Friday, December 9, 2022

தமிழ்நாட்டு பார்ப்பனீயமும் .. யாழ்ப்பாணத்து ஜாதீயமும் !

Dhinakaran Chelliah  :  சாதி வாங்கலையோ சாதி!
தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் ஆதிக்கம் எப்படியோ,அப்படித்தான் யாழ்ப்பாணத்தில்.
வெள்ளாளர்களின் ஆதிக்கமும்.
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான இடைநிலைச் சாதிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் “யழ்ப்பாணக் குடியேற்றம்” எனும் ஆய்வு நூல்.
கேரளம், ஆந்திரம், கன்னடம், துளுவம், கலிங்கம்,
ஒரியா, என பல பிரதேசங்களிலிருந்து மக்கள் குடியேறிய பகுதியே யாழ்ப்பாணம் என்பதை மிகத் தெளிவாக “யாழ்ப்பாணக் குடியேற்றம்”ஆய்வு நூல் ஆசிரியர் திரு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்
(முதற் பதிப்பு 1982).கேரளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு பற்றி இந்நூல் தரவுகளுடன் குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு நூலை எழுதுவதற்கு 36 தமிழ் நூல்களையும்,5 வடமொழி நூல்களையும்,36 ஆங்கில நூல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர் சென்னை லொயாலாக் கல்லூரி தலைமைத் தமிழ் விரிவுரையாளர் மற்றும் இளைப்பாரிய அராவி இந்துக் கல்லூரி அதிபருமாவார்.

Wednesday, December 7, 2022

New menace to lanka Ceylonese party with indian interests by J R. Jayavardana 2 may 1947 UNP party paper

 

The news that Dr.Colvin R de Silva and Mr.S.C.C.Anthonipillai  were arrested in India for participating in strike of  labourers of one of the largest textile mills in south India is an event of passing more than interest.
i do not think  we need to go in to the merits of the strike. For though it is notorious that indian workers are very poorly paid  in comparison with the wages paid in Ceylon. We have not the information nor the power to interfere in a matter coming with in the province of Madras Government
What concern us is the strike, ostensibly under the leadership of the Madras labour party, Is control by the Bolshvic Leninist Party of India.
Four of Whose leaders in India are Ceylonese. Namely Dr.Colvin R.De Silva , Mr.Leslly Gunavardana, Mr. S.C.C.Anthonipillai and Mrs. Carolin Anthonipillai
This then is an Indian political party   
It work lies mainly with Indian workers. To establish itself it must work for and put in the forefront the interest of Indian workers.
Their objects are no doubt  laudable. They follow in  the tradition of Mahatma Gandhi and Pandit Nehru .Who have devoted their life to raising Indian masses ,including worker from poverty and misery.
Similar movements exists in other countries too.
In Ceylon we have the labour party and various socialists parties which have worked  for several years to improve lot of the workers.

Friday, December 2, 2022

சித்ரா சுப்பிரமணியம் (ஆர் எஸ் எஸ்) இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.


ராதா மனோகர்
: Mrs .chitra subramaniam duella  சித்ரா சுப்பிரமணியம் ஒரு இந்திய பத்திரிகையாளர்.
ஆர் எஸ் எஸ் இன் எடுபிடியாக செயல்பட்ட இந்த பெண்மணியை பற்றி பொதுவெளியில் அதிகம் பேசப்படுவதில்லை.   
இவர்  சுவிஸ்லாந்தை சேர்ந்த  டாக்டர் கியான்கார்லோ டூல்லா  என்பவரை வாழ்க்கை துணையாக்கி கொண்டார்.
இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள் . இவர்கள் சுவிஸ்லாந்தில்தான் வசிக்கிறார்கள்
இவர் முன்பு இந்தியா டு டேயில் ( india today) வெளிநாட்டு   செய்தியாளராக பணியாற்றினார்.
2017 ஆம் ஆண்டில் அர்னாப் கோஸ்வாமி தொடங்கிய ரிபப்ளிக் செய்தி சேனலில் அவரோடு சேர்ந்து கடும் பணியாற்றி வருகிறார்.
இன்றும் இதே பாணியில்  ஆர் எஸ் எஸ் நோக்கங்களை நிறைவேற்றி கொண்டே இருக்கிறார்.

Thursday, December 1, 2022

இலங்கை தமிழரசு கட்சியின் திராவிட இருட்டடிப்பும் அதன் விளைவுகளும்

Radha Manohar :  இலங்கை சுதந்திரம் அடைந்த காலக்கட்டத்தில் இலங்கை தமிழர்களிடையே ஒரு பொது அரசியல் மேடையே உருவாகி இருக்கவில்லை .
அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தல்களில் வேட்பாளர்களின் தனிப்பட்ட குணங்கள் செல்வாக்கு போன்றவற்றின் அடிப்படையிலேயே அவர்கள் தெரிவு செய்யப்பட்டார்கள்.
குறிப்பாக தமிழ் சிங்களம் என்ற பிரிவு பேதம் வெறுப்பு எதிர்ப்பு போன்றவை இருக்கவே இல்லை.
சுதந்திர இலங்கையின் முதலாவது நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி தமிழர்களின் நலன்களை முன்னிட்டு உருவான கட்சி .
அதன் தலைவராக திரு ஜி ஜி பொன்னம்பலம் இருந்தார் அவரால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட பலரில் எஸ் ஜெ வி செல்வநாயகம் ஜான் ஜெபரத்னம்  நாகநாதன் போன்றவர்களும் அடங்குவர்.
தமிழ் காங்கிரஸ்  கட்சியின் ஆதரவு தளம் என்பது பெரும்பாலும் நீண்ட பாரம்பரியம் கொண்ட சைவ கனவான்களின் ஆதிக்கத்திலே இருந்தது.
இந்த சைவ அரசியல் ஆதிக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு செல்வநாயகம் நாகநாதன் போன்றவர்கள் எடுத்த முயற்சிதான் இலங்கை தமிழரசு கட்சியின் தோற்றம் என்று கருதுகிறேன்

புதிய தமிழ் அரசியல் கட்சியை இவர்கள் உருவாக்கியதற்கு   மலையக வாக்குரிமை பறிப்பே காரணம் என்று இவர்கள்  கூறினாலும்,