Sunday, June 5, 2022

திரு சௌமியமூர்த்தி தொண்டைமானும் திரு ஜி ஜி பொன்னம்பலமும்

 ராதா மனோகர் : குட்டாப்பிடி என்ற தோட்ட கிராமத்தில் நடந்த ஒரு கொலை வழக்கு பற்றிய செய்தி இது
அங்குள்ள தோட்டத்தில் நடந்த கலவரத்தில் தோட்டத்தை சேர்ந்த ஒருவர் கொலைசெய்யப்பட்டார்
அந்த கொலையில் சந்தேகத்தின் அடிப்படையில் எட்டு மலையக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
எட்டு தொழிலாளர்களும் கூட்டம் கூடி திடடமிட்டு இந்த கொலையை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது  
தொழிலாளர்கள் பதறிப்போய்விட்டார்கள்
எட்டு பேர்களும் அங்கம் வகிக்கும் தொழிற்சங்கத்தின்  தலைவரிடம் போய் உதவி கேட்டு மன்றாடினார் குடும்பத்தினர்

அந்த தொழிற்சங்க தலைவர் ஒரு சிங்கள வழக்கறிஞரை அணுகி இது பற்றி பேசினார் . அவர் இந்த வழக்கை கையிலெடுப்பதற்கு   5000 ரூபாய் கேட்டார் . இந்த தொகைக்கு தொழிலாளரக்ள் எங்கு போவார்கள்?
அந்த தொழிற்சங்க தலைவரும் கையை விரித்து விட்டார்

பின்பு இந்த இவர்கள் கொழும்புக்கு போய் திரு தொண்டைமானை சந்தித்து நிலமையை எடுத்து சொன்னார்கள்
கவனமாக கேட்ட தொண்டைமானுக்கு இந்த எட்டு பேர்களும் குற்றவாளிகள் அல்ல என்று தோன்றியது
இவர்கள் நமது தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் அல்லவே என்ற எண்ணம் கொஞ்சம் கூட திரு தொண்டைமானுக்கு இருக்கவில்லை.
கவலைப்படாதீர்கள் நான் முடிந்ததை செய்கிறேன் என்று வாக்குறுதி அள்ளித்தர தொண்டமான்

Saturday, June 4, 2022

மலையக மக்களின் குடியுரிமையும் கம்யூனிசமும்

 ராதா மனோகர்
:   1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு இந்திய வம்சாவளியினரின் குடியுரிமையை  பறித்த வரலாறு.தொடர்பாக சில தகவல்கள் ...
இந்த விடயத்தின்  பின்னணி பற்றிய   பல விடயங்கள் மர்மமாகவே இருக்கிறது
ஏராளமான பத்திரிக்கை  செய்திகளும்  நூல்களும் பொதுவெளிக்கு வந்தாலும் சில உண்மைகள் திட்டமிட்டு மறைக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது
அரசியல் வாதிகளின் அ
ரசியல் வியாபாரமானது பல  உண்மைகளை  வெகு நேர்த்தியாக திட்டமிட்டு மறைத்தே வந்துள்ளது.
இந்திய வம்சாவளி தொழிலாளர்களின் வாழ்க்கை தரம் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே அப்போது இருந்திருக்கிறது
எமக்கு ஏதாவது ஒரு வழியில் விடிவு வராதா என்று ஏங்கி கொண்டிருந்த மக்களிடையே இடதுசாரி கருத்துக்கள் ஓரளவு வரவேற்ப்பை பெற்றதில் ஆச்சரியம் இல்லை.


அந்த காலக்கட்டங்களில் கம்யூனிச அச்சுறுத்தல் என்ற பதம் உலக  நாடுகளில் வெகு பலமாக உச்சரிக்கப்பட்ட வார்த்தையாகும்
இந்த பின்னணியை பற்றி கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல் மலையக தொழிலாளர்களின் வாக்குரிமை பறிப்பு பற்றி பேசவே முடியாது

1948 ஆம் ஆண்டு இலங்கை நாடாளுமன்றத்திற்கு மலையகத்தில் இருந்து ஏழு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்
அது மட்டும் அல்லாது பல சிங்கள இடதுசாரிகளும் கூட மலையக மக்களின் வாக்கு பழத்தில் வெற்றி பெற்றிருந்தனர்  
இதன் காரணமாக அந்த தேர்தலில்   இடதுசாரி கட்சிகள் தென்னிலங்கையில் மிக அழுத்தமாக வேரூன்றின     .  அத்தேர்தலில் வலதுசாரி கட்சியான யு என் பி UNP  42 seats தொகுதிகளில் வெற்றி பெற்றது
மீதி தொகுதிகளில் வெற்றி பெற்ற  LSSP 10,  the CIC 7, the BLP 5, the CP 2, the Labor Party 1, ( 21 independents).போன்றவை இடது சாரி கட்சிகளாகும் ,சுயேட்சையாக வெற்றி பெற்ற பல உறுப்பினர்களும் இடது சாரி மற்றும் தொழிலாளர் வர்க்க சார்பு வாக்குகளை பெற்று வெற்றி பெற்றவர்களாகும்

Tuesday, May 17, 2022

சைவர்களுக்கு கிறிஸ்தவர்களுக்கும் இடையேயான அதிகார போட்டியே இலங்கை தமிழ் தேசியம்?

ராதா மனோகர்  21 மே 1895 -  தஞ்சாவூர் சுப்பையா பிள்ளை நாகநாதன் பிள்ளை என்கின்ற திரு சு நடேசன் முன்னாள் அமைச்சர்!  
தமிழ்நாடு, நாகப்பட்டணத்தைச் சேர்ந்த சுப்பையாவுக்கும்  தஞ்சாவூரைச் சேர்ந்த இலக்கணம் இரா : மசாமிப்பிள்ளையின்  மகளுக்கும் தஞ்சாவூரில் பிறந்தார் நாகநாதன் பிள்ளை
இவர் சட்டம் பயின்று மிகவும் இளமையிலேயே நகராண்மைக்கழக உறுப்பினரானார்.
பின்பு  முத்துக்கிருஷ்ண பரமஹம்சர் என்பவரிடம் வடமொழியும் சைவ சித்தாந்தமும் பயின்று தரிசனத்திரயம் என்ற நூலையும் எழுதினார்
வடமொழியில் காளிதாசர் இயற்றிய  சாகுந்தலாவை தமிழில் சாகுந்தலா காப்பியம் என்ற பெயரில் எழுதினார் ..
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அருணாசலம் சகோதரர்களுக்கு தமிழகத்தில் இருந்த அருள் பரானந்த சுவாமிகளிடம் நெருக்கம் இருந்தது. இவர் மூலம் இலக்கணம் ராமசாமி பிள்ளையின்குடும்பத்தோடு  ராமநாதன் சகோதர்களுக்கு அறிமுகம் கிட்டியது
சுப்பையா பிள்ளையின் மகன் நாகநாதனின் சைவ சமய அறிவினால் கவரப்பட்ட சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவரை 1924 இல் இலங்கைக்கு அழைத்து வந்து தனது பரமேஸ்வரா கல்லூரியின் அதிபர் பொறுப்பை ஒப்படைத்தார்  

Tuesday, April 12, 2022

இலங்கை பகுத்தறிவு இயக்கம் 1959 வரலாற்று பதிவு

 ராதா மனோகர் :  7 - 5 - 1959 -  எஸ் டி சிவநாயகம் - சுதந்திரன்:
கலப்பு திருமணம்  செய்வோருக்கு நிதி உதவி
பகுத்தறிவு இயக்கம் மேற்கொண்டுள்ள முடிவு
சாதி ஒழிப்புக்கு கலப்பு திருமணம் எவ்வளவு உபயோகமானது என்பதை பொதுமக்களுக்கு எடுத்து விளக்குவது என்றும் கலப்புத்திருமணம் செய்ய முன்வரும் ஆண் பெண் இருபாலாருக்கும் ஊக்கம் அளிப்பதோடு வேண்டிய உதவி புரிவதென்றும் அகில இலங்கை பகுத்தறிவு இயக்கம் தீர்மானித்துள்ளது.
மேற்படி இயக்கம் வெளியிட்டுள்ள நிர்வாக அறிக்கையில் பிரஸ்தாப தீர்மானம் இடம் பெற்றிருக்கிறது
அறிவுப்பணி புரிவதை இலக்காக கொண்டு மட்டக்களப்பில் அரும்பிய பகுத்தறிவு இயக்கம் 1956 இல் பல ஊர்களிலும் வேரூன்றி தழைத்த வரலாறும்,
அடுத்த வருடத்தில் எல்லாவற்றுகுமாக தலைமை கழகம் ஒன்று உருப்பெற்ற விபரமும்.

அன்று சிலரோடு இருந்த இயக்கம் இன்று மொத்தம் 2190 உறுப்பினர்களை கொண்டு பெரும் சக்தியாக திகழும் தகவலும் நிர்வாக அறிக்கையில் தரப்பட்டிருக்கிறது.
 இன்னும் சமூக சீர்திருத்தம் சாதி ஒழிப்பு ஆகிய துறைகளில்
இயக்கத்தின் சாதனைகளும் கொள்கை விளக்கமும் நடைபெற்ற நிகழ்ச்சி குறிப்புக்களும் நடக்கவிருக்கும் வேலைத்திட்டங்களை தரப்பட்டிருக்கின்றன .

Sunday, April 10, 2022

இலங்கை அருந்ததியர் சங்கமும் இலங்கை திராவிட முன்னேற்ற கழகமும் .. வரலாறு 9 - 11 - 1957

 சுதந்திரன்  :  யாழ் நகரில் இலங்கை திராவிட முன்னேற்ற கழக மாநாட்டில் அகில இலங்கை அருந்ததியர் சங்கம் கலந்து கொள்கிறது
அகில இலங்கை அருந்ததியர் சங்க கமிட்டி கூட்டம் சென்ற 9 - 11 - 1957 ல் கொழும்பு கிரீன்ஸ் லேனில் உள்ள சங்க காரியாலயத்தில் திரு . மா மு. இராஜகோபால் தலைமையில் நடைபெற்றது
அவ்வமயம் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1 . திரு நல்லையா செனட்டராக நியமிக்க பட்டதற்கு இச்சங்கம் தனது பாராட்டுதலை தெரிவித்து கொள்கிறது
2 . தமிழ் சமூகமெங்கு புரையோடி போயிருக்கும் தீண்டாமை தொழு நோயை வேரறுக்க யாழ் நகரில் இலங்கை

திராவிட முன்னேற்ற கழகம் டிசம்பர் 28 - 29 ஆகிய நாட்களில் நடத்தும் சமூக சீர்திருத்த மாநாட்டை இச்சங்கம் வரவேற்பதோடு பொதுச்செயலாளர் ஏ சுந்தரராசனின் தலைமையில் ஏழு பேர் கொண்ட ஒரு குழுவொன்றையும் அனுப்புவதென தீர்மானிக்கிறது  

3 -  கொழும்பு முழுவதற்கும் வட்டார கமிட்டி உறுப்பினர்கள் தெரிவு செய்து  அருந்ததிய மக்களை சங்க அங்கத்தவர்களாக்குவதற்கும் சங்கத்தின் சார்பில் பத்திரிகை வெளியிடுவதற்கும்   திருவாளர்களான பெ கி .சண்முகம் ,  மா செ .அருள் . சே சேதுபதி , சே. சங்கர் ஆகியோரை கொண்ட கமிட்டி ஒன்றும் நிறுவப்பட்டது

இலங்கை சுயமரியாதை இயக்க முன்னோடி எஸ் டி சிவநாயகம்

ராதா மனோகர் : அமரர் எஸ் டி சிவநாயகம்

RM.veerappan S.Rasathurai S.T.sivanayakam
இலங்கை பகுத்தறிவு கழக முன்னோடி
மட்டக்களப்பு பகுத்தறிவு கழக நிறுவனர்
இலங்கை திராவிட இயக்க முன்னோடிகளில் முக்கியமானவர்
அமரர் எஸ் டி சிவநாயகம் அவர்களின் மிக நெருங்கிய நண்பர் திரு செல்லையா ராசதுரை (முன்னாள் அமைச்சர் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்) அவர்களின் திரு எஸ் டி சிவநாயகம் பற்றி சில நினைவுக
ST.Sivanayakam Manavai Thambi Nedunchezhiyan

ளை காலைக்கதிர் பத்திரிகையின் ஆசிரியர் திரு ந.வித்தியாதரனிடம் பகிர்ந்திருந்தார்   
அதில் இருந்து சில பகுதிகளை இங்கு குறிப்பிடுகிறேன்.
எனக்கு இப்போது வயது 95 . அந்த தலைமுறையில் தந்தை செல்வா , வன்னியசிங்கம். ராஜவரோதயம் போன்ற தலைவர்களோடு நெருங்கி பழகியவர்களில் நான் மட்டும்தான் இன்னும் உயிரோடு இருக்கிறேன் என்று நினைக்கிறேன்
எஸ் டி சிவநாயகம் அண்ணன் குறித்து நினைவுகளை மீட்க எனக்கும் பல விடயங்கள் உண்டு. 
ஆனால் என் வயது மூப்பு காரணமாக என்னால் பல விடயங்களை எழுதி அனுப்ப இயலவில்லை . உங்களுடன் பேச்சில் பரிமாறிக்கொள்கிறேன்.

திமுகவின் பொதுத்தேர்தல் இலாக்கா (சுதந்திரன் - 1954 ஒக்டோபர் 10 ) எஸ் டி சிவநாயகம்

சுதந்திரன் (இலங்கை) - 1954 ஒக்டோபர் 10 திராவிட முன்னேற்ற கழகத்தின்

எதிர்கால பொதுச்செயலாளர். திரு இரா நெடுஞ்செழியன் இலங்கை விஜயம் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில் மூன்று சொற்பொழிவுகள் ஆற்றுவார் திராவிட முன்னேற்ற கழகத்தின் எதிர்கால பொதுச்செயலாளரும் மன்றம் மாதமிருமுறை இலக்கிய இதழின் ஆசிரியருமான திரு இரா.நெடுஞ்செழியன் எம் ஏ இம்மாதம் 14 ஆம் தேதி கொழும்பு வருகிறார்
சுமார் பத்து தினங்கள் இலங்கையில் தங்கும் நெடுஞ்செழியன் கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழாவில்
முத்தமிழ் , இலக்கிய இன்பம் , புரட்சி கவிஞர் என்ற மூன்று தலைப்புக்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்துவர் என்றும்.


கொழும்பு திராவிட முன்னேற்ற கழக ஆதரவில் மருதானை கிண்னெர்ஸ் ரோட் அரசினர் பாடசாலை மண்டபத்தில் 24 ஆம் தேதி ஒரு இயக்க சொற்பொழிவாற்றுவர் என்றும் தெரிகிறது.
கொழும்பு தமிழ் சங்க ஆண்டுவிழா வெள்ளவத்தை சைவ மங்கையர் கழகத்தில் இம்மாதம் 15. 16 . 17 ஆம் திகதிகளில் நடைபெறும்.

திரு நெடுஞ்செழியன் இலங்கையில் நிற்கும் காலை இலங்கையின் பல பாகங்களுக்கும் சுற்று பிரயாணம் செய்து இடங்களையும் திமுகவின் வளர்ச்சியையும் பார்வையிடுவார்.

Thursday, March 17, 2022

மாவிட்டபுரம் கந்தசாமி கோயில் நுழைவு போராட்டமும் .. தட்டி கழித்த தந்தை எஸ் ஜே வி செல்வநாயகமும்!

  எஸ் ஜே வி செல்வநாயகம் : நான் கிறிஸ்தவர் எனவே சைவ சமயத்தவர்களின் விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை bazeerlanka.com : தீண்டாமைக்கெதிரான 1966 ஒக்ரோபர் 21 எழுச்சியின் 50 ஆவது ஆண்டு நினைவாக: முன்னுதாரணமான ஒரு போராட்டத்தின் படிப்பினைகள்! – முதலி சின்னையன்
இலங்கைத் தமிழர்களின் வரலாற்றில் 1966 ஒக்ரோபர் 21 இல் ஆரம்பமான தீண்டாமைக்கு எதிரான போராட்ட எழுச்சி ஏற்பட்டு 2016 ஒக்ரோபர் 21 ஆம் திகதியுடன் 50 வருடங்கள் பூர்த்தியாகி இருக்கிறது. இந்தப் போராட்டம் தமிழர்களின் போராட்ட வாழ்வில் ஒரு மைல் கல்லாகவும், பெறுமதியான படிப்பினைகளை வழங்கும் பொக்கிசமாகவும் திகழ்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
இலங்கை சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து தமிழ் மக்கள் தமது இன உரிமைகளுக்காக முதலில் சாத்வீக வழியிலும், பின்னர் ஆயுதப் போராட்ட வழியிலும் போராடியிருக்கிறார்கள் எனப் பலரும் கூறுவதுண்டு. 

Tuesday, March 15, 2022

சுன்னாகம் திராவிட வித்தியாசாலை - 27 November 1927 ! திராவிடன் மாத இதழ் 1927 பெப்ரவரி 11ஆம் தேதி


 இராதா மனோகர்
: சுன்னாகம் திராவிட வித்தியாசாலை
27 November 1927 Chunnakam Jaffna  சுன்னாகம் திராவிட வித்தியாசாலை"   யாழ்ப்பாணம் வட்டுக்கோடடையை சேர்ந்த திரு மு.சி .ராசரத்தினம் 1905 இல்  கல்கத்தா பல்கலை கழகத்தில் எம் ஏ பட்டம் பெற்று யாழ்ப்பாணம் திரும்பி 1906  ஆண்டு வட்டுக்கோட்டை யாழ்ப்பாண கல்லூரியில் ஆசியராக பணியில் இணைந்தார்.  பின்பு வட்டுக்கோட்டை இந்து கல்லூரியிலும் பருத்தித்துறை ஹார்ட்லி  கல்லூரியிலும் ஆசிரியராக பணியாற்றினார்.
அதே காலக்கட்டத்தில் சட்டம் பயின்று  1911 ஆண்டு வழக்கறிஞராகவும் பணியாற்ற தொடங்கினார்.
1923  ஆம் ஆண்டு சைவ வித்தியா விருத்தி சங்கம் ஏற்படவும் காரணமாக இருந்தார் .  சம்பந்தர் வித்தியாலயம் திருநாவுக்கரசர் வித்தியாலயம் என்பன சைவ வித்தியா  விருத்தி சங்கத்தின் ஏற்பாட்டில் உருவானவையாகும்.
சைவ வித்தியா விருத்தி பாடசாலைகளில் சைவ சூழ்நிலைகளில் மாணவர்கள் கல்வி கற்க முடியும் என்று கூறப்பட்ட போதிலும் .
அவை தாழ்த்தப்பட்டமாணவர்களை அனுமதிக்கவில்லை.
அவர்கள்  தொடர்ந்தும் மிஷனரி பாடசாலைகளுக்கே செல்ல முடிந்தது. அத்துடன்  தீண்டாமையால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து விடுதலை பெற மதம் மாறி  செல்லும் நிலைமையும் இருந்தது.

Sunday, March 13, 2022

இலங்கை திராவிட இயக்கமும் இலங்கை தமிழ் தேசியமும்

ராதா மனோகர் : இலங்கை மண்ணில் 1932 ஆம் ஆண்டு தந்தை
பெரியார் ஊன்றிய திராவிட விதை!இந்த ஆண்டுதான் கொழும்பில் இலங்கை சுயமரியாதை இயக்கம் உருவானது தந்தை பெரியார் மாஸ்க்கோ பயணத்தை முடித்து கொண்டு தமிழ்நாடு திரும்பும் வழியில் 17 ஆக்டொபர் 1932 இல் இலங்கை வந்து பிரசாரங்களை மேற்கொண்டிருந்தார்
தந்தை பெரியாரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட மக்கள் பெருமளவில் இலங்கை சுயமரியாதை இயக்க செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாயினர்
குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து வரும் குடியரசு விடுதலை நாத்தீகம் போன்ற பல திராவிட இதழ்களும் மக்களிடையே பெரும் வரவேற்பை கொண்டிருந்தன.

கடுமையான பணிச்சுமைகளில் இருந்த தோழர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் சிறு சிறு இடங்களில் கூடி பெரியாரின் கருத்துக்களை கலந்துரையாடல்கள் மூலம் பரிமாறிக்கொள்வது அன்றாட நிகழ்வானது
பல பகுத்தறிவு பிரசார நடவடிக்கைகளும் போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டிருந்தன.

Thursday, January 6, 2022

இலங்கையில் பார்பனீய கோட்பாடுகள் வேருன்றிய சென்ற நூற்றாண்டு ..சில தரவுகள்

சேர் பொன்.ராமநாதன்
   இராதா மனோகர்

இந்துபோர்ட் ராசரத்தினம்
     இலங்கை தமிழர்களின் அரசியல் 
கலாச்சாரம், சமுகவியைல்  என்பது
எல்லாம் ஒரு குறிப்பிட்ட வகைய சார்ந்தது  என கருதப்படுகிறது. ஆனால் உண்மையில் அப்படிஅல்ல!
வடமாகாண மக்களின் கலாச்சாரம் அரசியல் சார்ந்த சிந்தனையும் கிழக்குமாகாண மக்களின் நிலையும் சில வேறுபாடுகளை கொண்டிருக்கிறது.
சேர் பொன்அருணாசலம்
மலையக மக்களின் சிந்தனையானது முற்றிலும் வேறு ஒரு விதமாக இருக்கிறது .
எல்லோரும் தமிழர்கள்தான் என்றாலும் நுட்பமான வேறுபாடுகள் உள்ளன.
கிழக்குமாகாணம் ஓரளவு பல்லின மக்கள் வாழும் இடமாக இருப்பதுவும்,
வடக்கு மாகாணம் பெருமளவு தமிழர்கள் மட்டுமே வாழும் இடமாக  இருப்பதுவும் கவனத்தில் கொள்ளவேண்டிய
விடயமாகும்.
மலையக மக்கள் வடக்கு மக்களோடு தொடர்புகள் அற்ற நிலையில் இருப்பது வெறுமனே ஒரு பூகோள ரீதியான விடயம் மட்டும் அல்ல.
இங்கேதான் வடமாகாண மக்களின் ஜாதீய மதவாத சிந்தனையின் பரிணாமம்  பற்றி கவனத்தில் கொள்ளவேண்டியதாக உள்ளது .
இதன் பின்னணியில் நடந்து முடிந்த போராட்டத்தின் பல  தன்மைகளை உற்று நோக்கவேண்டி உள்ளது.

Friday, December 31, 2021

கலைஞர் மீது புலிகளுக்கு ஏனிந்த கடும் கோபம்?

ராதா மனோகர்  புலிகளுக்கு கலைஞர் மீதும் ரணில் விக்கிரமசிங்க மீதும் இருக்கும் அசாத்திய கோபம் ஒரு சாதாரண விடயம் அல்ல.
புலிகளின் கூட்டு அறிவியில் என்பது ஒரு விசித்திரமான வளர்ச்சியை கொண்டிருந்தது.
சாதாரண மனிதர்கள் சிந்திப்பது போல அவர்களின் கூட்டு மனோ நிலை ஒருபோதும் இருக்கவில்லை.
அதற்கு பல காரணிகளை நாம் ஆய்வு செய்யவேண்டி இருக்கிறது.
மதங்களின் அதீத கட்டுப்பாட்டு கோட்பாடுகள் அதில் தாக்கம் செலுத்தி இருக்க கூடும் .
அப்படியாயின் இலங்கை நிலப்பரப்பில் தோன்றிய எந்த அரசியல் இயக்கத்திற்கும் இல்லாத ஒரு வித்தியாசமான சிந்தனை போக்கு புலிகளிடம் மட்டுமே எப்படி உருவானது?
இதை ஆய்வு செய்யப்புகின் தவிர்க்கவே முடியாதவாறு புலிகள் இயக்கம் காலூன்றிய   நிலப்பிரதேசம் பற்றி செய்திகள் கொஞ்சம் கவனத்திற்கு உரியதாகும்.
அந்த இயக்கம் காலூன்றியது வடஇலங்கையில் வல்வெட்டி துறையாகும்.
வரலாற்று ரீதியாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் நடைபெற்று வந்த வணிக  கடல் போக்குவரத்தில் ஒரு முக்கிய இடமாக வல்வெட்டி துறை விளங்கிற்று.

புலிகள் கலைஞரை மீறி பாஜகவை நம்பியது ஏன்? போர்நிறுத்ததை ஏன் மீறினார்கள்

 தணிகை குமரன்  : கலைஞரின் உண்ணாவிரத்திற்கு பிறகு சீஸ்ஃபயர்அறிவிப்பு வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் சென்னைக்கு வந்து இலங்கைஅரசு அனுப்பிய ஃபேக்ஸ் செய்தியைக் காட்டுகிறார்.
காலை 7 மணிக்கு துவங்கிய உண்ணாவிரதத்தை 2 மணியளவில் முடிக்கிறார் கலைஞர்.
ஆனால் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் போர் துவங்கியது எப்படி..?
கலைஞரின் உண்ணாவிரதத்திற்கு அடுத்த தினத்திற்கு அடுத்த தினம் புலிகளின் அரசியல் ஆலோசகராய் அப்போது இருந்த திரு.நடேசன் "நாங்கள் செய்வது பின் வாங்கும் தந்திரோபாயம்! 

கருணாநிதி எங்கள் வெற்றியை மழுங்கச் செய்கிறார் என்று அறிக்கை வெளியிட்டார். "இன்னும் ஒரு சில தினங்களில் இந்தியாவில் பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்துவிடும், பிஜேபி நிச்சயம் வெல்லும். அதுவரை தாக்குப் பிடியுங்கள்" என்று தமிழக அரசியல்வாதிகள் குடுத்த யோசனையைக் கேட்டே புலிகள் போரை நீடித்ததாக நார்வே குடுத்த அறிக்கை இப்போதும் இணையத்தில் இருக்கிறது!

அதிமுக என்கின்ற எம் எல் எம் ( MLM ) கம்பனி! ... ஆதாரங்களோடு ஒரு அலசல்

ராதா மனோகர் : திமுகவில் இருந்துதான் அ தி மு க என்ற கட்சி உருவானாலும் இரு கட்சிகளும் உண்மையில் நேரெதிர் திசையில் உள்ளவை.. 
அதிமுக என்ற அமைப்பு உண்மையில் ஒரு அரசியல் கட்சிக்கு உரிய எந்த இலக்கணத்தையும் கொண்டிருக்கவில்லை .
ஆனால்  அதில்  எம்ஜியார் உட்பட பல பிரமுகர்கள் .இருந்தமையால் அதுவும்  இன்னொரு திமுக போன்ற ஒரு திராவிட கட்சியே என்ற தோற்றத்தை கொடுத்தது.
அதிமுகவின் தோற்றம் என்பது எம்ஜியார் என்ற நடிகரின் ரசிகர்களின் சங்கம் என்ற அளவிலேயே பெரிதும் இருந்தது..
எப்போது எம்ஜியார் தனது  ரசிகர் மன்றங்களை ஒரு வலுவான நிறுவனமாக கட்டமைக்க தொடங்கினாரோ அன்றே எம்ஜியாரின் அமைப்பு  தொடங்க பட்டுவிட்டது .

Thursday, December 30, 2021

இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் ... மறைக்கப்பட்ட வரலாறு

இலங்கை திராவிட முன்னேற்ற கழகம் மலையக மக்களையும் வடகிழக்கு மக்களையும் இணைத்து ... மறைக்கப்பட்ட வரலாறு
முன்னாள் எதிர்கட்சி தலைவர் திரு அமிர்தலிங்கம். தமிழரசுக்கட்சி தலைவர்  எஸ். எம். இராசமாணிக்கம் எம்பி , மட்டகளப்பு எம்பி சாம் தம்பிமுத்து . முன்னாள் அமைச்சர் எஸ்.திருச்செல்வம் . தமிழரசு கட்சியின் செனேட்டர் மு.மாணிக்கம் .தமிழ் காங்கிரஸ் எம்பி சிவசிதம்பரம் போன்றோர்  அன்று இதிமுக இளஞ்செழியன் போன்றோரோடு ஒரு புரிந்துணர்வில் செயல்பட்டிருந்தார்கள்
வளன்பிச்சைவளன் : பதிவு - 166  :  : ஈழத்தில் மலையமக்களும் யாழ்பாண
தமிழ் மக்களும் இணைந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்ந்த இ. தி.மு.க மலையகத்தமிழர்களிடையே பரப்புரை மேற்கொண்டு அங்கு இ. தி.மு.க வின் கிளைகள் வேகமாக உருவாக்கியது. ஈழத்தமிழ் மக்களின் உரிமை போருக்கு இவர்களது ஒற்றுமை அவசியம் என மலையகமக்களின் குடியுரிமை காக போராடவும் தமிழ் மக்கள் சம உரிமை பெறவும் போராட தீர்மானித்து 1961 ல் அறிவிக்கப்பட்ட சத்தியாகிரக போராட்டத்தில் மலையக தமிழ் மக்களை பங்கு பெறச் செய்து புதிய வரலாற்றை உருவாக்கியது இ. தி.மு.க.

Wednesday, December 29, 2021

ஈழத்தமிழர்களிடமும் பெரியாரின் தாக்கம் உண்டு .. ஜாதிபெயர்கள் கிடையாது

ராதா மனோகர் :   பெயர்களில் உள்ள ஜாதி  குறியீடுகளை தமிழகத்தில் மட்டுமல்லாது  கடல் கடந்தது    ஈழத்தமிழர்களின் பெயர்களிலும் இருந்த ஜாதி  பெயர்களை அறவே ஒழித்து விட்டது என்பது வியப்புக்கு உரிய செய்திதான்!

அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்றுஎந்த   காலத்திலும் பேசியதாக   தெரியவில்ல.
ஆனால் அந்த மக்கள் தங்கள்  ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.   
தமிழக திரைப்படங்கள் பாடல்கள் சஞ்சிகைகள் பத்திரிகைகள் மூலம் தமிழகத்தை பற்றிய அறிவு இலங்கை தமிழர்களுக்கு ஓரளவு இருந்திருக்கிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு இலங்கை தமிழர் பற்றி யுத்ததிற்கு முன்பு வரை பெரிதாக தெரிந்திருக்கவில்லை.
சிங்களவர்கள் தமிழர்களை தாக்குகிறார்கள் என்றது தமிழகம் துடித்து எழுந்தது வரலாற்று உண்மை.
இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோரும் எம்மவரே என்று கொதித்து எழுந்த  தமிழகத்துக்கு யாழ் மையவாதிகள் பற்றி தெரிந்திருக்கவில்லை. 
 தமிழ் தேசியவாதிகளான புலிகளுக்கு திராவிட பகுத்தறிவு சுயமரியாதை போன்ற சொற்களே வேப்பங்காயாக கசந்ததில் வியப்பில்லை .
 கம்யுனிசம் என்றால் பிறவி எதிரிதான் .அதைவிட மோசமான எதிரியாக திராவிட கோட்பாட்டை வெறுத்தார்கள் . அதற்கு முக்கயமான ஒரு காரணமாக சாதி மறுப்பு என்று மட்டும் கூறிவிடமுடியாது ,
பார்ப்பனீயத்தின் அசல் வாரிசுகளாக யாழ்மையவாதிகள் இருக்கிறார்கள்.

தா. பாண்டியன் : நானே புலிகளை சரணடைகிறோம் என்று கூறாமல் ஆயுதங்கள் மௌனமாகின்றன என்று கூறுங்கள் என்றேன்

வீரகேசரி  :  நான்காம் ஈழப்போர் காலத்தில் உங்களுக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளனவே?

தா. பாண்டியன் : நான்காம் ஈழ போராட்ட காலங்களில்  எனக்கும் புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இருந்தது  உண்மைதான்.
புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் என்னுடன் தொடர்ச்சியான தொடர்புகளை கொண்டிருந்தார்.
சில அறிக்கைகளை வரைகின்றபோது அவர் என்னுடன் கலந்துரையாடுவார் . அது தொடர்பான ஆதாரங்களும்  என்னிடம் உண்டு.
இவ்வாறான நேரத்தில்தான நடேசன் என்னிடத்தில் தங்களை சரணடையுமாறு கோருகிறார்கள் . என்ன செய்வது என்பது குறித்து என்னிடத்தில் ஆலோசனை நடத்தினார் .
உங்களின் நெருகடியாயான நிலைமைகளை அறியாது  நான் தீர்க்கமாக பதிலளிக்க முடியாது என்றேன்.

இலங்கையில் பெரியாரையும் திராவிட கருத்தியலையும் இருட்டடிப்பு செய்த (தமிழகம்) பார்ப்பன பத்திரிகையாளர்கள்

ஹரன் அய்யர்
மகேஸ்வர சர்மா
ஸ்ரீ நிவாச அய்யங்கார்

ராதா மனோகர் : 
ஸ்ரீ நிவாச அய்யங்கார்
ஹரன் அய்யர்
மகேஸ்வர சர்மா
பெரியாரையும் திராவிட கருத்தியலையும் ஈழத்தில் இருட்டடிப்பு செய்தவரகள் மூன்று பார்ப்பனர்கள் .
1960- 70 களில் ஈழத்து முக்கிய 3 தமிழ் பத்திரிகைகளின் பிரதம ஆசிரியர்களாக இவர்கள் இருந்தார்கள்
வீரகேசரி பத்திரிகையின் ஆசிரியர் ஸ்ரீ நிவாசன் அய்யங்கார் (இந்து பத்திரிகையின் கஸ்தூரி ரங்கன் குடும்ப சம்பந்தி),
மகேஸ்வர சர்மா,- இவர் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகை ஆசிரியராக இருந்தார் ..மபொசியை ஈழத்துக்கு கூட்டி வந்து அறிமுக படுத்தியவர்.
ஈழநாடு பத்திரிகையின் ஆசிரியர்காக இருந்தவர் கிருஷ்ணசுவாமி பிராணதார்த்தி ஹரன் அய்யர் .இவர் திருவையாறு வைதீக பார்ப்பனராகும்
மூன்று இலங்கை பத்திரிகையாளர்கள் ..
இவரகள் எக்காரணம் கொண்டும் இலங்கை வாழ் தமிழ் மக்கள் பெரியார் பற்றியோ திராவிட கருத்தியல் பற்றியோ அறிந்துவிட கூடாது என்பதில் மிகவும் கவனமாக செயல் பட்டுள்ளனர்,
குறிப்பாக மதங்கள் சார்ந்த தமிழ் தேசியத்தை இவர்கள் திட்டமிட்டு கட்டி எழுப்பினார்கள்

ஸ்ரீ சபாரத்தினம் கொலை .. பத்மநாபா கொலை ... புலிகளின் அடுத்த குறி .... கலைஞர் மீதா?

ராதா மனோகர் :  ஸ்ரீ சபாரத்தினம் அவர்கள் கொஞ்சம் வசதியான நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவராகும்.. அவரது ஆரம்ப அரசியல் ஈடுபாடு அன்றைய தமிழர் விடுதலை கூட்டணியின் இளைஞர் ஆதரவு தளத்தில் இருந்ததான் ஆரம்பமாகிற்று .
அரசியல் கட்சிகளின் ஜனநாயக பாதை இனி ஏற்புடையது அல்ல என்ற பொதுக்கருத்து எல்லோர் மனதிலும் அப்போது உருவாகி இருந்தது.
ஈழ விடுதலையை நோக்கமாக கொண்டு பல சிறு சிறு அமைப்புக்கள் இயக்கங்கள் ஆங்கும் இங்குமாக தோன்றிகொண்டு இருதது.
அவற்றில் பலம் வாய்ந்த இயக்கங்களாக டெலோவும் ஈரோசும் பிளாட்டும் புலிகளும் உருவானார்கள்.
பின்பு ஈரோசில் இருந்து கருத்து வேறுபாடுகளால் பிரிந்த பத்மநாப டக்ளஸ் தேவனாந்தா ஆகியோர் ஈ பி ஆர் எல் எப் இயக்கத்தை தொடங்கினர்கள்.

Saturday, November 20, 2021

கலைஞரும் இலங்கையின் வடக்கு கிழக்கும் மாகாண சபை அரசும்


The return of the exile - Frontline

டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்- குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில்  கொடுராமக கொலை செய்யப்பட டெலோவின் தலைவரானார் | Thinappuyalnews

ராதா மனோகர்  : அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினருக்கு இதனால் கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக பரவலாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட வாதங்கள் வைக்கப்படுகிறது
அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்
ஏனெனில் அவர் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் .
எனவே இவரின் பழைய புலி அவதார உண்மைகளை பேசினால் அவர் மனம் புண்படக்கூடும் . அவரோ தற்போது தனது கடந்த கால தவறுகளை ஓரளவு உணர்ந்துவிட்டார் என்றும் கருத படுகிறது
ஏனெனில் புலிகளின் தொடர்புகளை முள்ளிவாய்க்கால் சம்பவங்களின்போது அறவே கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது
திரு வைகோ. திரு நெடுமாறன் . ஆசிரியர் வீரமணி . அண்ணன் குளத்தூர் மணி போன்றவர்களின் மனம் புண்படும் என்பதற்காக வரலாறு முழுவதும் திமுக வீண் பழி சுமக்கவேண்டுமா?
 கலைஞர் மீது சேறு வாரி வீசுவதையே தங்கள் வரலாறாக கொண்டவர்களுக்கு இனியும் வாய்ப்பு அழிப்பது வரலாற்றுக்கு செய்யும் துரோகம் ஆகாதா?