![]() |
யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தல்!
1981 மேமாதம் 30 ஆம் தேதி யாழ்ப்பாணம் நாச்சிமார் கோயிலடியில்
தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது
யாழ் மேயர் ராஜா விசுவநாதன் பேசிக்கொண்டிருக்கிறார்.
அந்த கூட்டத்தில் பாதுகாப்பு கடமையில் போலீசார் ஈடுபட்டு கொண்டிருக்கிறார்கள்
அங்கிருந்த ஒரு தேநீர் கடை (bench) வாங்கில் நான்கு போலீசார் உட்கார்ந்து தேநீர் அருந்தி கொண்டிருக்கிறார்கள்
எங்கிருந்தோ வந்த சில தமிழ் பயங்கரவாதிகள் அந்த போலீஸ் மீது சரமாரியாக சுட்டு விட்டு தப்பி ஓடுவிடுகிறார்கள்.
அதில் புஞ்சி பண்டா என்ற சிங்கள சார்ஜன்டும் கனகசுந்தரம் என்ற தமிழ் சார்ஜன்டும் இறந்து விடுகிறார்கள்
கான்ஸ்டபில்கள் உஸ்மான் குலசிங்க ஆகியோர் மீதும் துப்பாக்கி குண்டுகள் துளைத்தன. நல்வாய்ப்பாக அவர்கள் தப்பி விட்டார்கள்.
Sergeant Punchi Banda and constable Kanhagasuntharam died and constables Usman and Kulasinghe were wounded.
தமிழர் விடுதலை கூட்டணியால் ஊட்டி ஊட்டி வளர்க்கப்பட்ட இந்த விஷ செடிகள்தான்,
தமிழர் விடுதலை கூட்டணி தேர்தல் ஆயுதங்கள்.
அதிலும் இவர்களில் தலைவராக இருந்தவர் முன்பு தமிழர் விடுதலை கூட்டணியின் கொழும்பு கிளை செயலாளராக வேறு இருந்தவர்.
இதே நபர்கள் இந்த சம்பவத்திற்கு ஐந்து நாட்கள் முன்பாக (25 மேமாதம் 1981) வட்டுக்கோட்டை தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஆறுமுகம் தியாகராசாவை சுட்டு கொன்றிருந்தார்கள்.
திரு ஆறுமுகம் தியாகராசா அவர்கள் வட்டுக்கோட்டை இந்து கல்லூரி அதிபராக இருந்தவர். பின்பு தமிழ் காங்கிரஸ் சார்பில் (1970 இல்) வட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு திரு அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தை தோற்கடித்திருந்தார்.
1981 நடந்த யாழ்மாவட்ட அபிவிருத்தி சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் முதன்மை வேட்பாளராக போட்டியிட்ட இவரையும்
தமிழர் விடுதலை கூட்டணி ஏவல் பேய்கள்தான் கொன்றிருந்தார்கள்.
இந்த இரண்டு சம்பவங்களும் இலங்கையின் ஜனநாயகத்தை கேலி கூத்தாக்கி இருந்தன.
பொருளாதார ரீதியில் மிகவும் வெற்றிகரமான பாதையில் இலங்கை அரசு சென்று கொண்டிருந்த காலம் அது.
குறிப்பாக தெற்கு ஆசியாவிலேயே முதல் முதலில் திறந்த பொருளாதாரத்தை அறிமுக படுத்தி அதை ஒரு வெற்றிகரமான அரசியல் பொருளாதார கோட்பாடாக நிலை நிறுத்தி கொண்டிருந்தார் ஜனாதிபதி ஜேயார் ஜெயவர்தனா அவர்கள்.
அதுவரையில் ஸ்ரீமா அம்மையாரின் இரும்பு கரம் கொண்ட ஆட்சியில் இருந்த மக்களுக்கு ஜேயார் ஜெயவர்த்தனாவின் சுதந்திர பொருளாதார கொள்கை பெரிய நம்பிக்கையை அளித்திருந்தது.
அதுவரையில் பாஸ்போர்ட் எடுப்பதே சாதாரண மக்களுக்கு பெரிய சிக்கலாக இருந்தது.
ஸ்ரீமா அம்மையாரின் அந்நிய செலாவணி கட்டுப்பாடுகள் மக்களை நாட்டுக்கு உள்ளேயே கட்டிப்போட்டிருந்தது.
இப்படியாக ஒரு நல்ல நிலையை நோக்கி நாடு போய்க்கொண்டிருந்த வேளை தமிழ் தேசிய அரசியல்வாதிகளோ மறுபுறத்தில் தேர்தலுக்காக தனிநாடு வட்டுக்கோட்டை தீர்மானம் என்று மக்களை ஏமாற்றி கொண்டிருந்தார்கள்
இவர்களின் ஏமாற்று நாடகத்தில் தெரிந்தோ தெரியாமலோ பலர் ஈர்க்கப்பட்டிருந்தார்கள்
அவர்களில் பலர் அசல் சமூக விரோதிகள்.
குறுக்கு வழியில் முன்னேற வழி தேடிக்கொண்டிருந்தவர்கள்
தமிழரசு தலைவர்களை விட வேகமான குறுக்கு வழி மேதாவிகளாக இருந்தனர்.
தமிழாராய்ச்சி மாநாட்டு கலவரங்களால் பெரும் தேர்தல் வெற்றி வாய்ப்பை பெற்ற தமிழர் விடுதலை கூட்டணியினர்,
அதே பாணியில் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலிலும் கொலை கலவரம் என்ற கொடிய ஆயுதத்தை கையிலெடுத்தனர்
தலைவர்கள் ஏவி விட்ட அம்புகள் கொலைகளை செய்வார்கள் அல்லது கலவரம் செய்வார்கள்.
ஒருவேளை மாட்டிக்கொண்டு விட்டால் தமிழரசு கட்சியின் சூரப்புலி வழக்கறிஞர் பட்டாளம் நீதிமன்றங்களிலும் போலீஸ் நிலையங்களிலும் படையெடுத்து பல கொடும் குற்றவாளிகளை அநேகமாக காப்பாற்றி விடுவார்கள்.
மிகவும் வசதியான ஒரு அரசியலை இவர்கள் முன்னெடுத்திருந்தார்கள்.
செல்வநாயகத்தின் காலத்திற்கு பின்பு இதன் சாரதி ஆசனத்தில் அமர்ந்த திரு அமிர்தலிங்கம் இந்த வேலையை திறம்பட செய்திருந்தார்.
துரையப்பாவை துரோகி ஆக்கினார் .அதன் மூலம் யோகேஸ்வரனை எம்பியாக்கினார்
வட்டுக்கோட்டை தியாகராசாவையும் துரோகி ஆக்கி தொலைத்தார்.
இவர்களின் கன்டராக்ட்டு கொலைகாரர்கள் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரர்களை கொன்றதும் நிலைமை தமிழாராய்ச்சி மாநாடு கலவரத்தை விட பல மடங்கு கொழுந்து விட்டு எரிந்தது.
அதன் எதிர்வினையாக யாழ்நகரம் தீப்பற்றி எரிந்தது யாழ் பொதுசன நூல் நிலையமும் எரிந்தது
யார் எரித்தார்கள் என்பதல்ல பிரச்சனை.
இந்த அக்கிரமத்தை அரங்கேற்றியவர்கள் யார் என்பதுதான் இங்கு முக்கியமான விடயம்.
இந்த கலவரத்தால் வழமை போல தமிழர் விடுதலை கூட்டணிக்கு யாழ் மாவட்ட அபிவிருத்தி சபை தேர்தலில் பெரு வெற்றி கிட்டியது.
யாழ் மக்கள் ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்கு போடவே மக்கள் பயந்தார்கள்
யாழ் மாவட்டம் தவிர்ந்த ஏனைய தமிழ் மாவட்டங்களில் தமிழர் விடுதலை கூட்டணிக்கு அடுத்த இடத்தை ஐக்கிய தேசிய கட்சி பெற்றது.
இதை அரங்கேற்றியது சந்தேகமே இல்லாமல் தமிழர் விடுதலை கூட்டணியும் அவர்களின் ஏவல் பேய்களான இயக்கங்களுக்கும்தான்
இவர்கள் விடுதலை வீரர்கள் அல்ல . இவர்கள் சமூக விரோதிகள்
தங்கள் தலைவர்களை மிஞ்சிய சமூக விரோதிகள்.
இனங்களுக்கு இடையே மோதல்களை கட்டமைத்து அதன் மூலம் குறுக்கு வழியில் அதிகாரத்தை அடையும் தந்திரத்தில் தமிழரசு கட்சியும் அதன் நீட்சியான தமிழர் விடுதலை கூட்டணியும் கைதேர்ந்தவர்கள்.
இந்த விடயத்தில் ஆமானப்பட்ட வட நாட்டு சங்கிகளுக்கே பாடம் சொல்லி கொடுக்க கூடிய வல்லமை இலங்கை தமிழ் தேசியர்களுக்கு உண்டு.
திருமதி புனிதம் திருச்செல்வம் ( வரவேற்பு குழு தலைவி) போன்றவர்கள் அரங்கேற்றிய 4 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் எப்படி நடந்தது?
யாழ் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய வரலாற்று சாட்சியங்களை பதிவு செய்யாமல் நாம் அப்படியே கடந்து போக கூடாது.
இன்றுவரை எத்தனை பொய்கள் பொதுவெளியில் உலா வருகின்றது?
ஒரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக எவ்வளவு மோசமான அக்கிரமத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இவர்கள்?
தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரதிற்காக பலி கொடுக்கப்பட்ட அந்த 9 அப்பாவிகளின் சாபம் நீலன் திருச்செல்வம் போன்ற அப்பாவிகளின் தலையில் வந்து விழுந்தது
Navaratnam Giritharan : போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட, அது கலவரமாகியது உண்மை.
அப்பொழுது நான் கோட்டை அகழிச் சுவருக்கண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.
இது பற்றி முகநூற் பதிவுகளும் எழுதியிருக்கின்றேன்.
பேராசிரியர் திருச்சி நயினார் முகம்மது உரையாடிக்கொண்டிருந்தபோது பொலிசார் வந்தார்கள்.
மக்கள் வீதியையும் மறித்து நிறைந்திருந்தார்கள்.
பொலிசார் வந்து வீதியை மறித்து நின்றவர்களைக் கலைக்கத்தொடங்கினார்கள்.
அவர்களை நோக்கிச் செருப்புகளை மக்கள் வீசியெறிந்தார்கள்.
அங்கிருந்து அகன்ற பொலிசார் மீண்டும் வந்து, கண்ணீர்ப்புகைக்குண்டுகளை வீசிக் கலைத்தார்கள். பொலிசார் அங்கு வந்தது கூட்டத்தைக் குழப்பவா, அல்லது ஜனார்த்தனனைக் கைது செய்யவா இவை பற்றி நான் அறிந்திருக்கவில்லை
Paramanathan Kunchithapathan
It is, in my view, an undeniable truth that a tragic dimension of our history lies in the political trajectory adopted by certain Tamil leaders and parties in the past. From the early years of political mobilization, organisations such as the Illankai Tamil Arasu Kachchi (ITAK) and the All Ceylon Tamil Congress increasingly framed politics through the language of ethnic confrontation rather than through a comprehensive vision of economic and social development for the Northern and Eastern regions.
Instead of placing greater emphasis on strengthening the economy, modernising infrastructure, and advancing education, political discourse often became centred on ethnic grievances and linguistic divisions. The discouragement of learning the Sinhala language, combined with the gradual erosion of the strong **English language educational tradition that once flourished in the North, had long-term consequences. These policies inadvertently limited opportunities for younger generations in administration, commerce, and global engagement.
In earlier decades, many leaders and their associates remained uncompromising and resistant to pragmatic compromise. Rather than exploring constructive political and economic alternatives, the environment they helped create ultimately opened the door to confrontational paths, which later evolved into violent conflict. The consequences of that trajectory brought immense suffering, destruction, and lost opportunities for the Tamil people themselves.
History therefore invites a sober reflection: sustainable progress for any community must rest not on ethnic polarization but on education, economic development, coexistence, and pragmatic engagement with the wider national framework.
Such reflections are not merely about revisiting the past, but about drawing lessons for the future—so that new generations may pursue progress, stability, and intellectual advancement rather than repeating the tragedies of history.
Vijaya Baskaran
மாணிக்கதாசனின் முதலாவது ஆயுத தாக்குதல் என அறிந்தேன்.
Annesley Ratnasingham
மிக சிறந்த விரிவான பதிவு...தொடரட்டும் ...மக்கள் விரிவாக அறிந்துகொள்ளலாம்....
Murugesu Kanagalingam
ஆ.தியாகராசா காரைநகர் இந்துக்கல்லூரி அதிபர். காரைநகரையும் உள்ளடக்கியது வட்டுக்கோட்டைத் தொகுதி.இவர் ஒன்றும் யோக்கியன் கிடையாது. இவர் வெற்றியடைந்த தேர்தலில்,தலைவர் அமிர்தலிங்கம், தனது தொகுதியில் தனக்காகக் பிரசாரம் செய்வதைத் தவிர்த்து, ஏனைய தொகுதிகளில்,தமிழரசுக்கட்சியை வெல்ல வைக்க அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பாடுபட்டார்.தனது தொகுதி மக்கள் தனக்கே வாக்களிப்பர் என்று நம்பிக்கை வைத்தார்.அது தவறாக முடிந்தது. தியாகராசா, அமிர், தீவு மக்களின் வாக்குகள் இல்லாவிட்டாலும் தான் வெல்லுவேன் என்று வட்டுக்கோட்டையில் ஒரு கூட்டத்தில் பேசியதாக ஒரு பெரும் பொய்யை காரைநகரில் பரப்பிவிட்டார்.காரைநகர்(தீவுதானே) வாக்குகள்85--90 வீதம் தியாகராசாவுக்கே விழுந்தன.இப்படிப் பொய் பரப்பி எம்.பி.ஆனார்.சிறிமாவோ கொண்டு வந்த,தமிழர் உரிமைகளை மறுத்த, அரசியலமைப்புக்குச் சார்பாக வாக்களித்த மூவர், தியாகராசா,அருளம்பலம், மார்ட்டின். ஆனந்த சங்கரியும் சார்பாக வாக்களிக்கப் போகிறேன் என்று தான் நின்றவர்.பிறகு பலரும் போய் பல முறை கதைத்தபின்னர், பின் வாங்கினார்.ஜே ஆரின் திறந்த பொருளாதாரக் கொள்கை நாட்டுக்கு விளைத்த நாசம் பெரிது என்று சொல்கிறார்கள். சிறிமாவின் மூடிய பொருளாதாரக் கொள்கை சிறிது காலத்துக்காயினும் நாட்டுக்கு நன்மை விளைத்தது.உள்ளூர் உற்பத்தியும்,சுயசார்புப் பொருளாதார முறையும் ஓரளவு நன்மையேயாயினும்,சர்வதேச வளர்ச்சி நிலையில் எப்போதும் பின்பற்றத்தக்க கொள்கையல்ல. ஜே.ஆரின் குண்டர்களே யாழ்.நூலகத்தை எரித்தவர்கள்.
Vijaya Baskaran
Murugesu Kanagalingam தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தை பாராளுமன்றத்தில் கம்யூனிச பயங்கரவாதம் என நிறுவ முயன்றார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக பொலிஸ் வன்முறை ஏவ காரணமாக இருந்தவன் அமிர்தலிங்கம். இதன் காரணமாகவே தோல்வி கண்டான். அவன் இதற்காக ஒரு போதும் மன்னிப்பை கேட்டதே இல்லை. பின்னாளில் அவன் சுட்டுத் தள்ளப்பட்டான்.அந்த தண்டனை அவனுக்குத் தேவை.
Murugesu Kanagalingam
அதையும்,இதையும்,பலதையும் முடிச்சுப் போட்டு வன்முறை மனோபாவங்களை வெளிப்படுத்த முகநூல் தளமாகப் பாவிக்கப் படுவது வருத்தமளிக்கிறது.
Vijaya Baskaran
Murugesu Kanagalingam அப்படி அல்ல. அமிரின் தோல்விக்கான காரணம் அதுதான்.பொலிஸ் வன்முறையை பொதுமக்கள்மீது ஏவ தூண்டியவர்களில் அமிர்தலிங்கமும் ஒருவர். அடுத்தவர் நீலனின் அப்பா திருச்செல்வம்.இந்த வரலாறு பேசப்படுவது இல்லை. அதனால் பதிவு செய்தேன்.
Murugesu Kanagalingam
அது உங்கள் கற்பனை. தியாகராசா அதிபராக இருந்த காலத்தில் எத்தனை சிறுபான்மைத்தமிழ் மக்களின் பிள்ளைகள் அங்கே படித்தார்கள்?காரை.சுந்தரம்பிள்ளை உட்பட, படிக்கக் கூடிய பிள்ளைகள் மானிப்பாய் பகுதியில் இருந்த பாடசாலைகளில் படித்தார்கள். எனக்குத் தெரிந்த ஒரு மாணவன் சைவப் பள்ளிக்கூடத்திலிருந்து 5ம் வகுப்புக்குப் பிறகு, மேல் வகுப்புக்காக,இந்துக்கல்லூரிக்குப் போனார்.பாடசாலை ஒன்று மாறினால், ஆரம்ப நாட்களில் பாடங்களில் சற்றுப் பின்னடைவு ஏற்படுவது சகஜம். இந்த மாணவனின் பின்னடைவு காரண மாகப் பிரின்சிப்பலிடம் அனுப்பப்பட்டான். அநத மாணவன் தச்சு ஆசாரி சமூகத்தவர். இவர் தியாகராசா அவனை 'நீ கொப்பனோடை மரம் கொத்தப் போகாமல்,இஞ்சை ஏன் வந்தனி' என்று நன்கு அடி,அடியென்று அடித்து விட்டார்.தியாகராசா ஒரு மூலக்கொதியனென்று அவரை அறிந்தவர்கள் அறிவார்கள்.இந்த மாணவனின் கெட்டகாலம், அந்த ஆள் விளாசிவிட்டார்.பிறகு அவர் யாழ்டன் கல்லூரிக்கு மாறி நன்கு படித்து,SSC தேறிய பின் HSCக்கு யாழ் சென்ஜோன்ஸ்--சில் சேர்ந்தார்.அவரின் தகப்பன் வலிகாமம் மேற்கு பஸ் கொம்பனி லிமிடெட்-டின் ஓட்டுமடம் டிப்போவில் பஸ் உடற்கோப்புகளைத் திருத்தும் வேலையில் இருந்தார். CTB ஆக அரசாங்கம் கையகப்படுத்தியது பின்னால்...
Sivananthan Muthulingam
Murugesu Kanagalingam மாட்டினை யாரும் கொலை செய்ய முயலாத காரணம் என்ன?
Sivananthan Muthulingam
Vijaya Baskaran "வியட்நாம்" கலவரம் என்று அமிர்தலிங்கம் நக்கலாக விமர்சனம் செய்தார்.
Murugesu Kanagalingam
Sivananthan Muthulingam கொழும்பில் பாதுகாப்பாக இருந்ததால் முடியவில்லையோ?எனக்குத் தெரியவில்லை.(அப்போது கொலைக்கரங்கள் கொழும்பு வரை நீளவில்லைத்தானே...)
Sivananthan Muthulingam
Murugesu Kanagalingam பாதிரிகளின் ஆள் என்ற காரணத்தால் என்றே எண்ணுகிறேன்
Murugesu Kanagalingam
Sivananthan Muthulingam அதுவும் இருக்கலாம்.
Santhirapalan Saminathar
தேசியவாதம் மக்களை பேரழிவுக்குள் தள்ளும் என்பதற்கு இலங்கை தமிழ்மக்களே சாட்சி.



No comments:
Post a Comment