Sunday, April 13, 2025

உலக சுயமரியாதை கழகம் தொடங்கப்பட்டுள்ளது

ராதா மனோகர் : ஜாதி வியாதிக்கு ஒரே ஒரு மருந்து சுயமரியாதை பிரசாரம்தான்.
இந்தியர்களும் இலங்கையர்களும்  எங்கெல்லாம் புலம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி வியாதியையும் ஓரளவு பரப்புகிறார்கள்.
ஜாதி என்றால் என்னவென்றே தெரியாத மேற்கு நாடுகளிலும் கூட இந்த ஜாதியை கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக அந்தந்த நாடுகளில் உருவாகும் அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் கூட இந்த வியாதியை கடத்துவதில் சிலர் இன்பம் காண்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று  அந்தந்த நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கே கூட இந்த ஜாதியை கடத்தும் முயற்சியும் நடக்கிறது
இந்த ஜாதி அபிமானிகளுக்கு சுயமரியாதை கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை

Tuesday, March 4, 2025

சிங்களத்தில் சிலப்பதிகாரம் சிங்களத்தில் குண்டலகேசி! - திராவிட பௌத்தத்தில் (theravada) தமிழ் காப்பியங்கள் வாழ்கிறது!

 ராதா மனோகர் : சிங்கள சிறுவர்களின் குண்டலகேசி நாடகம்
குண்டலகேசியை தமிழர்கள் கூட மறந்து விட்டார்கள் என்று கருத வேண்டி இருக்கிறது.
கலைஞரின் மந்திரிகுமாரி திரைப்படம் குண்டலகேசி கதையை தழுவியதாக கருதப்படுகிறது.
ுண்டலகேசி தமிழ் காப்பியம் உ வே சாமிநாதையர் அவர்களிடம் இருந்ததாகவும் அது எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டது

Tuesday, January 21, 2025

கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்

 ராதா மனோகர்  : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு  கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்

Saturday, January 4, 2025

சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி! .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEibHOJWUpF_f6jZ_eWqcd5FRjDEaJk8asFTd-Oomx243TLfuavYzXxVvn7gsrobxTTyBCEIJJTUfHIATn5hegV9LIvqvEX1ma01cqdinOPuxyHOm5laQCbqoFJZ0ERwTcKe2q2ikkAiik0/s1600/indexmm.jpg
Subhas chandra bhos  Adolf Hiter

ராதா மனோகர் : சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி!
உண்மையில் ஜவஹர்லால் நெருதான்  சுபாஷ் சந்திரபோஸை யை காப்பாற்றினார்....
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.
அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.