Tuesday, June 21, 2022

1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த விளம்பரம் .. யாழ்ப்பாணம்

 ராதா மனோகர் :  1928 இல் திராவிடன் பத்திரிகையில் வந்த இந்த
விளம்பரம் ஒரு நையாண்டி வகையை சார்ந்தது போல் தோன்றுகிறது ..
மக்கள் நலன் சார்ந்த விடயங்களில் பல பெரியவர்கள் எப்படிப்பட்ட மனோநிலையில் இருக்கிறார்கள் என்பதை இந்த விளம்பரம் மூலம் காட்டுவதாக தெரிகிறது ..பிரபுக்களுக்கு ஐந்து ரூபாய் பரிசு அறிவிக்கிறார்கள்
 "விளம்பரம்"
தமிழர் ஐக்கியம்
இலங்கையில் வாழும் சிங்களர் தமிழரின் ஐக்கிய விஷயமாக பாக்களியாற்றி பரிசு பெற்ற ஸ்ரீ வே தா தியாகராஜ பிள்ளை போன்றவர்கள் பெரியவர்களுக்கும் பிரபுக்களுக்கும் அறியத்தரும் விளம்பரமாவது .
தமிழ் மக்கள் தம்முள் ஒருவரை தாழ்த்தியும் ஒடுக்கியும் மிருகங்களில் கேவலமாக நடத்துவதை நிராகரித்தும் தமிழ் மக்களாகிய தம்முள் வித்தியாசம் இன்றி ஐக்கியம் வேண்டுமென்பதாக பாக்கள் அல்லது வியாச மூலமாகவேனும் எழுதி ஆவணி 30 ந் திகதிக்குள் அனுப்பும் வியாசங்களை ஏற்று தகுதி எனக்கண்டு 5 ரூபாய் பரிசு கொடுக்கப்படும் எனத்  தெரிவிக்கிறோம்.
இங்கனம் திராவிடன் ஆபீஸ்
சுன்னாகம் 

No comments:

Post a Comment