Monday, May 18, 2026

யாழ் பொதுசன நூலக தீவைப்பு - வட்டுக்கோட்டை எம்பி தியாகராசா கொலை - யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!

No photo description available.

யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!
1981 மேமாதம் 30 ஆம் தேதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில்
தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது
யாழ் மேயர் ராஜா விசுவநாதன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்த கூட்டத்தில் பாதுகாப்பு கடமையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்
அங்கிருந்த ஒரு தேநீர் கடை (bench) வாங்கில் நான்கு போலீசார் உட்கார்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கிறார்கள்
எங்கிருந்தோ வந்த சில தமிழ் பயங்கரவாதிகள் அந்த போலீஸ் மீது சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள்.
அதில் புஞ்சி பண்டா என்ற சிங்கள சார்ஜன்டும் கனகசுந்தரம் என்ற தமிழ் சார்ஜன்டும் இறந்து விடுகிறார்கள்
கான்ஸ்டபில்கள் உஸ்மான் குலசிங்க ஆகியோர் மீதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. நல்வாய்ப்பாக அவர்கள் தப்பி விட்டார்கள்.
Sergeant Punchi Banda and constable Kanhagasuntharam died and constables Usman and Kulasinghe were wounded.
தமிழர் விடுதலை கூட்டணியால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த விஷ செடிகள்தான்,May be an image of text
தமிழர் விடுதலை கூட்டணி தேர்தல் ஆயுதங்கள்.
அதிலும் இவர்களில் தலைவராக இருந்தவர் முன்பு தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராக வேறு இருந்தவர்.
இதே நபர்கள் இந்த சம்பவத்திற்கு ஐந்து நாட்கள் முன்பாக (25 மேமாதம் 1981) வட்டுக்கோட்டை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் தியாகராசாவை சுட்டு கொன்றிருந்தார்கள்.
திரு ஆறுமுகம்  தியாகராசா அவர்கள் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி அதிபராக இருந்தவர். பின்பு தமிழ் காங்கிரஸ் சார்பில் (1970 இல்) வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தோற்கடித்திருந்தார்.