சுயமரியாதை சமூகநீதி சுயசிந்தனை - HOME
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Wednesday, August 6, 2025
4 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் உண்டாக்கியது தமிழ் குண்டர்கள்தான்
திருமதி புனிதம் திருச்செல்வம் ( வரவேற்பு குழு தலைவி) போன்றவர்கள் அரங்கேற்றிய 4 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் எப்படி நடந்தது?
யாழ் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய வரலாற்று சாட்சியங்களை பதிவு செய்யாமல் நாம் அப்படியே கடந்து போக கூடாது.
இன்றுவரை எத்தனை பொய்கள் பொதுவெளியில் உலா வருகின்றது?
ஒரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக எவ்வளவு மோசமான அக்கிரமத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இவர்கள்?
தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரதிற்காக பலி கொடுக்கப்பட்ட அந்த 9 அப்பாவிகளின் சாபம் நீலன் திருச்செல்வம் போன்ற அப்பாவிகளின் தலையில் வந்து விழுந்தது
Navaratnam Giritharan : போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட, அது கலவரமாகியது உண்மை.
அப்பொழுது நான் கோட்டை அகழிச் சுவருக்கண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
Friday, August 1, 2025
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும் - திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்
Punitham Thiruchelvam
ராதா மனோகர் : திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின் சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.
![]() |
Alfred duraiyappa srimavo bandaranayake |
அது மட்டுமல்ல அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் தலைவர் பொது செயலாளர் உட்பட நான்கு தலைவர்கள் தோல்வி அடைந்தனர்.
தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர்
மறுபுறத்தில் வெற்றி பெற்ற தமிழரசு கட்சியினரும் மிக சொற்ப வாக்குகளால் ( (உ+ம் = 56 - 69) மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் .
இரு கட்சிகளின் பெருந்தலைவர்கள் தோற்றுவிட அந்த இடங்களில் கொஞ்சம் அட்ரஸ் இல்லாத புதியவர்கள் தெரிவாகினர் .
Thursday, July 10, 2025
திரு .அல்பிரட் துரையப்பாவின் தலைமீது எஸ்ஜேவி ல்செவநாயகம் வைத்த முள்கிரீடம்
ராதா மனோகர் யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் தமிழரசு கட்சியும் ஏன் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்?
தமிழர்களின் கல்வி சார்ந்த இவ்விடயத்தை வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த வேணடும்,.
தமிழரசு கட்சியின் மேட்டுக்குடி பாசிசம் அம்பலமாகுவதை தெளிவாக காணலாம்!
ஆரம்பம் முதலே யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைவதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இப்போது நம்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.
அந்த அளவு இவர்கள் மோசமானவர்களா என கருத தோன்றும் ,
இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்!
இலங்கை தமிழ் தேசியர்கள் அடிப்படையில் சித்தாந்த ரீதியில் வெறுமையானவர்கள் என்பதை முதலில் ஞாபகத்தில் இருத்தி கொள்ளவேண்டும்.
இவர்களின் வெறுப்பு அரசியல் சித்தாந்தத்திற்கு மக்கள் கல்வி அறிவு பெறுவது என்பது உகந்தது அல்ல என்பதுவும் ஒரு முக்கிய காரணமாகும்..
Tuesday, July 8, 2025
குலக்கல்வியை இலங்கையில் முன்னெடுத்த தமிழரசு கட்சி - எஸ்ஜேவி செல்வநாயகம் - 1960
![]() |
ராதா மனோகர் : குழந்தைகளுக்கு படிப்பிப்பதோடு (குல) தொழிலையும் சொல்லியும் தரவேண்டுமாம்!
குல தொழிலில் என்ன வசை இருக்கிறது ?
1960 ஆம் ஆண்டு எஸ்ஜேவி செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசு கட்சி,
தமிழர் உரிமைக்காக மாபெரும் சத்தியா கிரக போராட்டம் நடத்தியதாக கூறப்படும்,
அந்த காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்தி இது!
அப்போது சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் மகேஸ்வர சர்மா.
குலுக்க பட்டர்களின் அசல் வாரிசுகள் இவர்கள்
அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை அழியவிடாமால் பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு குலத்தொழிலை கற்பிப்பதுதான் ஒரே வழி என்று ராஜாஜி முன்னெடுத்து செருப்படிவாங்கியது வரலாறு!
அன்று ராஜாஜி முன்னெடுத்த குலத்தொழில் சதி முயற்சியை முறியடித்தது திராவிட இயக்கம்!
Saturday, June 21, 2025
திரு அல்பிரட் துரையப்பாவை எதிர்ப்பதற்காக தமிழரசும் காங்கிரஸும் ஒன்று சேர்ந்த வரலாறு
![]() |
![]() |
ராதா மனோகர் : தமிழ் தேசியத்தை தோண்ட தோண்ட கிடைப்பது எல்லாம் சுயநல அடையாள வரலாற்று வடுக்கள் மட்டுமே!
இன்றுவரை
புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் தேசியத்தின் அடுத்த
கட்ட பாய்ச்சல் என்றுதான் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
அது உண்மையில் தேர்தல்களில் தோற்றுப்போன ஏழு தலைவர்களின் நாடாளுமன்ற மீள் வரவுக்கானது மட்டுமே!
அன்று வரை பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒன்றாக சேராது என்று சொல்லி வந்த எஸ்ஜேவி.செல்வநாயகம்,
திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் வீடு தேடி சென்று ஒற்றுமையை வலியுறுத்தியதாக கதை அளப்பார்கள்!
வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழரின் உரிமை போராட்டத்தின் மைல் கல் என்று நம்பினார்கள் பலர்!
Sunday, May 18, 2025
கோகிலாம்பாள் கொலை வழக்கு! 1963 உருத்திரபுரம் காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு!
![]() |
ராதா மனோகர் உருத்திரபுரம் காசிலிங்க சரமா அய்யர் கொலை வழக்கு! 1963 இல் நடந்த இவ்வழக்கு கோகிலாம்பாள் கொலை வழக்கு என்று அறியப்பட்டது!
இந்த வழக்கு 1963 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது!
இந்த வழக்கு அந்த காலத்தில் மக்களின் அன்றாட பேசுபொருளாக இருந்தது..
அன்றைய ஈழநாடு நாளிதழ் தினசரி காலை மாலை என இரு பதிப்புக்களை வெளியிட்டது.
ஒரு கோயில் குருக்களையே அவரது மனைவி தீர்த்து கட்டியது அதுவரை கேள்விப்படாத ஒரு விடயமாக இருந்தது.
கொலையுண்ட திரு காசிலிங்க அய்யரும் சரி அவரது மனைவி கோகிலாம்பாளும் சரி தமிழகத்தில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு குடி பெயர்ந்தவர்கள்தான்
இவர்களது ஒரு மகன் தற்போது கனடாவில் மிகப்பிரபலமான ஒரு கோயிலில் பெரிய குருக்களாக கோலோச்சி கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இது பற்றி அவ்வப்போது பொதுவெளிக்கு வந்த செய்திகளின் தொகுப்பு இது!
சட்டத்தரணி கே.ஜீ. ஜோன்
இற்றைக்கு சில ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1962 ஆம் ஆண்டுக்கும் 70 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தமிழ் உலகில் கிளிநொச்சி – உருத்திரபுரம் என்னும் கிராமம் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது. காரணம் அங்கு நடந்த ஒரு கொலையாகும். வட மாகாணத்தில் உள்ள கிளிநொச்சி என்ற இடத்தில் இருந்து சிறு தொலைவில் உள்ள குக்கிராமமே உருத்திரபுரமாகும். இங்கு அபிவிருத்திக்காக குடியேறியவர்களே அதிகம். யாழ்ப்பாணத்தில் உள்ள காரைநகர் மக்களுக்கும் இங்கு குடியேறியவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்தது.
Saturday, May 17, 2025
ஈழத்திலும் அனைத்து ஜாதியினரும் அர்ச்சாரகலாம் ? குன்றக்குடி அடிகளாரின் வரலாற்று செய்தி
![]() |
ராதா மனோகர் : 4-1-1971 ஆம் தேதி ஈழநாடு பத்திரிகை செய்தி
தமிழ்நாட்டில் சகல சமூகத்தினரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் கொண்டு வந்துள்ள முன்மாதிரியை யாழ்ப்பாண சைவ மக்களும் பின்பற்றுவார்களா என்று நல்லூர் ஞானசம்பந்த ஆதீன மடாதிபதி ஸ்ரீ ல ஸ்ரீ சுவாமி நாத தம்பிரானிடம் தமிழ்நாடு தெய்வீக பேரவை தலைவர் தவத்திரு குன்றக்குடி அடிகளார் கேட்டார்.
இத்தகவலை சுவாமிநாத தம்பிரானே தெரிவித்தார்
Sunday, April 13, 2025
உலக சுயமரியாதை கழகம் தொடங்கப்பட்டுள்ளது
![]() |
ராதா மனோகர் : ஜாதி வியாதிக்கு ஒரே ஒரு மருந்து சுயமரியாதை பிரசாரம்தான்.
இந்தியர்களும் இலங்கையர்களும் எங்கெல்லாம் புலம் பெயர்கிறார்களோ அங்கெல்லாம் ஜாதி வியாதியையும் ஓரளவு பரப்புகிறார்கள்.
ஜாதி என்றால் என்னவென்றே தெரியாத மேற்கு நாடுகளிலும் கூட இந்த ஜாதியை கொண்டு போய் சேர்க்கிறார்கள்.
குறிப்பாக அந்தந்த நாடுகளில் உருவாகும் அடுத்தடுத்த தலைமுறையினரிடமும் கூட இந்த வியாதியை கடத்துவதில் சிலர் இன்பம் காண்கிறார்கள்.
இன்னும் ஒரு படி மேலே சென்று அந்தந்த நாட்டு மண்ணின் மைந்தர்களுக்கே கூட இந்த ஜாதியை கடத்தும் முயற்சியும் நடக்கிறது
இந்த ஜாதி அபிமானிகளுக்கு சுயமரியாதை கோட்பாட்டில் நம்பிக்கை இல்லை
Tuesday, March 4, 2025
சிங்களத்தில் சிலப்பதிகாரம் சிங்களத்தில் குண்டலகேசி! - திராவிட பௌத்தத்தில் (theravada) தமிழ் காப்பியங்கள் வாழ்கிறது!
ராதா மனோகர் : சிங்கள சிறுவர்களின் குண்டலகேசி நாடகம்
குண்டலகேசியை தமிழர்கள் கூட மறந்து விட்டார்கள் என்று கருத வேண்டி இருக்கிறது.
கலைஞரின் மந்திரிகுமாரி திரைப்படம் குண்டலகேசி கதையை தழுவியதாக கருதப்படுகிறது.
க
ுண்டலகேசி தமிழ் காப்பியம் உ வே சாமிநாதையர் அவர்களிடம் இருந்ததாகவும் அது எங்கோ காணாமல் போய்விட்டதாகவும் கூறப்பட்டது
Tuesday, January 21, 2025
கலைஞரை கொலை செய்ய புலிகள்....ஒரு நேரடி சாட்சியின் வாக்குமூலம்
ராதா மனோகர் : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம் இருந்து காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினரும் இதில் குற்றவாளிகள்தான்
அன்று ஜேயார் அரசு வரதராஜ பெருமாளோடு தேர்தல் கூட்டணி வைக்க பெரும்பாடு பட்டார்கள்
அதை உதறி தள்ளியதன் மூலம் வடக்கு கிழக்கு மாகாண சபையை கருவிலேயே கொன்றவர் திரு வரதராஜ பெருமாள்தான்
மறுபுறத்தில் இதன் காரணமாகவே வரதர்ஜா பெருமாள் கோஷ்டிக்கு கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக கதை அளந்தார்கள்.
அதாவது இதற்கும் கலைஞர்தான் காரணமாம்.
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட பலரும் புறங்கூறி திரிகிறார்கள்.
எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்
Saturday, January 4, 2025
சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி! .....நேரு உண்மையில் நேதாஜியை காப்பாற்றினார்....
![]() |
Subhas chandra bhos Adolf Hiter |
ராதா மனோகர் : சுபாஸ் சந்திர போஸ் ஒரு நாசி போர் குற்றவாளி!
உண்மையில் ஜவஹர்லால் நெருதான் சுபாஷ் சந்திரபோஸை யை காப்பாற்றினார்....
நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணமாக வில்லை.
அந்த விபத்து சம்பவம் நடந்ததா இல்லையா என்ற வாதப்பிரதி வாதங்கள் ஒரு புறம் இருக்க இப்படித்தான் நடந்திருக்கும் என்று பலராலும் யூகிக்கப்படும் தியரி ஒன்று உலவுகிறது, அது நேதாஜிக்கு பெருமை சேர்ப்பதாக இல்லை.
என்னதான் சுதந்திரம் அவசியம் என்றாலும் அவர் ஹிட்லரோடு மிகவும் அன்னியோன்னியமாக உறவாடி உதவி கேட்டமை
நாகரிக உலகில் யாராலும் மன்னிக்க முடியாத ஒரு போர் குற்றம் ஆகும்.
Thursday, December 19, 2024
வடகிழக்கு மாகாண சபையை முடக்கியத்தில் பிரபாவுக்கே முன்னோடி வரதராஜ பெருமாள்
![]() |
Dayan Jayathilak |
![]() |
Varatha Raja Perumal |
ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திரு டயான் ஜெயதிலகா என்ற ஒரு மனிதரின் வகிபாகம் பற்றி பொதுவெளியில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்றெண்ணுகிறேன்
இவர் காலம்சென்ற பிரபல பத்திரிக்கை ஆசிரியர் திரு மேர்வின் டி சில்வாவின் மகனாவார்.
இளமை காலத்தில் இ பி ஆர் எல் எப் ஈரோஸ் போன்ற இயக்கங்களோடும் சில சிங்கள இடதுசாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
வழமை போல இவர் சார்ந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு போன்ற பாரம்பரிய பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தன.
இவரும் இந்த பாரம்பரியத்திற்கு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதே பரிணாம வளர்ச்சியை பெற்றிருந்தார்.
![]() |
Umakanthan |
![]() |
Daniel Ortega |
கொழும்பு செயின்ட் ஜோசெப் காலேஜ் . அக்குக்வினாஸ் கல்வி நிறுவனம், மற்றும் பேராதனை பல்கலை கழகம் என்று இவரது கல்வி தொடர்ந்தது.
மறைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோசே டயனின் மீது இவரது இடதுசாரி தந்தைக்கு ஏற்பட்ட அதீத அபிமானம் காரணமாகவே இவருக்கு டயான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது ஒரு வகை நகைமுரண்தான்.
இவரின் ரகசிய இயக்க ஈடுபாடுகள் காரணமாக இவர் ் இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இ பி ஆர் எல் எபின் ஆதரவில் தங்கி இருந்தார்
Tuesday, November 19, 2024
செல்வநாயகம் அமைதியானார் சேருவிலை தொகுதி உருவானது!
ராதா மனோர் : 1970 க்கும் 1977 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் சேருவிலை தொகுதி உருவாக்கப்பட்டது
இத்தொகுதியனது வடக்கு மாகாணத்திற்கு கிழக்கு மாகாணத்திற்கு இடையில் சிங்கள வாக்காளர்களை பெரும்பான்மையராக கொண்ட ஒரு தொகுதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் ஒரு முயற்சியாக இது அப்போது கருதப்பட்டது.
ஆனால் இதற்கு எஸ் ஜே வி செல்வநாயகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
ஏன் தெரியுமா?
T.Sivasithambaram |
அப்போது வவுனியா எம்பியாக தமிழரசு கட்சியை சேர்ந்த எக்ஸ் எம் செல்லத்தம்பு இருந்தார்
அதுவரை வவுனியா எம்பியாக இருந்த டி சிவசிதம்பரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.1977 தேர்தலில் வவுனியா எம்பி எக்ஸ் எம் செல்லத்தம்புவிற்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மறுபுறத்தில் எல்லைக்காவலர் என்று புகழ் பெற்ற வவுனியா சிவசிதம்பரத்திற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
முன்னாள் எம்பி திரு டி சிவசிதம்பரம் ஏற்கனவே அடங்கா தமிழன் சுந்தரத்திலிங்கத்தை தோற்கடித்து எம்பியானவர், மூன்று தடவை எம்பியாக வெற்றி பெற்றவர்
1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்
ராதா மனோகர்
![]() |
: 1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்
ஒரு வருடத்தில் இலங்கையில் உள்ள இந்திய மக்கள் தொகை சுமார் 60000 ஆக அதிகரித்துள்ளது!
இலங்கை அரசு பதிவாளர் ஜெனரல் திரு டேவிட்சன் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரத்தின் ஆரம்ப அறிக்கையின்படி,
டிசம்பர் 31 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு மக்கள் தொகை 6606000 ஆக இருந்தது.
டிசம்பர் 31-1946 இல் அந்த மக்கள்தொகையின் மொத்த மதிப்பீடு (இராணுவம் மற்றும் கப்பல் ஊழியர்கள் தொகையைத் தவிர்த்து) 6784000 ஆக இருந்தது
Thursday, November 7, 2024
துரையப்பாவை துரோகி என்று தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை
ராதா மனோகர் : இலங்கையில் தமிழ்மொழியை தமிழர்களின் வரலாற்றை காப்பதாக உரத்து முழங்குவோர்கள் திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பாவின் பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள்
இந்த தமிழ் தேசியர்களின் ஆவணகாப்பகங்களில் மட்டுமல்ல இணையத்தளங்களில் கூட திரு அல்பிரட் துரையப்பாவின் பெயரை வலிந்து காணாமல் போக செய்துள்ளார்கள்!
இலங்கை தமிழ் ஆளுமைகள் என்ற வரிசையில் வெறும் கிராமசபை அங்கத்தவர்கள் மற்றும் சோப்பு சீப்பு கண்ணாடி விற்பவர்கள் பெயர்கள் மற்றும் சுருக்கமான வரலாறுகள்கூட இடம் பெற்றுள்ளது
ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றிய திரு அல்பிரட் துரையப்பாவின் பெயர் மட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்படுகிறது.
ஏன் தெரியுமா இந்த இருட்டடிப்பு?
இவர்களின் தமிழ் தேசியம் என்று குறிப்பிடப்படும் முதலில்லா வியாபாரத்தின் தாங்கு தூணே துரோகி என்ற சொல்தானே!
துரையப்பாவை துரோகி என்று கட்டமைத்துத்தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை நடக்கிறது!
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!
Monday, October 21, 2024
Cadillac.car - சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
![]() |
ராதா மனோகர் சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது
Wednesday, October 16, 2024
நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் மலையக தலைவர்களை பார்த்து......
ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களை பார்த்து நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் கேட்டபொழுது
நாங்கள் இலங்கையில் இடதுசாரி சோஷலிச அரசை நிறுவுவோம் அங்கு சிங்களவர் தமிழர் பிரச்சனையே இருக்காது
எனவே இதைக்காட்டி நீங்கள் (பிரிட்டிஷ்) இங்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள் இடதுசாரிகள்.
அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாக்குவங்கி மூலம் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ்காரன் தரவந்த பாதுகாப்பு விடயங்களை உதாசீனம் செய்து . நீ போ நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்றார்கள் இந்த இடதுசாரிகள்
சிங்கள மக்கள் மத்தியில் பெறமுடியாத செல்வாக்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளால் ஈடு கட்ட முடியும் என்று நம்பி ஒரே கல்லில் பிரிட்டிசாரையும் பகைத்து சிங்கள மக்களையும் பகைத்து தங்களை நம்பிய இந்திய வம்சாவளி (மலையகம்) மக்களின் வாழ்வை சூறையாடிய வரலாற்று குற்றவாளிகள் இந்த இடது சாரிகள்.
Thursday, October 3, 2024
மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில்... வந்து விழுந்தது!
2 . திரு .அல்பிரட் துரையப்பாவை துரோகி என்று மக்களை நம்பவைப்பதில் திரு அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார்!
3 . எல்லா அரசியல் காட்சிகளையும் இயக்கங்களையும் தலைவர்களையும் மற்றும் ஏராளமான தமிழர்களை துரோகிகள் என்று மக்களை நம்பவைப்பதில் திரு .வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றி பெற்றார்!
இந்த மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் தலைகளில் வந்து விழுந்தது!
Monday, September 30, 2024
FLOATING PEOPLE - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக சிக்கி தவிக்கும் மக்கள்
ராதா மனோகர் ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தமும் இந்திய ஒன்றிய அரசும்
FLOATING PEOPLE - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக மக்கள் அங்கும் இங்குமாக போய்வந்தனர் என்பது வரலாறு!
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இப்படியாக போக்கு வரவு செய்துகொண்டிருந்த மக்களின் தொகையானது இலங்கையில் . குறிப்பாக சிங்கள மக்களிடையே ஒரு குடிப்பரம்பல் அச்ச உணர்வை உண்டாக்கியது.
இதன் காரணமாகவே ஒரு இந்திய எதிர்ப்பு மனநிலை அங்கு உருவானது.
பல்வேறு தொழில்கள் காரணமாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் ஏறக்குறைய ஐம்பதுகள் வரை இந்த போக்கு வரத்து வாழ்வியல் தொடர்ந்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் இது தொடர்பாக இந்திய அரசோடு பல தடைவைகள் பேச்சுக்களை நடத்தி இருந்தன..
ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் இது விடயத்தில் ஒரு தீர்வை நோக்கி இருந்தது
Sunday, April 21, 2024
யாழ்தேச வெறுப்பு அரசியலும் - ஜாதி அரசியலும்
ராதா மனோகர் : யாழ்ப்பாண மக்கள் கண்ணுக்கு தெரியாத ஒரு invisible Segregation வெறுப்பு முள் வேலிக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள்!
யாழ்ப்பாணத்தில் உண்மையான சமூகவியல் ஆய்வாளர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டி உள்ளது!
இந்த கேள்வியை வெறும் கேலியாகவோ அல்லது கோபமாகவோ நான் எழுப்பவில்லை.
நம் சமூகத்தின் பொதுப்புத்தி பற்றிய எனது பார்வையை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
எனது பார்வை சரியா தவறா என்பதை காலம்தான் கூறவேண்டும்
கடந்த நூற்றாண்டுகளாக மெதுவாக ஆனால் ஆழமாக திட்டமிட்டு அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தில் புகுத்த பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்
ஜாதிய கட்டுமானத்தை தக்க வைப்பதற்காகவே மனித விழுமியங்களுக்கு பொருந்தாத பல கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.
சிங்கள மக்கள் நம்மை விட தரம் குறைந்தவர்கள், படிக்காதவர்கள், கொடூரமானவர்கள் என்பது போன்ற ஒரு மோசமான பொதுபுத்தி யாழ்ப்பாணத்தில் எப்படி உருவானது?
சிங்கள மக்கள் ஒரு போதும் நமக்கு இணையானவர்கள் அல்ல என்பது போன்ற கருத்துக்கள் அந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒலித்தது!
தற்போது அது குறைந்துள்ளது .. ஆனால் யாழ்ப்பாண கூட்டு உளவியலில் அந்த பொதுப்புத்தி இன்னும் கொஞ்சமாவது ஒட்டியிருக்கும் என்ற சந்தேகம் எனக்குள்ளது.