ற நோக்கத்தில் இயற்றப்பட்ட ஒரு சங்கேத மொழியாகும்.  
ஏராளமான செக்ஸ் ரகசிய குறிப்புக்களும் கதைகளும் அவற்றில் தாராளமாக உண்டு.
அவை பெண்களுக்கு தெரிந்துவிட கூடாது என்பதற்காகவே பெண்களுக்கு சமஸ்கிருதம் மறைக்கப்பட்டது.
சாதாரண மக்களுக்கு தங்களின் சுரண்டல் ரகசியங்கள் தெரிந்து விடக்கூடாது என்பதற்காகவே அம்மொழியை ஏனைய ஜாதியினருக்கு ஒரு மறை பொருளாக வைத்திருந்தனர்
ஒருவேளை தப்பி தவறி ஏனைய மக்கள்  சமஸ்கிருதத்தை அறிந்துவிட்டால் அவர்களின் காதில் ஈயத்தை ஊற்ற விதி எழுதிவைத்தார்கள்.
ஒரு ஆதிக்க சமூகம், அல்லது ஒரு அரசியல் சக்தி,
இன்னும் சரியாக சொல்லப்போனால் சாதாரண மக்களை ஆண்டுகொண்டிருந்த ஒரு கும்பல்,
தங்களின் ரகசிய தொடர்பாடலுக்காக உருவாக்கி கொண்ட கோடிங் மொழிதான் சமஸ்கிருதம்

இக்கருத்து  பலராலும் பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டதுதான்.
ஆனால் மிக திட்டமிட்டு பொதுவெளிக்கு மறைக்கப்பட்ட கருத்தாகும்
பார்ப்பனர்கள் தங்கள் வீட்டு பெண்களுக்கே இதை ஒரு மறை பொருளாக வைத்திருந்தார்கள் என்றால் இதன் இரகசியத்தின் முக்கியத்துவம் விளங்கும்

Thursday, October 13, 2022

காஞ்சி சங்கர மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது .. நிறுவனர் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதிதான். கட்டுக்கதைகள் அம்பலம்

ராதா மனோகர் :   காஞ்சி மடம் 20 ஆம் நூற்றாண்டில்தான் உருவானது!


காஞ்சி சந்திரசேகரேந்திரர்தான் நிறுவனர்!    இவரின் உண்மை பெயர் சுவாமிநாதன் சர்மா என்பதாகும் (20 May 1894 – 8 January 1994)!
இதுதான் காஞ்சி மடத்தின் உண்மையான வரலாறு !.
மகா பெரியவாள் சந்திரசேகரேந்திர சரஸ்வதியின் காலத்தில்தான் உருவானது
கும்பகோணத்தில் இருந்த மடம்  கிபி 1839 இல் தான்  காஞ்சிபுரத்திற்கு மாறியது..
( sadananda@anvil.nrl.navy.mil (கே. சதானந்தா) என்பவரின் கட்டுரையில்  , editor. cs m.uc.e du (டைஜெஸ்ட் எடிட்டர்) ;

காஞ்சிபுரம், ஜூலை 24 (பிடிஐ) 2,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ( ? ) காஞ்சி மடத்தின் தலைவரான ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதியின் 60வது நூற்றாண்டு விழாவை முன்னாள் குடியரசுத் தலைவர் திரு.ஆர்.வெங்கடராமன் இன்று தொடங்கி வைத்தார்.என்று அறிவித்தார்கள்!
மேலும் சங்கரமடமானது கிமு 482 முதல் 477 வரை முதல் 'பீடபதி' (மடத்தின் தலைவர்) ஆதி சங்கரரால் இங்கு நிறுவப்பட்ட மடத்தின் 69 வது பீடாதிபதி ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆவார்.என்றும் கூறப்பட்டது.

ஐயா, எல்லா மடங்களின் கணக்குகளின்படியும் ஆதி சங்கரர் காலம் கி.பி 8 முதல் 9 ஆம் நூற்றாண்டு வரைதான் என்பது எல்லோரும் அறிந்ததே! .     இந்த கட்டுரை ஒரு ஆங்கில ஆய்வு கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது . அந்த ஆதார கட்டுரை வாசிப்பதற்கு இந்த தொடர்பை அழுத்தவும் ஆங்கில ஆய்வு கட்டுரை
மேலும் அவர்  நிறுவிய நான்கு மடங்களில் காஞ்சி மடம் இடம் பெறவில்லை .

Sunday, October 9, 2022

திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம் .. 1927 சுன்னாகம் யாழ்ப்பாணம்

 ராதா மனோகர்  : இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம்  திராவிட அரசியலே! - 1927
இலங்கை வடமாகாணத்தில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
 சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது  
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம்   c4 July 1884 – 12 March 1970)
Subramaniam  Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election.  As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்

சுயமரியாதை - திராவிடன் பத்திரிகையின் தலையங்கம் 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகம்

 ராதா மனோகர்  : 1927 இல் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் இருந்து திராவிடன் என்ற பத்திரிகை நான்கு ஆண்டுகளாக வெளிவந்திருக்கிறது.. வெளியிட்டவர் சுன்னாகம் திராவிட வித்தியா சாலையின் நிறுவனரும் யாழ்ப்பாணம் தாழ்த்தப்பட்டவர்களின் சங்க தலைவருமான வழக்கறிஞர் திரு சு ராசரத்தினம்  அவர்கள்.
திராவிடன் பத்திரிகையில் சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான தொடர் கட்டுரையின் ஒரு பகுதிதான் இப்பதிவு.
இதில் உள்ள விடயங்களை  எல்லாம் அந்த கால சூழ்நிலை அந்த காலத்து தமிழ் நடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் பின்னணியில்தான் நோக்க வேண்டும்.
சுயமரியாதை என்ற தலைப்பில் வெளியான இக்கட்டுரை எனக்கு மிகவும் ஆச்சரியமான ஒரு விடயம்   இப்பத்திரிகையின் ஆசிரிய தலையங்கமாகவே இது வெளிவந்திருக்கிறது   
இலங்கை தமிழரிடையே சுயமரியாதை என்ற சொல்லே ஒலிப்பதில்லை
ஆனால் 1927 ஆம் ஆண்டிலேயே சுயமரியாதை என்ற தலைப்பில் சில ஆண்டுகள் ஆசிரியர் தலையங்கம் திராவிடன் பத்திரிகையில் வந்திருக்கிறது .. அந்த காலங்களில் சுயமரியாதை என்ற கருத்து ஒலித்திருக்கிறது.

Sunday, October 2, 2022

இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் U N P என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை tamil translation 02 May 1947 by J.R.Jayavardana


ராதா மனோகர்
:
இலங்கை முன்னாள் ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்த்தனா 1947 ஆம் ஆண்டு மே மாதம் அவர்களின் ஐக்கிய தேசிய கட்சி பத்திரிகையில் எழுதிய இக்கட்டுரை பல வரலாற்று நிகழ்வுகளை படம் பிடித்து காட்டுகிறது.

விருப்பு வெறுப்புக்களை கடந்து உண்மையான வரலாற்று செய்திகளை இக்கட்டுரை ஓரளவு எடுத்து காட்டுகிறது .
முக்கியமாக இலங்கையில்  இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பு பற்றிய பல பின்னணி நிகழ்வுகள் இதுவரையில் பொதுவெளிக்கு உரியமுறையில் வந்து சேரவில்லை.
அன்றைய காலக்கட்டங்களில் இலங்கையில் கம்யூனிச ஆபத்து உருவாகிய பின்னணியும் அதில் இந்திய இடது சாரிகளின் பங்கு என்ன  என்பதும் அறியவேண்டிய விடயமாகும்

இடதுசாரிகளின் வாக்கு வங்கியாக இந்திய வம்சாவளி மக்களை மாற்றிய  தொழிற்சங்கங்களும் கட்சிகளும் ஆற்றிய பணிகள் பற்றி அறிவதற்கு இக்கட்டுரை கொஞ்சம் உதவும் என்று எண்ணுகிறேன்
இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் UNP  என்ற பத்திரிகையில் வந்த கட்டுரை  -
1947 UNP Party  Journal -President J.R.Jayavardana : :
இலங்கை சம சமாஜ கட்சியின் தலைவர்களான  டாக்டர் கொல்வின் ஆர் டி சில்வா மற்றும் திரு.எஸ்.சி.சி.அந்தோனிப்பிள்ளை ஆகியோர் தென்னிந்தியாவின் (கோயம்புத்தூர் பெரிய துணி  ஆலைகளில் ஒன்றின் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக அங்கு  கைது செய்யப்பட்டனர்.
இந்த  செய்தி ஒரு முக்கியமான செய்தியாகும்.
இவர்களின் வேலைநிறுத்தம் பற்றிய விபரத்திற்குள் நாம்  செல்வதை விட வேறு கோணத்தில் இதை நோக்கவேண்டும்

Sunday, September 25, 2022

திரு . எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - வட சென்னை மக்களவை உறுப்பினர்

ஈழநாடு - யாழ்ப்பாணம் . 22 02 -1962

 ராதா  மனோகர் எஸ்.சி.சி அந்தோனிப்பிள்ளை ( யாழ்ப்பாணம்) சென்னை  சூளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் - 1952–1957.
வட சென்னை  மக்களவை உறுப்பினர் 1957–1962
இவரின் முழுப்பெயர் செபஸ்தியான் சிரில் கான்ஸ்டன்டைன் அந்தோனிப்பிள்ளை (Sebastian Cyril Constantine Anthony Pillai, ஏப்ரல் 27, 1914 – ஆகஸ்ட் 16, 2000)
இலங்கை இடது சாரித்தலைவராகவும் பின்பு இந்திய இடதுசாரி தலைவராகவும் இருந்த ஒரு சுவாரசியமான அரசியல் வரலாறை கொண்டிருப்பவர்
யாழ்ப்பாணத்தில் பிறந்த இவர் யாழ் சென்ட் பற்றிக்ஸ் கல்லூரியில் கற்றார்.பின்பு  இலங்கைப் பல்கலைக்கழகக் கல்லூரியில் சேர்ந்து வரலாற்றில் பட்டம் பெற்றார். பின்னர் இலண்டன் கிங்ஸ்  கல்லூரியில்  படித்தார். 

இவரை பற்றி ஒரு முக்கிய கோணத்தில் ஆய்வு செய்யவேண்டிய தேவை இருக்கிறது .
மறைந்த இலங்கை ஜனாதிபதி திரு ஜே ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் இவரை பற்றியும் அந்த காலத்து இலங்கை இடது சாரிகள் பற்றியும் சில முக்கிய கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை பறிப்பிற்கு இந்த இடது சாரி அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது..
அந்த விடயத்தை நோக்குவதற்கு ஒரு முன்னோடியாக திரு எஸ் சி சி அந்தோனிப்பிள்ளையின் வரலாறு ஒரு உசா  துணையாக இருக்கும் என்று கருதுகிறேன்  

இந்திய, இலங்கை, பர்மிய போல்செவிக்-மார்க்சியக் கட்சி 1948 இல்  இந்திய சோசலிசக் கட்சியுடன் இணைந்ததை அடுத்து அந்தோனிப்பிள்ளையும் அக்கட்சியில் சேர்ந்து .[
1948 முதல் 59 வரை சென்னை மாநகராட்சியில் உறுப்பினராக இருந்தார்.

1952 முதல் 1957 வரைசென்னை சூளை மேடு சட்டமன்ற உறுப்பினராக MLA  இருந்தார்.
1956 இல் லோகியா சோசலிஸ்டுக் கட்சியில் சேர்ந்தார்.
இக்கட்சியின் சார்பாக சுயேச்சை வேட்பாளராக 1957 இல்  வட சென்னை மக்களவைத் தொகுதியின் மக்களவை உறுப்பினராகத் MP ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார்

Thursday, September 22, 2022

Hemp ஹெம்ப் வளரும் நாடுகளை வாழவைக்க போகும் பயிர்

ராதா மனோகர் : ஹெம்ப் செடியை பற்றி இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி டயானா கமகே MP பேசுகிறார்
ஆனால் பலருக்கும் இது பற்றிய புரிதல் இல்லாமல் இதை கஞ்சா செடி என்று கூறி மலின படுத்துகிறார்கள்  
எனவே இது பற்றிய சில உண்மைகளை இங்கே தெளிவு படுத்த முயல்கிறேன்
ஹெம்ப் செடியின் வகைகளில் ஒன்றுதான் கஞ்சா செடி . ஆனால் இரண்டும் ஒன்றல்ல
பெட்ரோலிய உற்பத்திக்கு ஒரு சரியான மாற்றாக விளங்குவது ஹெம்ப் செடியின் மூலம் பெறப்படும் பயோ டீசல்தான் . இது உலகம் ஏற்றுக்கொண்ட உண்மை
இதனால்தான் பெட்ரோலிய கம்பனிகள் நீண்ட காலமாக ஹெம்ப் கஞ்சாவின் தன்மை கொண்டது என்ற பிரசாரத்தை தங்களின் போலி ஆராய்ச்சியாளர்கள் மூலம் பரப்புரை செய்து பல தசாப்தங்களாக தடுத்து வைத்திருந்தார்கள் . தற்போது அந்த தடை மேற்கு நாடுகளில் இல்லை .

Tuesday, September 20, 2022

சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் ..1912 ஆம் ஆண்டு வெளியான விஜயபானு


 சிங்கள தீவினுக்கோர் பாலமைப்போம் என்று பாரதி பாடியது அவரின் தீர்க்க தரிசனம் என்று அவ்வப்போது ஒரு கதை அளக்கப்படுகிறது உண்மையில் அது அப்போது பத்திரிகைகளில் வந்த செய்தியாகும் . தீர்க்க தரிசனம் அல்ல!
  அதன் விபரங்களை கொஞ்சம் பாப்போம்
பாரதியார் காலமானது 1921 ஆண்டாகும்.
1912 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து வெளியான விஜயபானு என்ற தமிழ் பத்திரிகையில் இது பற்றிய ஒரு செய்தி இருக்கிறது   அப்பத்திரிகையில் இந்திய இலங்கை செய்திகள் பல இருக்கிறது
அதில் ஒரு செயதியின் தலையங்கமே
இலங்கை இந்திய புகையிரத பாதை என்பதாகும்
அதன் முழு செய்தி இதுவாகும்
இலங்கை இந்திய புகையிரத பாதை
இப்பாதை வேலையை இலங்கை அரசாட்சியார் தீவிரமாய் முடித்து வருகின்றர்.
தலைமன்னாரிற்கும் மன்னாரிற்கும் இடையிற்றான்  தாமதமிருக்கிறது.

Friday, September 16, 2022

ஈழகேசரி - 21 - 6 - 1936 : மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்


 ஈழகேசரி - 21 - 6 -  1936  :   மனித உயிருக்கு மதிப்பில்லாத நாடு கொலைக்களமாக மாறிவரும் யாழ்ப்பாணம்
எதற்கும் கத்தியை உருவும் எமகிங்கரர்
படித்த பதர்கள் இயற்றும் படுகொலைகள்
புத்திசாதுர்யம் நிறைந்த பொய் சாட்சிகள்
கைலஞ்சம் வாங்கும் கிராம அதிகாரிகள்
அரசாங்கம் கவனிக்க வேண்டிய அதி முக்கிய அம்சங்கள்
பயங்கரமான படுகொலைகளும் பலிகளும் இலங்கையில் முக்கியமாக யாழ்ப்பாணத்தில் தினே தினே அதிகரித்த வண்ணமாக இருக்கிறது

Sunday, September 11, 2022

மகாத்மா காந்தி யாழ்ப்பாணம் சுன்னாகம் திராவிட வித்தியாசாலைக்கு 27 - 11 - 1927 இல் அஸ்திவாரக்கல் நாட்டினார்.

யாழ்ப்பாணதில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த திராவிடன் பத்திரிகையின் 27 - 11 - 1927 ஆம் தேதி இதழில் இந்த செய்தி பதிவாகி இருக்கிறது .


 இலங்கைக்கு மகாத்மா வந்து திரும்பிவிட்டார்
மகாத்மா காந்தியவர்கள் தமது மனைவியார் பரிவார சகிதமாக இலங்கைக்கு வந்து யாழ்ப்பாணம் நாலு நாள் தங்கி இந்தியா திரும்பி விட்டனர்.


இதுமாதிரி இலங்கைக்கு இதுவரையும் வந்து  போன  .மற்றெவருக்காயினும் மகாத்மாவுக்கு காட்டப்படும் மரியாதையும் அன்பும் உபசாரமும் காட்டப்பட்டதே இல்லையெனலாம் .
மாகாத்மாவிற்கு இலங்கையில் வேண்டிய வசதிகள் யாவும் செய்து சந்தோஷமாக்கும்படி இந்திய பிரதி காவலர் இலங்கை தேசாதிபதியை கேட்டுக்கொண்டபடி தேசாதிபதியவர்கள் தனது மாளிகைக்கு அழைத்து விருந்திட்டு உபசரித்தார்.
மகாத்மா இலங்கைக்கு சென்றவிடமெல்லாம் மக்கள் அவரை தரிசித்தற் பொருட்டும் அவரின் பிரசங்கத்தை காதினாற் கேட்டற்கும் பதினாயிர கணக்கானோர் கூடி காந்திக்கு மனமுவந்து 60000 ரூபா வரையிற் கொடுத்திருக்கின்றனர்

Friday, September 9, 2022

சிங்கள மக்களின் மரபணு கூறுகள் தென்னிந்திய தமிழர்களின் (69.86% +/- 0.61) வீதம் பொருந்தியுள்ளது.

 pubmed.ncbi.nlm.nih.gov  இலங்கை மக்களின் மரபணு தொடர்புகள் -
இலங்கை மக்கள்தொகையின் தொன்மவியல் மற்றும் வரலாற்று ஓவியங்கள் அது பன்முகத்தன்மை வாய்ந்தது,
 மற்றும் பல்வேறு இனக்குழுக்களைக் கொண்டது என்பதைக் குறிக்கிறது.
543 இல் தீவின் வடமேற்கு கடற்கரைக்கு வந்த இளவரசர் விஜயாவின் புராணக்கதையுடன் சிங்களவர்களின் தோற்றத்தை இலங்கையின் பண்டைய நாளேடுகள் தொடர்புபடுத்துகின்றன.
வடகிழக்கு அல்லது வடமேற்கு இந்தியாவிலிருந்து. மேலும், கடல்வழிப் பாதைகளில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளதால்,
இந்தியா உட்பட உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் (குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவிலிருந்து) மக்களின் தொடர்ச்சியான வருகையைப் பெற்றுள்ளது.
இலங்கையின் தொன்மவியல், வரலாற்று மற்றும் மொழியியல் பதிவுகளை கருத்தில் கொண்டு, இலங்கையின் தென், வடகிழக்கு மற்றும் வடமேற்கு இந்தியா, மத்திய கிழக்கின் மக்கள்தொகையுடன், இலங்கையின் சனத்தொகைக் குழுக்களிடையே மரபணு வேறுபாடு மற்றும் மரபணுக் கலவையின் அளவை ஆய்வு செய்ய முயற்சிக்கிறேன். pubmed.ncbi.nlm.nih.gov

Tuesday, September 6, 2022

இலங்கை சிங்கள மக்களில் பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.

 


ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள சிங்களவர்கள்  பெரும்பான்மையோர் தென்னிந்தியாவில் இருந்து குடிபெயர்ந்தவர்கள்.
சைவ வைணவர்களின் கொடுமைக்கு அஞ்சி இலங்கைக்கு குடிபெயர்ந்த திராவிடர்கள் தங்கள் பௌத்த மதத்தை காப்பதற்காக சிங்கள மொழியை பயன்படுத்தினா
ர்கள்   காலப்போக்கில் அது அவர்களின் தாய் மொழியானது
இது எல்லோருக்கும் தெரிந்த உண்மையாக இருந்தாலும் பலரும் பொதுவெளியில் ஒப்புக்கொள்வதில்லை
தொடர்ந்து பல நூற்றாண்டுகளாக தமிழ் அரசர்களும் அவர்களை போலவே கடும் போக்கை கொண்டிருந்த  தமிழ் தேசியர்களின் வரலாற்று பின்னணியில் இருந்து இதை நோக்கவேண்டும் என்று கருதுகிறேன். 
எப்போதும் பிற சமூகங்களை இழிவாக கருதும் ஒரு இனவாத போக்கு தமிழர்கள் மத்தியில் பரவியதும் ஒரு காரணமாக  இருக்கலாம்
:" நானூறு ஆண்டுகளுக்கு முன்பு எனது முன்னோர்கள் இந்தியாவில் இருந்த வந்த தமிழர்கள்தான் . நான் இப்போது சிங்களவன் . இதில் என்ன தவறு இருக்கிறது?"

இப்படி கூறியவர் ஒரு சாதாரண மனிதரல்ல . இலங்கை அரசியலில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக நீண்ட காலம் உச்சத்தில் கோலோச்சிய ஒரு பெரும் அரசியல் தலைவராகும்.
இலங்கையின் நீர்ப்பாசன திட்டங்களின் தந்தை என்று கூறக்கூடிய அளவு நீர்ப்பாசன மின்சக்தி அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் இன்னும் பல்வேறு பொறுப்புக்களை அரசியலிலும் அரசு நிர்வாகத்திலும் தனது திறமையை நிரூபித்த தலைவர் கௌரவ சி பி டி சில்வா அவர்களே இந்த கூற்றை கூறியிருக்கிறார்
இலங்கை தமிழ் அரசியலில் மிகபெரும் ஆளுமையாக அறியப்பட்ட திரு வி நவரத்தினம் அவர்களிடம் தான் இந்த கூற்றை திரு சி பி டி சில்வா கூறியிருக்கிறார் .  வி நவரத்தினம் கூறுகையில்,  சி.பி. டி சில்வா - ஒருமுறை எங்களில் சில - தமிழ் எம்.பி.க்களிடம், 'என்னைப் பாருங்கள். நானூறு ஆண்டுகளுக்கு முன்பு என் முன்னோர்கள் இந்தியாவில் இருந்து வந்த தமிழர்கள். நான் இப்போது சிங்களவன். அதில் என்ன தவறு இருக்கிறது. ?'" தமிழ் தேசத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் பக்கம் 130.

Friday, September 2, 2022

நல்லூர் கோயில் வழக்கு! தீர்ப்பு - முழுவிபரம் . part 5 - last part

நல்லூர் கோயிற் பரிபாலனைத்தை பற்றிய தீர்ப்பு - முழுவிபரம்
 யாழ்ப்பாணம் பெரிய நீதிஸ்தலத்தில் நல்லூர் கந்தசாமி கோயிற் பரிபாலன முறையை பற்றி 2 ஆம் பிரிவு வியாச்சியத்திற்கு மேற்படி நீதிபதியவர்கள் பின்வருமாறு தீர்ப்பு செய்தனர்.
இத்தீர்ப்பில் கோயிலதிகாரியினுடைய கடமைகள் வரையறுக்கப் பட்டிருத்தலோடு மேற்படி அதிகாரிக்கு துணை செய்வதற்கு கல்வி அறிவும் ஒழுக்கமுற்ற இன்னுமொருவர் (கமிஷனர்) நியமிக்கப்படல் வேண்டும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது
1 குறித்த கோயிலதிகாரி இரு லேககர்களை ஏற்படுதல் வேண்டும். அவர்களுடைய மாச வேதனம் 35 ரூபா தொடக்கம் 50 ரூபா வரை கொடுக்கப்படும் ..  


இந்த லேககர்களில் ஒருவர் கோயிலதிகாரியாலும்  மற்றவர் கமிஷனராலும் நியமிக்க படல் வேண்டும் .ஆனால் இரு லேககர்களும் கோயிலதிகாரி   கமிஷனர் ஆகிய இருவருக்குடைய கட்டுப்பாட்டுகள் அமைந்து நடத்தல் வேண்டும்.

Tuesday, August 30, 2022

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1928 - part 4

 ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம்
மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம்
கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும்
அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம்
நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம்
எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக
கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன்.
உமது தகப்பனார் அங்கே இருந்தவரா? மண்டைதீவில் இருந்தவர்
உம்முடைய மனைவி பகுதியார் கிரமமாய் கோயிலுக்கு போகிறவரல்லவா ?  ஆம்  மாமனாரும் (பெண் தந்த) ஒரு பிரசித்த நொத்தாரிசாக இருந்தவர் . சங்கரப்பிள்ளை அவர் மூலமாகவே பல உறுதியை முடிப்பித்து இருக்கிறார்
சங்கரப்பிள்ளையை உமக்கு நேரே தெரியுமா? ஆம்
 இந்த் மாப்பாணர் குடும்பத்தில் உம்முடைய காலத்திலுள்ளவர்களை உமக்கு தெரியுமா? ஆம்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3

இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர் . பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார்.
அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை
 அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்
அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம்
அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று  , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று  மேற்கில் உள்ளதொன்று.
 மூன்றாவது காணி 13 ஆம் திருவிழா செலவிற்கு ஒருவரால் தரும சாதனஞ்செய்ய பட்டது . 50 பரப்பு கொண்டது
நீங்கள் குடியிருக்கும் வளவு ஊரவர்கள் தந்ததல்ல? இல்லை
பூந்தோட்டம் இருக்கும் வளவுக்கு பெயரென்ன? குருக்கள் வளவு
 தோம்பிலே குருக்கள் வளவு என்று சொல்லப்பட்டது எதனை? மேற்கு தெருவின் மேற்புறத்துள்ள நிலத்தை
தோம்பிலே குறிக்கப்பட்ட நிலம் இதுதான் என்று காட்ட உம்மால் முடியுமா? முடியாது

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம்
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று  முந்தி சொன்னீரா?  இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது
ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை
பொதுக்கோயில் என்ற எண்ணத்திற்றானே ஊரவர்கள் ஏதும் தானம் செய்து வந்தார்கள்? இல்லை
1916 இற்கு முந்தி கோயிற் பரிபாலனத்தை பற்றி ஒரு உறுதியுமில்லையல்லவா?  ஒரு உறுதி முன்பிருந்து ஆனால் இப்போது எங்கள் கைவசம் இல்லை
நீதிபதி : என்ன உறுதி ? கோயிலிருக்கும் நிலத்தை பற்றிய உறுதி
ஸ்ரீ குலசிங்கம் : கோயிற் பரிபாலனத்தை பற்றிய முதல் உறுதி உம்முடைய தாயாரால் 1916 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதா? ஆம் தாயாரும் தமையனாரும் சேர்ந்து முடித்த உறுதியாகும்

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -- இந்து சாதனம் பத்திரிகை

நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம்  6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா?  இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார்  முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை
டாக்குத்தர் கந்தையா சில துஷ்டர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு குடிக்க கொடுத்து கலக்கம் விளைவிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுது எனது தகப்பனாரும் சிலரை வைத்திருந்தார்
உமது தகப்பனார் கோயிலடியில் கலகத்திற்காக ஆள் சேர்த்ததுண்டா?

Friday, August 19, 2022

இலங்கை சீனா ரப்பர் அரிசி பண்டமாற்று 70 ஆண்டு நிறைவு rubber-rice barter agreement with China

 ராதா மனோகர் :   இலங்கை சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது
இப்போது இருக்கும் பெரும்பாலான விவசாய குடியேற்றத்திட்டங்கள் அப்போது இருக்கவில்லை
அரிசி தட்டுப்பாடு பயங்கரமாக இருந்தது   அன்று இந்தியாவின் உணவு உற்பத்தியும் மிக மோசமான நிலையிலேயே இருந்தது  இந்த பின்னணியில் இலங்கையின் அரிசி தேவையில் சீனாவின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று தெரிந்து கொள்வது நல்லது  
அன்று சீனா மாவோ தலைமையில் அமைந்த ஒரு தீவிர கம்யூனிச தேசமாக கருதப்பட்டது  பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவே இல்லை   


 அன்று இலங்கையின் அரிசி தேவையை நிறைவு செய்யகூடிய ஒரு நிலையில் சீனா இருந்தது . இலங்கையின் ரப்பர் சீனாவுக்கு தேவையாக இருந்தது ஆனால் அமெரிக்க பிரிட்டன் இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை சீனாவோடு ஒரு வியாபார ஒப்பந்தம் செய்ய முயலும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத நிலைமை இருந்தது ..
இந்த பின்னணியில் இருந்து ரப்பர் அரிசி டீல் பற்றி தெரிந்து கொள்வது நல்லது  
ஆசியா டைம்ஸ்   : 1952  October 4 இல் இலங்கை அரசு மிகவும் துணிச்சலாக சீனாவுடன் ரப்பர்-அரிசி பண்டமாற்று ஒப்பந்தம் செய்து கொண்டது

Sunday, August 14, 2022

யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி சில முக்கிய செய்திகள்.. 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்..


 ராதா மனோகர்
  :  யாழ்ப்பாண பல்கலை கழகம்   உருவான வரலாறு பற்றி பல செய்திகள் இன்னும்  பொது வெளிக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டும்பொழுதே அவை ஒரு பல்கலை கழகமாக உருவாக்கி வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் என்று அவரின் செயலாளராகவும் அன்பு நண்பராகவும் இருந்த மறைந்த திரு சங்கரப்பிள்ளை அய்யா அவர்கள் தனது அந்திம காலங்களில் பலரிடம் கூறியிருக்கிறார்.
அடியேன் சிறுவயதில் அவரின் வீட்டிற்கு செல்வதுண்டு . சங்கரப்பிள்ளை அய்யாவின் மகன்தான் திரு பண்டிதர் ராமச்சந்திரன் அவர்கள்  பன்மொழி திறமையும் பேரறிவும் கொண்டவர்  
திரு ராமச்சந்திரனை பார்க்கவும் பேசவும் கூட்டங்கள் அலைமோதும்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவனாக அடியேனும் இருந்திருக்கிறேன்
யாழ்ப்பாண பல்கலை கழகத்தை பற்றி சேர் பொன்னம்பலம் ராமநாதன் கண்ட கனவு பற்றி நான் அறிந்தது அந்த காலங்களில்தான்.

Saturday, August 6, 2022

அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!

ராதா மனோகர்

ஈழகேசரி .  யாழ்ப்பாணம்  .. 25 - 05 - 1952
அமெரிக்கா  தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா?  தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
 சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மானிப்பாயில் நடைபெற்ற  ஒரு கூட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அபேட்சகரான திரு  சி வன்னியசிங்கம் தமிழரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்க கூடிய ஒரு விடயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார் என அறியக்கிடக்கின்றது
கொழும்பில் உள்ள அமெரிக்கன் எம்பசி என்ற அமெரிக்க ஸ்தானிகர் காரியாலயத்தினர் தமிழரசு கட்சியினரை ஒரு விருந்து உபசாரத்திற்கு அழைத்தார் என்றும் தமிழரின் எதிர்காலத்தை பற்றி தமிழரசு கட்சியினருடன் அமெரிக்கர் சம்பாஷித்தனர் எனவும்  திரு சி வன்னியசிங்கம் மானிப்பாய் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரியவருகிறது.
 தமிழர் பிரிந்து வாழ்வதாயின் அமெரிக்க உதவ முன்வரும் என்றும் அவர்கள் கூறினார்களாம்.
இவ்விஷயத்தை அமெரிக்க கலாச்சாரத்தில் நல்ல பரிச்சயம் வாய்ந்த திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியினரால் நடப்படும் பத்திரிகை (சுதந்திரன்) காரியாலயத்திற்கு சென்று தெரிவித்தபோது அப்பத்திரிகையை நடத்துபவர்கள் (எஸ் டி சிவநாயகம்) தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கரிடம் தாரைவார்த்து கொடுப்பது அபாயகரமானது என்று நெருப்பெடுத்தார்கள் என பேசப்படுகிறது.

Friday, July 29, 2022

தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா!


 ஈழநாடு 7 - 6- 1961 யாழ்ப்பாணம்
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி ( திரு அல்பிரட் துரையப்பா) நடவடிக்கை
தமிழ் பேசும் பிரதேசங்களில் ஒரு கவின் கலைக்கல்லுரியும் ஆயுர்வேத வைத்திய நிலையமும் வானொலி நிலையமும் நிறுவப்பட இருக்கிறது.
இவைகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த நிதியாண்டுக்குள் நிறுவப்படலாம்.
இதற்கான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்று யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா பத்திரிகைக்கு விட்டுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
திரு அல்பிரட் துரையப்பா அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மொழி உரிமைக்காக போராடிவரும் அதே வேளையில் எமது தேவைகளையும் எமக்கு கிடைக்க கூடிய உதவிகளையும் உரிமையோடு பெற்று கொள்வது அவசியமாகும்
கிடைக்கக்கூடிய உதவிகளை கைவிடாது நமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்
அவர் தமது தொகுதிக்கு இவ்வாண்டில் செய்து முடிக்கவிருக்கும் வேலைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவையாவன:

Wednesday, July 27, 2022

யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலி கட்டுரை

 


யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலியாக இந்த கட்டுரை
திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ் மேயர் பதவி கால சாதனைகளை மக்கள் அறிந்திருக்கும் அளவுக்கு அவர் யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய வரலாறு பொதுவெளிக்கு மறைக்க படுகிறது   அவை இனி ஒவ்வொன்றாக வெளிவரும்  அந்த வகையில் வெளிவரும் முதல் செய்தி இதுவென்று எண்ணுகிறேன் .

ஈழநாடு 18 - 3- 1961 யாழ்ப்பாணம்
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு   முதல் வெற்றி!
சத்தியாகிரக எம்பிக்களுக்கு 3 மாத ரஜா (அதாவது விடுமுறைங்கோ  ஹரிஹர சர்மாவின் தமிழ் இதுதானுங்கோ)
சத்தியாகிரகம் செய்யும் தமிழரசு கட்சி எம்பிக்களுக்கு பார்லிமெண்டு சபை இவ்வாரம் மூன்று மாத ராஜா அளித்திருக்கிறது
அவர்களுக்கு இந்த ராஜாவை கொடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண தொகுதி பிரதிநிதி திரு அல்பிறெட் துரையப்பா (சுயேட்சை)  ஒரு பிரேரணையை கொணர்ந்தார்.

Monday, July 4, 2022

எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு! .. இலங்கை தமிழர்

ராதா மனோகர் : திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர்  ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் (Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும்  பிறந்ததாக தெரிகிறது .. இவரின்  மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம்  வாழ்க்கை முழுவதுமே  தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,

இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது  24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.

சிங்கள மொழியானது பார்பனீயத்திடம் இருந்த பௌத்தத்தை பாதுகாத்த ஒரு மொழி!

 ராதா மனோகர் : இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக  இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில்  நிசங்க மன்னரின்  ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர்  இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில்  3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக  7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்களின் மீது உலோக துகள்கள் படிமங்களாக இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சிங்கள மொழியானது இலங்கை முழுவதும் வட்டார பேதங்கள் இன்றி பேசப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும் ஆதாரமாக இந்த கல் புத்தகம் இருக்கிறது என்று கருதப்படுகிறது

Sunday, July 3, 2022

இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இந்திய அரசும் அரசும் இருந்திருக்கிறதா?


 ராதா மனோகர்
  : இலங்கை தமிழர் அரசியலில் மீண்டும் மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
திரு செல்வநாயகமும் திரு நாகநாதனும் கதை வசனம் எழுதி  அரங்கேற்றிய இந்த நாடகம் இன்றுவரை தொடர்கிறது
திரு சுப்பையா பிள்ளை நடேச பிள்ளை என்றவரில் இருந்து பல விடயங்களை நோக்க வேண்டி உள்ளது
எல்லோரும் வசதியாக இவரை மறந்து விட்டுத்தான் அரசியல் வரலாறு பற்றி பேசுகிறார்கள் அல்லது கதை அளக்கிறார்கள்.
இவர் காங்கேசன் துறை எம்பியாக சுதந்திரத்திற்கு முன்பு இரு தடைவைகள் இருந்தார்
சுதந்திரத்திற்கு பின்பு 1952 இல்  காங்கேசன் துறை தொகுதியில் இருந்து செல்வநாயகத்தையே தோற்கடித்து   எம்பியானார் . அதன் பின்பு ஐக்கிய தேசிய கட்சி அரசில்  அமைச்சரானார்
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் . ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனை நிகழ்ச்சி நிரலிலும் பங்கு பற்றியவர்.
இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் அங்கு நகராட்சி கவுன்சிலராகவும் இருந்தவர்  இவர் சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகனாகும்
மேலும் இவர் இலங்கை அமைச்சராக இந்தியாவுக்கு சென்று  யாழ்ப்பாண புகையிலை வர்த்தக தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டு அதை சாதித்தவர்  
இதுவரை காலமும் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை நீக்கம் பற்றி இவரது பங்கு பற்றி எவரும் ஏன் குறிப்பிடுவதில்லை?

Friday, July 1, 2022

இலங்கை திராவிட முன்னேற்ற கழக தடைக்கு எதிராக திரு அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை

 ராதா மனோகர் : . 22.07.1962  இல் ஆட்சியில் இருந்த ஸ்ரீ மாவோ தலைமையிலான அரசு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்வதாக அறிவித்தது . இந்த தடைக்கு எதிராக   நாடாளுமன்றத்தில் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். வவுனியா எம்பி சிவசிதம்பரம் உட்பட பலர் இதை கண்டித்து உரையாற்றினார்க்ள
திரு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்  
...
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க
வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய
மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக்
கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக்
கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட
எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.

Tuesday, June 21, 2022

1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த விளம்பரம் .. யாழ்ப்பாணம்

 ராதா மனோகர் :  1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த
விளம்பரம் ஒரு நையாண்டி வகையை சார்ந்தது போல் தோன்றுகிறது ..
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் பல பெரியவர்கள் எப்படிப்பட்ட மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த விளம்பரம் மூலம் காட்டுவதாக தெரிகிறது ..பிரபுக்களுக்கு ஐந்து ரூபாய் பரிசு அறிவிக்கிறார்கள்
 "விளம்பரம்"
தமிழர் ஐக்கியம்
இலங்கையில் வாழும் சிங்களர் தமிழரின் ஐக்கிய விஷயமாக பாக்களியாற்றி பரிசு பெற்ற ஸ்ரீ வே தா தியாகராஜ பிள்ளை போன்றவர்கள் பெரியவர்களுக்கும் பிரபுக்களுக்கும் அறியத்தரும் விளம்பரமாவது .
தமிழ் மக்கள் தம்முள் ஒருவரை தாழ்த்தியும் ஒடுக்கியும் மிருகங்களில் கேவலமாக நடத்துவதை நிராகரித்தும் தமிழ் மக்களாகிய தம்முள் வித்தியாசம் இன்றி ஐக்கியம் வேண்டுமென்பதாக பாக்கள் அல்லது வியாச மூலமாகவேனும் எழுதி ஆவணி 30 ந் திகதிக்குள் அனுப்பும் வியாசங்களை ஏற்று தகுதி எனக்கண்டு 5 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் எனத்  தெரிவிக்கிறோம்.
இங்கனம் திராவிடன் ஆபீஸ்
சுன்னாகம் 

Monday, June 20, 2022

ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்

ராதா மனோகர்  ஹென்றிச் ஹிம்லர் ..  மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய  இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும்   எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு   வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது  ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்
1900 ஆம் ஆண்டு அக்டொபர்  மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான்  
தனது குடும்பதில் இருந்த அரச குடும்ப தொடர்புகளால் இவன் அதிகாரவர்கத்திற்கு நெருங்கி இருந்தான்
படைகளில்  சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினான்
தனது 17 வயதில் கடற்படையில் ஒரு அதிகாரியாக  சேர்வதற்கு முயன்றான்
ஆனால் கண்பார்வை குறைவு காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை
பின்பு ராணுவ பயிற்சி கூடத்தில்  சேர்ந்தான் . பயிற்சி காலம் முடிவடையும் காலத்தில் முதலாவது உலக யுத்தம் முடிவடைந்திருந்தது

Monday, June 6, 2022

திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை

 ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!   
இந்த  நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும்  .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.  
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.   
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.  
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.

Sunday, June 5, 2022

திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்

 ராதா மனோகர் : குட்டாப்பிடி என்ற தோட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றிய செய்தி இது
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது  
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்
எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின்  தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்

அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு   5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்

பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது
இவர்கள் நமது தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் அல்லவே என்ற எண்ணம் கொஞ்சம் கூட திரு தொண்டைமானுக்கு இருக்கவில்லை.
கவலைப்படாதீர்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்று வாக்குறுதி அள்ளித்தர தொண்டமான்