சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Tuesday, August 30, 2022
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -- இந்து சாதனம் பத்திரிகை
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம் 6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா? இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை
டாக்குத்தர் கந்தையா சில துஷ்டர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு குடிக்க கொடுத்து கலக்கம் விளைவிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுது எனது தகப்பனாரும் சிலரை வைத்திருந்தார்
உமது தகப்பனார் கோயிலடியில் கலகத்திற்காக ஆள் சேர்த்ததுண்டா?
Friday, August 19, 2022
இலங்கை சீனா ரப்பர் அரிசி பண்டமாற்று 70 ஆண்டு நிறைவு rubber-rice barter agreement with China
ராதா மனோகர் : இலங்கை சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது
இப்போது இருக்கும் பெரும்பாலான விவசாய குடியேற்றத்திட்டங்கள் அப்போது இருக்கவில்லை
அரிசி தட்டுப்பாடு பயங்கரமாக இருந்தது அன்று இந்தியாவின் உணவு உற்பத்தியும் மிக மோசமான நிலையிலேயே இருந்தது இந்த பின்னணியில் இலங்கையின் அரிசி தேவையில் சீனாவின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று தெரிந்து கொள்வது நல்லது
அன்று சீனா மாவோ தலைமையில் அமைந்த ஒரு தீவிர கம்யூனிச தேசமாக கருதப்பட்டது பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவே இல்லை
![]() |
அன்று இலங்கையின் அரிசி தேவையை நிறைவு செய்யகூடிய ஒரு நிலையில் சீனா இருந்தது . இலங்கையின் ரப்பர் சீனாவுக்கு தேவையாக இருந்தது ஆனால் அமெரிக்க பிரிட்டன் இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை சீனாவோடு ஒரு வியாபார ஒப்பந்தம் செய்ய முயலும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத நிலைமை இருந்தது ..
இந்த பின்னணியில் இருந்து ரப்பர் அரிசி டீல் பற்றி தெரிந்து கொள்வது நல்லது
ஆசியா டைம்ஸ் : 1952 October 4 இல் இலங்கை அரசு மிகவும் துணிச்சலாக சீனாவுடன் ரப்பர்-அரிசி பண்டமாற்று ஒப்பந்தம் செய்து கொண்டது
Sunday, August 14, 2022
யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி சில முக்கிய செய்திகள்.. 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்..
ராதா மனோகர் : யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி பல செய்திகள் இன்னும் பொது வெளிக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டும்பொழுதே அவை ஒரு பல்கலை கழகமாக உருவாக்கி வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் என்று அவரின் செயலாளராகவும் அன்பு நண்பராகவும் இருந்த மறைந்த திரு சங்கரப்பிள்ளை அய்யா அவர்கள் தனது அந்திம காலங்களில் பலரிடம் கூறியிருக்கிறார்.
அடியேன் சிறுவயதில் அவரின் வீட்டிற்கு செல்வதுண்டு . சங்கரப்பிள்ளை அய்யாவின் மகன்தான் திரு பண்டிதர் ராமச்சந்திரன் அவர்கள் பன்மொழி திறமையும் பேரறிவும் கொண்டவர்
திரு ராமச்சந்திரனை பார்க்கவும் பேசவும் கூட்டங்கள் அலைமோதும்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவனாக அடியேனும் இருந்திருக்கிறேன்
யாழ்ப்பாண பல்கலை கழகத்தை பற்றி சேர் பொன்னம்பலம் ராமநாதன் கண்ட கனவு பற்றி நான் அறிந்தது அந்த காலங்களில்தான்.
Saturday, August 6, 2022
அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மானிப்பாயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அபேட்சகரான திரு சி வன்னியசிங்கம் தமிழரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்க கூடிய ஒரு விடயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார் என அறியக்கிடக்கின்றது
கொழும்பில் உள்ள அமெரிக்கன் எம்பசி என்ற அமெரிக்க ஸ்தானிகர் காரியாலயத்தினர் தமிழரசு கட்சியினரை ஒரு விருந்து உபசாரத்திற்கு அழைத்தார் என்றும் தமிழரின் எதிர்காலத்தை பற்றி தமிழரசு கட்சியினருடன் அமெரிக்கர் சம்பாஷித்தனர் எனவும் திரு சி வன்னியசிங்கம் மானிப்பாய் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரியவருகிறது.
தமிழர் பிரிந்து வாழ்வதாயின் அமெரிக்க உதவ முன்வரும் என்றும் அவர்கள் கூறினார்களாம்.
இவ்விஷயத்தை அமெரிக்க கலாச்சாரத்தில் நல்ல பரிச்சயம் வாய்ந்த திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியினரால் நடப்படும் பத்திரிகை (சுதந்திரன்) காரியாலயத்திற்கு சென்று தெரிவித்தபோது அப்பத்திரிகையை நடத்துபவர்கள் (எஸ் டி சிவநாயகம்) தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கரிடம் தாரைவார்த்து கொடுப்பது அபாயகரமானது என்று நெருப்பெடுத்தார்கள் என பேசப்படுகிறது.
Friday, July 29, 2022
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட் துரையப்பா!
ஈழநாடு 7 - 6- 1961 யாழ்ப்பாணம்
தமிழ் பிரதேசங்களுக்கு ஒரு வானொலி நிலையம் - யாழ்ப்பாண எம்பி ( திரு அல்பிரட் துரையப்பா) நடவடிக்கை
தமிழ் பேசும் பிரதேசங்களில் ஒரு கவின் கலைக்கல்லுரியும் ஆயுர்வேத வைத்திய நிலையமும் வானொலி நிலையமும் நிறுவப்பட இருக்கிறது.
இவைகள் இந்த ஆண்டு அல்லது அடுத்த நிதியாண்டுக்குள் நிறுவப்படலாம்.
இதற்கான
நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன் என்று யாழ்ப்பாண எம்பி திரு அல்பிரட்
துரையப்பா பத்திரிகைக்கு விட்டுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்
திரு அல்பிரட் துரையப்பா அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்
மொழி உரிமைக்காக போராடிவரும் அதே வேளையில் எமது தேவைகளையும் எமக்கு
கிடைக்க கூடிய உதவிகளையும் உரிமையோடு பெற்று கொள்வது அவசியமாகும்
கிடைக்கக்கூடிய உதவிகளை கைவிடாது நமது நாட்டின் தேவையை பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்
அவர் தமது தொகுதிக்கு இவ்வாண்டில் செய்து முடிக்கவிருக்கும் வேலைகளை பற்றியும் குறிப்பிட்டுள்ளார் அவையாவன:
Wednesday, July 27, 2022
யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலி கட்டுரை
யாழ்ப்பாண மேயர் திரு அல்பிரட் துரையப்பாவின் 47 ஆவது நினைவு அஞ்சலியாக இந்த கட்டுரை
திரு அல்பிரட் துரையப்பாவின் யாழ் மேயர் பதவி கால சாதனைகளை மக்கள் அறிந்திருக்கும் அளவுக்கு அவர் யாழ்ப்பாண தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக செயலாற்றிய வரலாறு பொதுவெளிக்கு மறைக்க படுகிறது அவை இனி ஒவ்வொன்றாக வெளிவரும் அந்த வகையில் வெளிவரும் முதல் செய்தி இதுவென்று எண்ணுகிறேன் .
.jpg)
ஈழநாடு 18 - 3- 1961 யாழ்ப்பாணம்
வடக்கு கிழக்கு மாகாண மக்களுக்கு முதல் வெற்றி!
சத்தியாகிரக எம்பிக்களுக்கு 3 மாத ரஜா (அதாவது விடுமுறைங்கோ ஹரிஹர சர்மாவின் தமிழ் இதுதானுங்கோ)
சத்தியாகிரகம் செய்யும் தமிழரசு கட்சி எம்பிக்களுக்கு பார்லிமெண்டு சபை இவ்வாரம் மூன்று மாத ராஜா அளித்திருக்கிறது
அவர்களுக்கு இந்த ராஜாவை கொடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண தொகுதி பிரதிநிதி திரு அல்பிறெட் துரையப்பா (சுயேட்சை) ஒரு பிரேரணையை கொணர்ந்தார்.
Monday, July 4, 2022
எமில் சவுந்தரநாயகம் ! திரைப்படங்களை விட கவர்ச்சிகரமான திருப்பங்கள் நிறைந்த தில்லுமுல்லு வரலாறு! .. இலங்கை தமிழர்
![]() |
![]() |
ராதா மனோகர் : திரு.எமில் .சவுந்தரநாயகம் (6 July 1923 – 21 December 1976) இலங்கை தமிழரான இவர் ஐம்பது அறுபதுகளில் ஐரோப்பாவையும் கடந்து உலகையே கலக்கிய ஒரு மோசடிக்காரன் இவரது முழுபெயர் (Michael Marion Emil Anacletus Pierre Savundranayagam ).இவரது மனைவி பெயர் புஷ்பம் .இவருக்கு இரண்டு ஆண்குழந்தைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்ததாக தெரிகிறது .. இவரின் மோசமான நடவடிக்கைகளால் இவரது குடும்பம் வாழ்க்கை முழுவதுமே தலைமறைவாக வாழவேண்டிய ஒரு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
அன்றைய பிரித்தானிய யுத்த அமைச்சர் ஒரு பெண் உளவாளியோடு தொடர்பு கொண்டிருந்தமையால் பிரித்தனிய அரசே கவிழ கூடிய நிலை உருவானது , அந்த பெண் உளவாளி எமில் சவுந்தர நாயகத்தில் பணத்தில் பிரித்தானிய அமைச்சரை வேவு பார்த்ததாக நம்பபட்டது, அதில் அந்த அமைச்சர் தற்கொலை செய்துகொண்டார், எமில் தப்பி விட்டார்,
இலங்கை சுதந்திரம் அடைந்த பொழுது 24 வயது நிரம்பிய எமில் சவுந்தர நாயகம் அங்கு வர்த்த முயற்சிகளை மேற்கொண்டிருந்தார் .ஆனால் அதில் வெற்றி பெறமுடியவில்லை, அந்த இளம் வயதிலேயே இவருக்கு சர்க்கரை நோய் தாக்கியது, நிரந்தரமாகவே இன்சுலின் பாவிக்கும் அளவுக்கு சர்க்கரை நோய்க்கு ஆட்பட்டிருந்தார். பிரிட்டிஷ் விமான படையில் சேர்வதற்கு முயற்சித்தார். இரண்டாவது உலக யுத்தம் காரணமாக அது கைகூடவில்லை.
சிங்கள மொழியானது பார்பனீயத்திடம் இருந்த பௌத்தத்தை பாதுகாத்த ஒரு மொழி!
ராதா மனோகர் : இலங்கை பொலநறுவை என்ற இடத்தில்,
ஒரு நீண்ட கற்பாறை மீது சிங்கள மொழியில் பல செய்திகளை செதுக்கி வைத்திருக்கிறார்கள்
சிங்கள மொழியை கற்க விரும்பும் எவருக்கும் சரியான வழி காட்டியாக இந்த கல் புத்தகம் பேருதவியாக இருக்கும் என்று இந்த காணொளியில் சிங்கள மொழியில் கூறப்படுகிறது
இது மன்னர் நிசங்க மல்லாவின் (1187-1196) புகழ்பெற்ற படைப்புகளில் ஒன்றாகும், இதில் நிசங்க மன்னரின் ஆட்சி பற்றிய விபரங்களும்
அவர் இலங்கையின் அரசராக இருப்பதற்கான தகுதியை விவரிக்கிறது.
26'10 "அடி (8.2 மீட்டர்) நீளமும், 4'7" அடி (1.4 மீட்டர்) நீளமும் கொண்ட இந்த பாரிய கற்பாறை
மஹியங்கனா பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இப்பாறையில் 3 நெடுவரிசைகளில் எழுதப்பட்டுள்ளது
மொத்தமாக 7200 வரிகளில் 4300 க்கும் மேற்பட்ட சொற்களை கொண்டுள்ளது.
இதன் எழுத்துக்களின் மீது உலோக துகள்கள் படிமங்களாக இருப்பது கண்டு பிடிக்க பட்டுள்ளது
சிங்கள மொழியானது இலங்கை முழுவதும் வட்டார பேதங்கள் இன்றி பேசப்படுவதற்கும் எழுதப்படுவதற்கும் ஆதாரமாக இந்த கல் புத்தகம் இருக்கிறது என்று கருதப்படுகிறது
Sunday, July 3, 2022
இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமை பறிப்பின் பின்னணியில் இந்திய அரசும் அரசும் இருந்திருக்கிறதா?
ராதா மனோகர் : இலங்கை தமிழர் அரசியலில் மீண்டும் மீண்டும் ஒரு பெரிய பொய்யை கூறிக்கொண்டே இருக்கிறார்கள்
திரு செல்வநாயகமும் திரு நாகநாதனும் கதை வசனம் எழுதி அரங்கேற்றிய இந்த நாடகம் இன்றுவரை தொடர்கிறது
திரு சுப்பையா பிள்ளை நடேச பிள்ளை என்றவரில் இருந்து பல விடயங்களை நோக்க வேண்டி உள்ளது
எல்லோரும் வசதியாக இவரை மறந்து விட்டுத்தான் அரசியல் வரலாறு பற்றி பேசுகிறார்கள் அல்லது கதை அளக்கிறார்கள்.
இவர் காங்கேசன் துறை எம்பியாக சுதந்திரத்திற்கு முன்பு இரு தடைவைகள் இருந்தார்
சுதந்திரத்திற்கு பின்பு 1952 இல் காங்கேசன் துறை தொகுதியில் இருந்து செல்வநாயகத்தையே தோற்கடித்து எம்பியானார் . அதன் பின்பு ஐக்கிய தேசிய கட்சி அரசில் அமைச்சரானார்
இவர் ஐக்கிய தேசிய கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் . ஐக்கிய தேசிய கட்சியின் அத்தனை நிகழ்ச்சி நிரலிலும் பங்கு பற்றியவர்.
இவர் தஞ்சாவூரை சேர்ந்தவர் அங்கு நகராட்சி கவுன்சிலராகவும் இருந்தவர் இவர் சேர் பொன்னம்பலம் ராமநாதனின் மருமகனாகும்
மேலும் இவர் இலங்கை அமைச்சராக இந்தியாவுக்கு சென்று யாழ்ப்பாண புகையிலை வர்த்தக தடையை நீக்குமாறு கேட்டுக்கொண்டு அதை சாதித்தவர்
இதுவரை காலமும் இலங்கை இந்திய வம்சாவளி மக்களின் குடியுரிமை நீக்கம் பற்றி இவரது பங்கு பற்றி எவரும் ஏன் குறிப்பிடுவதில்லை?
Friday, July 1, 2022
இலங்கை திராவிட முன்னேற்ற கழக தடைக்கு எதிராக திரு அமிர்தலிங்கம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை
ராதா மனோகர் : . 22.07.1962 இல் ஆட்சியில் இருந்த ஸ்ரீ மாவோ தலைமையிலான அரசு இலங்கை திராவிட முன்னேற்ற கழகத்தை தடை செய்வதாக அறிவித்தது . இந்த தடைக்கு எதிராக நாடாளுமன்றத்தில் திரு அ அமிர்தலிங்கம் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். வவுனியா எம்பி சிவசிதம்பரம் உட்பட பலர் இதை கண்டித்து உரையாற்றினார்க்ள
திரு அமிர்தலிங்கம் அவர்கள் உரையாற்றுகையில்
...
"இந்த நாட்டில் மலையகத் தமிழ்மக்கள் மத்தியில் மூடப் பழக்க
வழக்கங்கள் ஒழித்து, சாதி பேதங்களை அகற்றி, அவர்களுடைய
மொழி, குடியியல் உரிமைகளைப் பெற்று, அவர்களும் இந்த
நாட்டில் மனிதர்களாக தன்மானத்தோடு வாழ வேண்டுமென்ற ஒரே
இலட்சியத்துக்காக உழைத்துவந்த திராவிடர் முன்னேற்றக்
கழகத்தை அரசாங்கம் தடைசெய்தது ஜனநாயகத்துக்கு
முரணானது! மனித உரிமைக்கு மாறானது என்பதைக்
கூறிக்கொள்கிறேன்.
உண்மையில் இந்தக் கழகம் மேற்கொண்ட
எந்த நடவடிக்கைக்காக இந்தத் தடை போடப்பட்டிருக்கிறது
என்பதை அரசாங்கத்திடமிருந்து நான் தெரிந்துகொள்ள
விரும்புகிறேன்.
Tuesday, June 21, 2022
1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த விளம்பரம் .. யாழ்ப்பாணம்
ராதா மனோகர் : 1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த
விளம்பரம் ஒரு நையாண்டி வகையை சார்ந்தது போல் தோன்றுகிறது ..
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் பல பெரியவர்கள் எப்படிப்பட்ட மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த விளம்பரம் மூலம் காட்டுவதாக தெரிகிறது ..பிரபுக்களுக்கு ஐந்து ரூபாய் பரிசு அறிவிக்கிறார்கள்
"விளம்பரம்"
தமிழர் ஐக்கியம்
இலங்கையில் வாழும் சிங்களர் தமிழரின் ஐக்கிய விஷயமாக பாக்களியாற்றி பரிசு பெற்ற ஸ்ரீ வே தா தியாகராஜ பிள்ளை போன்றவர்கள் பெரியவர்களுக்கும் பிரபுக்களுக்கும் அறியத்தரும் விளம்பரமாவது .
தமிழ் மக்கள் தம்முள் ஒருவரை தாழ்த்தியும் ஒடுக்கியும் மிருகங்களில் கேவலமாக நடத்துவதை நிராகரித்தும் தமிழ் மக்களாகிய தம்முள் வித்தியாசம் இன்றி ஐக்கியம் வேண்டுமென்பதாக பாக்கள் அல்லது வியாச மூலமாகவேனும் எழுதி ஆவணி 30 ந் திகதிக்குள் அனுப்பும் வியாசங்களை ஏற்று தகுதி எனக்கண்டு 5 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் எனத் தெரிவிக்கிறோம்.
இங்கனம் திராவிடன் ஆபீஸ்
சுன்னாகம்
Monday, June 20, 2022
ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும் எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்1900 ஆம் ஆண்டு அக்டொபர் மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான் தனது குடும்பதில் இருந்த அரச குடும்ப தொடர்புகளால் இவன் அதிகாரவர்கத்திற்கு நெருங்கி இருந்தான்
படைகளில் சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினான்
தனது 17 வயதில் கடற்படையில் ஒரு அதிகாரியாக சேர்வதற்கு முயன்றான்
ஆனால் கண்பார்வை குறைவு காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை
பின்பு ராணுவ பயிற்சி கூடத்தில் சேர்ந்தான் . பயிற்சி காலம் முடிவடையும் காலத்தில் முதலாவது உலக யுத்தம் முடிவடைந்திருந்தது
Monday, June 6, 2022
திமுக ஒரு சாதாரண அரசியல் கட்சியல்ல .. இந்திய ஒன்றியத்தின் நன்னம்பிக்கை முனை
ராதா மனோகர் : இந்தியா முழுமைக்கும் அரசியல் போக்கை
தீர்மானிக்கும் திராவிட முன்னேற்ற கழகம் (TREND SETTER)
திராவிட முன்னேற்ற கழகம், ஏனைய அரசியல் கட்சிகளை போல வெறும் ஒரு அரசியல் கட்சி கிடையாது.
அது ஒரு வெறும் மாநில கட்சி போல் தோன்றினாலும்,
அதையும் தாண்டிய ஒரு கோட்பாட்டின் அடிப்படையிலேயே அது உருவாகி உள்ளது..
சுயமரியாதை, சமுக நீதி, பகுத்தறிவு, மாநில சுயாட்சி என்ற நான்கு
தூண்களும் கொண்டு நிமிர்ந்ததுதான் திராவிட முன்னேற்ற கழகம்!
இந்த நான்கு அடிப்படை கோட்பாடுகளும் ஆரிய பார்ப்பனீய காலனி தத்துவத்துக்குநேர் எதிரான கோட்பாடுகளாகும் .
அதன் ஒவ்வொரு படிநிலையிலும் அந்த கருத்தியலில் மிகவும் உறுதியாக முன்னேறி கொண்டே வந்திருக்கிறது.
இதன் அடிப்படை கொள்கைகள் சராசரி மக்களின் புரிந்துணர்வை தாண்டிய வீச்சு கொண்டதாகும்.
இந்த உண்மையை இன்றைய தலைமுறையினர் பெரிதாக அறிந்திருக்கவில்லை.
இதை புரிந்து கொள்வது சற்று சிரமமாக இருக்கலாம்.
திறந்த மனதோடு அணுகினால் மட்டுமே இந்த கருத்தின் ஆழத்தை புரிந்து கொள்ளமுடியும்.
Sunday, June 5, 2022
திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்
எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின் தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்
அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு 5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்

பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது
இவர்கள் நமது தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் அல்லவே என்ற எண்ணம் கொஞ்சம் கூட திரு தொண்டைமானுக்கு இருக்கவில்லை.
கவலைப்படாதீர்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்று வாக்குறுதி அள்ளித்தர தொண்டமான்
Saturday, June 4, 2022
மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்
இந்த விடயத்தின் பின்னணி பற்றிய பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை செய்திகளும் நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல உண்மைகளை வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.
அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது
1948 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு மலையகத்தில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்
அது மட்டும் அல்லாது பல சிங்கள இடதுசாரிகளும் கூட மலையக மக்களின் வாக்கு பழத்தில் வெற்றி பெற்றிருந்தனர்
இதன் காரணமாக அந்த தேர்தலில் இடதுசாரி கட்சிகள் தென்னிலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றின . அத்தேர்தலில் வலதுசாரி கட்சியான யு என் பி UNP 42 seats தொகுதிகளில் வெற்றி பெற்றது
மீதி தொகுதிகளில் வெற்றி பெற்ற LSSP 10, the CIC 7, the BLP 5, the CP 2, the Labor Party 1, ( 21 independents).போன்றவை இடது சாரி கட்சிகளாகும் ,சுயேட்சையாக வெற்றி பெற்ற பல உறுப்பினர்களும் இடது சாரி மற்றும் தொழிலாளர் வர்க்க சார்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்களாகும்
Tuesday, May 17, 2022
சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அதிகார போட்டியே இலங்கை தமிழ் தேசியம்?
ராதா மனோகர் 21 மே 1895 - தஞ்சாவூர் சுப்பையா பிள்ளை நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் முன்னாள் அமைச்சர்!
தமிழ்நாடு,
நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையாவுக்கும் தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம்
இரா : மசாமிப்பிள்ளையின் மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார் நாகநாதன்
பிள்ளை
இவர் சட்டம் பயின்று மிகவும் இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார்.
பின்பு முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் வடமொழியும் சைவ சித்தாந்தமும் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய சாகுந்தலாவை தமிழில் சாகுந்தலா காப்பியம் என்ற பெயரில் எழுதினார் ..
சேர்
பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் சகோதரர்களுக்கு தமிழகத்தில் இருந்த அருள்
பரானந்த சுவாமிகளிடம் நெருக்கம் இருந்தது. இவர் மூலம் இலக்கணம் ராமசாமி
பிள்ளையின்குடும்பத்தோடு ராமநாதன் சகோதர்களுக்கு அறிமுகம் கிட்டியது
சுப்பையா
பிள்ளையின் மகன் நாகநாதனின் சைவ சமய அறிவினால் கவரப்பட்ட சேர் பொன்னம்பலம்
ராமநாதன் அவரை 1924 இல் இலங்கைக்கு அழைத்து வந்து தனது பரமேஸ்வரா
கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார்
Tuesday, April 12, 2022
இலங்கை பகுத்தறிவு இயக்கம் 1959 வரலாற்று பதிவு
கலப்பு திருமணம் செய்வோருக்கு நிதி உதவி
பகுத்தறிவு இயக்கம் மேற்கொண்டுள்ள முடிவு
சாதி ஒழிப்புக்கு கலப்பு திருமணம் எவ்வளவு உபயோகமானது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து விளக்குவது என்றும் கலப்புத்திருமணம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாருக்கும் ஊக்கம் அளிப்பதோடு வேண்டிய உதவி புரிவதென்றும் அகில இலங்கை பகுத்தறிவு இயக்கம் தீர்மானித்துள்ளது.
மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ள நிர்வாக அறிக்கையில் பிரஸ்தாப தீர்மானம் இடம் பெற்றிருக்கிறது
அறிவுப்பணி புரிவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் அரும்பிய பகுத்தறிவு இயக்கம் 1956 இல் பல ஊர்களிலும் வேரூன்றி தழைத்த வரலாறும்,
அடுத்த வருடத்தில் எல்லாவற்றுகுமாக தலைமை கழகம் ஒன்று உருப்பெற்ற விபரமும்.
அன்று சிலரோடு இருந்த இயக்கம் இன்று மொத்தம் 2190 உறுப்பினர்களை கொண்டு பெரும் சக்தியாக திகழும் தகவலும் நிர்வாக அறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.
இன்னும் சமூக சீர்திருத்தம் சாதி ஒழிப்பு ஆகிய துறைகளில்
இயக்கத்தின் சாதனைகளும் கொள்கை விளக்கமும் நடைபெற்ற நிகழ்ச்சி குறிப்புக்களும் நடக்கவிருக்கும் வேலைத்திட்டங்களை தரப்பட்டிருக்கின்றன .
Sunday, April 10, 2022
இலங்கை அருந்ததியர் சங்கமும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் .. வரலாறு 9 - 11 - 1957
அகில இலங்கை அருந்ததியர் சங்க கமிட்டி கூட்டம் சென்ற 9 - 11 - 1957 ல் கொழும்பு கிரீன்ஸ் லேனில் உள்ள சங்க காரியாலயத்தில் திரு . மா மு. இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது
அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . திரு நல்லையா செனட்டராக நியமிக்க பட்டதற்கு இச்சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறது
2 . தமிழ் சமூகமெங்கு புரையோடி போயிருக்கும் தீண்டாமை தொழு நோயை வேரறுக்க யாழ் நகரில் இலங்கை
திராவிட முன்னேற்ற கழகம் டிசம்பர் 28 - 29 ஆகிய நாட்களில் நடத்தும் சமூக சீர்திருத்த மாநாட்டை இச்சங்கம் வரவேற்பதோடு பொதுச்செயலாளர் ஏ சுந்தரராசனின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவொன்றையும் அனுப்புவதென தீர்மானிக்கிறது
3 - கொழும்பு முழுவதற்கும் வட்டார கமிட்டி உறுப்பினர்கள் தெரிவு செய்து அருந்ததிய மக்களை சங்க அங்கத்தவர்களாக்குவதற்கும் சங்கத்தின் சார்பில் பத்திரிகை வெளியிடுவதற்கும் திருவாளர்களான பெ கி .சண்முகம் , மா செ .அருள் . சே சேதுபதி , சே. சங்கர் ஆகியோரை கொண்ட கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டது
இலங்கை சுயமரியாதை இயக்க முன்னோடி எஸ் டி சிவநாயகம்
ராதா மனோகர் : அமரர் எஸ் டி சிவநாயகம்
![]() |
| RM.veerappan S.Rasathurai S.T.sivanayakam |
மட்டக்களப்பு பகுத்தறிவு கழக நிறுவனர்
இலங்கை திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமானவர்
அமரர் எஸ் டி சிவநாயகம் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் திரு செல்லையா ராசதுரை (முன்னாள் அமைச்சர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் திரு எஸ் டி சிவநாயகம் பற்றி சில நினைவுக
![]() |
| ST.Sivanayakam Manavai Thambi Nedunchezhiyan |
ளை காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் திரு ந.வித்தியாதரனிடம் பகிர்ந்திருந்தார்
அதில் இருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
எனக்கு இப்போது வயது 95 . அந்த தலைமுறையில் தந்தை செல்வா , வன்னியசிங்கம். ராஜவரோதயம் போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகியவர்களில் நான் மட்டும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
எஸ் டி சிவநாயகம் அண்ணன் குறித்து நினைவுகளை மீட்க எனக்கும் பல விடயங்கள் உண்டு.
ஆனால் என் வயது மூப்பு காரணமாக என்னால் பல விடயங்களை எழுதி அனுப்ப இயலவில்லை . உங்களுடன் பேச்சில் பரிமாறிக்கொள்கிறேன்.
திமுகவின் பொதுத்தேர்தல் இலாக்கா (சுதந்திரன் - 1954 ஒக்டோபர் 10 ) எஸ் டி சிவநாயகம்
சுதந்திரன் (இலங்கை) - 1954 ஒக்டோபர் 10 திராவிட முன்னேற்ற கழகத்தின்
எதிர்கால பொதுச்செயலாளர். திரு இரா நெடுஞ்செழியன் இலங்கை விஜயம் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றுவார் திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்கால பொதுச்செயலாளரும் மன்றம் மாதமிருமுறை இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு இரா.நெடுஞ்செழியன் எம் ஏ இம்மாதம் 14 ஆம் தேதி கொழும்பு வருகிறார்சுமார் பத்து தினங்கள் இலங்கையில் தங்கும் நெடுஞ்செழியன் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில்
முத்தமிழ் , இலக்கிய இன்பம் , புரட்சி கவிஞர் என்ற மூன்று தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவர் என்றும்.
கொழும்பு
திராவிட முன்னேற்ற கழக ஆதரவில் மருதானை கிண்னெர்ஸ் ரோட் அரசினர் பாடசாலை
மண்டபத்தில் 24 ஆம் தேதி ஒரு இயக்க சொற்பொழிவாற்றுவர் என்றும் தெரிகிறது.
கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழா வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் இம்மாதம் 15. 16 . 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.
திரு
நெடுஞ்செழியன் இலங்கையில் நிற்கும் காலை இலங்கையின் பல பாகங்களுக்கும்
சுற்று பிரயாணம் செய்து இடங்களையும் திமுகவின் வளர்ச்சியையும்
பார்வையிடுவார்.



.jpg)
.jpg)

.jpg)
.jpg)


.jpg)
.jpg)






.jpg)
.jpg)


