சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Saturday, December 27, 2025
Thursday, December 11, 2025
இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு - இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen -
![]() |
ராதா மனோகர் : இலங்கை (மலையக) இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படும் இந்திய ரெசிடெண்ட் கார்டுகள் Overseas Indian Citizen - துரித படுத்துமாறு செந்தில் தொண்டமான் நிர்மலா சீதாராமனிடம் நேரில் கோரிக்கை!
இந்த கார்ட் ஏற்கனவே இலங்கையில் உள்ள இந்திய தூதரகங்கள் மூலம் வழங்கப்படுகிறது!
இந்த கார்ட் மூலம் இந்தியாவுக்கு விசா இல்லாமல் எத்தனை தடவையும் சென்று வரமுடியும்.
நிரந்தரமாக தங்க முடியும்
நிரந்தரமாக தொழில் செய்ய முடியும்
வியாபாரம் செய்ய முடியும் .
கல்வி கற்க முடியும்!
சொத்துக்களை வாங்கவும் விற்கவும் முடியும்!
தேர்தல்களில் வாக்கு போட முடியாது!
விவசாய நிலங்களை வாங்க முடியாது!
An Overseas Citizen of India (OCI) is a foreign national of Indian origin (excluding Pakistan/Bangladesh) who gets a special lifelong visa and permanent residency status in India, offering benefits like indefinite stay, work/study rights, and financial parity with NRIs, but not political rights (voting/holding office) or agricultural land ownership, essentially a permanent visa/residency for people with Indian roots.
மலையக மக்களின் வாழ்வோடு விளையாடும் சுயநிர்ணய உரிமை கூவல்!
ராதா மனோகர் : இலங்கை மலையக மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று சிலர் கூவ தொடக்கி உள்ளார்கள்!
இதன் மூலம் இவர்கள் என்னதான் கூறவருகிறார்கள்?
எஸ்ஜேவி செல்வநாயகத்தின் வெறுப்பு அரசியலின் மற்றுமொரு பக்கவிளைவுதான் இது!
இலங்கையின் 80 வீத பெரும்பான்மையாக வாழும் சிங்கள மக்களின் வெறுப்பை அறுவடை செய்து வயிறு வளர்க்கும் கும்பலின் கடைந்தெடுத்த கயமை அரசியல் இது!
மலையக சுயநிர்ணய உரிமை என்ற முணு முணுப்புக்கள் அண்மை காலங்களாக கொஞ்சம் உரத்த முழக்கமாக உருமாறுவது தெரிகிறது
துரோகிஸ்தானியர்களின் பணம் இதன் பின்னணியில் இருக்கிறது என்ற சந்தேகம் உள்ளது!
இலங்கை இன மோதல்களில் ஏழைகளை பலிகொடுத்து திருடர்கள் கோடீஸ்வரர்கள் ஆனதைத்தான் கண்கூடாக பாரிக்கிறோமே!
அந்த பாசிச கூட்டத்திற்கு ஒரு கேள்வி!
மலையக சுயநிர்ணய உரிமை என்றால் என்ன?
மலையக மக்கள் மலையகத்தில் தனிநாடு கேட்கிறார்களா?
அல்லது வேறு எதாவது நாடு ஒன்றோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்று கேட்கிறார்களா?
Saturday, November 22, 2025
இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை - வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
Prime Minster Jawaharlal Nehur - Prime Minister D.S.Senanayaka
ராதா மனோகர் : இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான் எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான் எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது
Wednesday, November 19, 2025
திருகோணமலை புத்த சிலை - வழிபாட்டு தலமல்ல ..அது ஒரு உணவகம்
ராதா மனோகர் : இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத ஜாதிவாத சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை.
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.
Friday, November 7, 2025
இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வந்த சுப்பிரமணியம் சாமி . தடுத்த சந்திரஹாசன்
![]() |
![]() |
ராதா மனோகர் : திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் 10 November 1990 – 21 June 1991 காலப்பகுதியில் இந்திய சட்ட அமைச்சராக பணியாற்றினார்!
இந்தியாவில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான காலக்கட்டம்,
(மேலே குறிப்பிட்ட காலப்பகுதியைவிட மேலும் சில மாதங்கள் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் காபந்து அரசிலும் care taker government அதே பதவியில் இருந்தார்)
அப்போதுதான் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முன்வந்தார்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் திரு எஸ் சி சந்திரகாசனிடம் தெரிவித்தார்.
Sunday, November 2, 2025
சோவியத்தின் ஸ்டோர் ரூம் - டெத் ஆப் ஸ்டாலின் சினிமா விமர்சனம்
![]() |
ராதா மனோகர் : சோவியத் ஸ்டோர் ரூம்!
பிரான்ஸ் பிரிட்டன் ஹாலந்து கூட்டு தயாரிப்பான டெத் ஆப் ஸ்டாலின் திரைப்படம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியானது.
லா மோர்த் து ஸ்டாலின் la mort de staline என்ற பிரெஞ்சு வரலாற்று நாவல் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சோவியத் அதிபர் ஸ்டாலினின் Joseph Stalin மறைவும் அதற்கு பின்பு எப்படி குருஷேவ் Nikita Khrushchev பதவிக்கு வந்தார்.
அதுவும் சர்வ வல்லமை பொருந்திய இரகசிய படை தலைவன் பெரியா NKVD head Lavrentiy Beria ஒரு புறம்
ஸ்டாலினுக்கு எல்லா விதத்திலும் இரண்டாவது இடத்தில் இருந்த மலங்கோவ் Deputy Chairman Georgy Malenkov போன்றவர்களையும் மெதுவாக ஒதுக்கி தள்ளிவிட்டு மேலே வருவது என்பது திகைப்பையும் திகிலையும் ஊட்டும் சம்பவமாகும்.
![]() |
ரேசர் பிளேட்டின் மீது நடப்பது போன்ற சாகசம் அது.
கொஞ்சம் தவறினாலும் தலை போய்விடும்
அப்படித்தான் குருஷேவ் அதிபர் பதவியை நோக்கி மேலே நடந்து வரும்போதே பெரியா இதர கூட்டாளிகளால் போட்டு தள்ளப்பட்டார்
அவரோடு அதுவரை கூட இருந்து (ஒரு சமாந்திர அதிகார பீடத்தின்) சோவியத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருந்தவர்களும் போட்டு தள்ளப்பட்டார்கள்.
Thursday, October 30, 2025
ஐந்து இலட்சம் காணி உறுதி மூலபத்திரங்களை அள்ளிச்சென்ற புலிகள் - 1988
01 ஆக்டொபர் 1988 - யாழ் காணிப்பதிவு திணைக்களத்தில் இருந்து
5 இலட்சம் காணி உறுதிகளின் மூலப்பிரதிகள் காணாமல் போய்விட்டன!
காணி மூலப்பதிவேடுகளின் 250 தொகுப்புக்கள் volumes யாழ் காணி பதிவு திணைக்களத்தில் இருந்து சமீபத்திய அசம்பாவிதங்கள் போது காணாமல் போய்விட்டன என்று தெரியவருகிறது.
இந்த பதிவேடுகளில் தொகுப்பு ஒவ்வொன்றிலும் சுமார் இருநூறு காணி மூல பிரதிகள் வரை தொகுத்து வைக்கப்பட்டிருந்தன என்று கூறப்படுகிறது.
இதன்படி யாழ் மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் காணி உறுதிகளுக்கான மூலப்பிரதிகள் காணாமல் போயிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டம் உட்பட யாழ் மாவட்டத்தில் உள்ள காணிகளின் மூலப்பிரதிகள் அடங்கிய இரண்டாயிரத்திற்கும் அதிகமான பதிவேட்டு தொகுப்புக்கள் யாழ்ப்பாணம் காணி பதிவு திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்தன.
Saturday, October 18, 2025
இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை கருவிலேயே கொன்ற திரு அண்ணாமலை வரதராஜ பெருமாள்
![]() |
புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் திரு.வரதராஜ பெருமாள் ஆகும்.
வடகிழக்கு மாகாண சபையை ஒரு தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில் கடுமையாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள்
ஜேவியும் பல இனவாத குழுக்களும் தென்னிலங்கையில் மிக பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்!
காலி மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று கருதும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டிருந்தது.
Wednesday, August 6, 2025
4 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் உண்டாக்கியது தமிழ் குண்டர்கள்தான்
யாழ் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய வரலாற்று சாட்சியங்களை பதிவு செய்யாமல் நாம் அப்படியே கடந்து போக கூடாது.
இன்றுவரை எத்தனை பொய்கள் பொதுவெளியில் உலா வருகின்றது?
ஒரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக எவ்வளவு மோசமான அக்கிரமத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இவர்கள்?
தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரதிற்காக பலி கொடுக்கப்பட்ட அந்த 9 அப்பாவிகளின் சாபம் நீலன் திருச்செல்வம் போன்ற அப்பாவிகளின் தலையில் வந்து விழுந்தது
Navaratnam Giritharan : போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட, அது கலவரமாகியது உண்மை.
அப்பொழுது நான் கோட்டை அகழிச் சுவருக்கண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
Friday, August 1, 2025
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும் - திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்

Punitham Thiruchelvam
ராதா மனோகர் : திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.
![]() |
| Alfred duraiyappa srimavo bandaranayake |
அது மட்டுமல்ல அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் தலைவர் பொது செயலாளர் உட்பட நான்கு தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர்
மறுபுறத்தில் வெற்றி பெற்ற தமிழரசு கட்சியினரும் மிக சொற்ப வாக்குகளால் ( (உ+ம் = 56 - 69) மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் .
இரு கட்சிகளின் பெருந்தலைவர்கள் தோற்றுவிட அந்த இடங்களில் கொஞ்சம் அட்ரஸ் இல்லாத புதியவர்கள் தெரிவாகினர் .
Thursday, July 10, 2025
திரு .அல்பிரட் துரையப்பாவின் தலைமீது எஸ்ஜேவி ல்செவநாயகம் வைத்த முள்கிரீடம்
ராதா மனோகர் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் தமிழரசு கட்சியும் ஏன் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்?
தமிழர்களின் கல்வி சார்ந்த இவ்விடயத்தை வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த வேணடும்,.
தமிழரசு கட்சியின் மேட்டுக்குடி பாசிசம் அம்பலமாகுவதை தெளிவாக காணலாம்!
ஆரம்பம் முதலே யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைவதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இப்போது நம்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.
அந்த அளவு இவர்கள் மோசமானவர்களா என கருத தோன்றும் ,
இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்!
இலங்கை தமிழ் தேசியர்கள் அடிப்படையில் சித்தாந்த ரீதியில் வெறுமையானவர்கள் என்பதை முதலில் ஞாபகத்தில் இருத்தி கொள்ளவேண்டும்.

இவர்களின் வெறுப்பு அரசியல் சித்தாந்தத்திற்கு மக்கள் கல்வி அறிவு பெறுவது என்பது உகந்தது அல்ல என்பதுவும் ஒரு முக்கிய காரணமாகும்..
Tuesday, July 8, 2025
குலக்கல்வியை இலங்கையில் முன்னெடுத்த தமிழரசு கட்சி - எஸ்ஜேவி செல்வநாயகம் - 1960
![]() |
ராதா மனோகர் : குழந்தைகளுக்கு படிப்பிப்பதோடு (குல) தொழிலையும் சொல்லியும் தரவேண்டுமாம்!
குல தொழிலில் என்ன வசை இருக்கிறது ?
1960 ஆம் ஆண்டு எஸ்ஜேவி செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசு கட்சி,
தமிழர் உரிமைக்காக மாபெரும் சத்தியா கிரக போராட்டம் நடத்தியதாக கூறப்படும்,
அந்த காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்தி இது!
அப்போது சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் மகேஸ்வர சர்மா.
குலுக்க பட்டர்களின் அசல் வாரிசுகள் இவர்கள்
அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை அழியவிடாமால் பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு குலத்தொழிலை கற்பிப்பதுதான் ஒரே வழி என்று ராஜாஜி முன்னெடுத்து செருப்படிவாங்கியது வரலாறு!
அன்று ராஜாஜி முன்னெடுத்த குலத்தொழில் சதி முயற்சியை முறியடித்தது திராவிட இயக்கம்!
Saturday, June 21, 2025
திரு அல்பிரட் துரையப்பாவை எதிர்ப்பதற்காக தமிழரசும் காங்கிரஸும் ஒன்று சேர்ந்த வரலாறு
![]() |
![]() |
ராதா மனோகர் : தமிழ் தேசியத்தை தோண்ட தோண்ட கிடைப்பது எல்லாம் சுயநல அடையாள வரலாற்று வடுக்கள் மட்டுமே!
இன்றுவரை
புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் தேசியத்தின் அடுத்த
கட்ட பாய்ச்சல் என்றுதான் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
அது உண்மையில் தேர்தல்களில் தோற்றுப்போன ஏழு தலைவர்களின் நாடாளுமன்ற மீள் வரவுக்கானது மட்டுமே!
அன்று வரை பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒன்றாக சேராது என்று சொல்லி வந்த எஸ்ஜேவி.செல்வநாயகம்,
திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் வீடு தேடி சென்று ஒற்றுமையை வலியுறுத்தியதாக கதை அளப்பார்கள்!
வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழரின் உரிமை போராட்டத்தின் மைல் கல் என்று நம்பினார்கள் பலர்!
Sunday, May 18, 2025
கோகிலாம்பாள் கொலை வழக்கு! 1963 உருத்திரபுரம் காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு!
![]() |
ராதா மனோகர் உருத்திரபுரம் காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு! 1963 இல் நடந்த இவ்வழக்கு கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று அறியப்பட்டது!
இந்த வழக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது!
இந்த வழக்கு அந்த காலத்தில் மக்களின் அன்றாட பேசுபொருளாக இருந்தது..
அன்றைய ஈழநாடு நாளிதழ் தினசரி காலை மாலை என இரு பதிப்புக்களை வெளியிட்டது.
ஒரு கோயில் குருக்களையே அவரது மனைவி தீர்த்து கட்டியது அதுவரை கேள்விப்படாத ஒரு விடயமாக இருந்தது.
கொலையுண்ட திரு காசிலிங்க அய்யரும் சரி அவரது மனைவி கோகிலாம்பாளும் சரி தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்தான்
இவர்களது ஒரு மகன் தற்போது கனடாவில் மிகப்பிரபலமான ஒரு கோயிலில் பெரிய குருக்களாக கோலோச்சி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது பற்றி அவ்வப்போது பொதுவெளிக்கு வந்த செய்திகளின் தொகுப்பு இது!
சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.
Saturday, May 17, 2025
ஈழத்திலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சாரகலாம் ? குன்றக்குடி அடிகளாரின் வரலாற்று செய்தி
![]() |
ராதா மனோகர் : 4-1-1971 ஆம் தேதி ஈழநாடு பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டில் சகல சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ள முன்மாதிரியை யாழ்ப்பாண சைவ மக்களும் பின்பற்றுவார்களா என்று நல்லூர் ஞானசம்பந்த ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி நாத தம்பிரானிடம் தமிழ்நாடு தெய்வீக பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கேட்டார்.
இத்தகவலை சுவாமிநாத தம்பிரானே தெரிவித்தார்
Sunday, April 13, 2025
உலக சுயமரியாதை கழகம் தொடங்கப்பட்டுள்ளது
![]() |
ராதா மனோகர் : ஜாதி வியாதிக்கு ஒரே ஒரு மருந்து சுயமரியாதை பிரசாரம்தான்.
இந்தியர்களும் இலங்கையர்களும் எங்கெல்லாம் புலம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி வியாதியையும் ஓரளவு பரப்புகிறார்கள்.
ஜாதி என்றால் என்னவென்றே தெரியாத மேற்கு நாடுகளிலும் கூட இந்த ஜாதியை கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக அந்தந்த நாடுகளில் உருவாகும் அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் கூட இந்த வியாதியை கடத்துவதில் சிலர் இன்பம் காண்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அந்தந்த நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கே கூட இந்த ஜாதியை கடத்தும் முயற்சியும் நடக்கிறது
இந்த ஜாதி அபிமானிகளுக்கு சுயமரியாதை கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை
Tuesday, March 4, 2025
சிங்களத்தில் சிலப்பதிகாரம் சிங்களத்தில் குண்டலகேசி! - திராவிட பௌத்தத்தில் (theravada) தமிழ் காப்பியங்கள் வாழ்கிறது!
ராதா மனோகர் : சிங்கள சிறுவர்களின் குண்டலகேசி நாடகம்
குண்டலகேசியை தமிழர்கள் கூட மறந்து விட்டார்கள் என்று கருத வேண்டி இருக்கிறது.
கலைஞரின் மந்திரிகுமாரி திரைப்படம் குண்டலகேசி கதையை தழுவியதாக கருதப்படுகிறது.
க
ுண்டலகேசி தமிழ் காப்பியம் உ வே சாமிநாதையர் அவர்களிடம் இருந்ததாகவும் அது எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டது
Tuesday, January 21, 2025
கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்
ராதா மனோகர் : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்
Saturday, January 4, 2025
சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி! .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....
![]() |
| Subhas chandra bhos Adolf Hiter |
ராதா மனோகர் : சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி!
உண்மையில் ஜவஹர்லால் நெருதான் சுபாஷ் சந்திரபோஸை யை காப்பாற்றினார்....
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.
அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.


















