Thursday, December 19, 2024

வடகிழக்கு மாகாண சபையை முடக்கியத்தில் பிரபாவுக்கே முன்னோடி வரதராஜ பெருமாள்

May be an image of 1 person
Dayan Jayathilak
May be an image of 1 person
Varatha Raja Perumal

ராதா மனோகர் : இலங்கை தமிழர்களின் போராட்ட வரலாற்றில் திரு டயான் ஜெயதிலகா என்ற ஒரு மனிதரின் வகிபாகம் பற்றி பொதுவெளியில் ஒருபோதும் பேசப்பட்டதில்லை என்றெண்ணுகிறேன்
இவர் காலம்சென்ற பிரபல பத்திரிக்கை ஆசிரியர் திரு மேர்வின் டி சில்வாவின் மகனாவார்.
இளமை காலத்தில் இ பி ஆர் எல் எப் ஈரோஸ் போன்ற இயக்கங்களோடும் சில சிங்கள இடதுசாரி இயக்கங்களோடும் நெருங்கிய தொடர்பில் இருந்தார்.
வழமை போல இவர் சார்ந்த சிங்கள இடதுசாரி அமைப்புக்கள் பிற்காலத்தில் இந்திய எதிர்ப்பு தமிழ் எதிர்ப்பு போன்ற பாரம்பரிய பரிணாம வளர்ச்சியை எட்டி இருந்தன.
இவரும் இந்த பாரம்பரியத்திற்கு கொஞ்சம் கூட மாறாமல் அப்படியே அதே பரிணாம வளர்ச்சியை பெற்றிருந்தார்.

May be an image of 1 person
Umakanthan
May be an image of 1 person
Daniel Ortega


கொழும்பு செயின்ட் ஜோசெப் காலேஜ் . அக்குக்வினாஸ் கல்வி நிறுவனம், மற்றும்   பேராதனை பல்கலை கழகம் என்று இவரது கல்வி தொடர்ந்தது.
மறைந்த இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் மோசே டயனின் மீது இவரது இடதுசாரி தந்தைக்கு ஏற்பட்ட அதீத அபிமானம் காரணமாகவே இவருக்கு டயான் என்ற பெயர் சூட்டப்பட்டது என்பது ஒரு வகை நகைமுரண்தான்.
இவரின் ரகசிய இயக்க ஈடுபாடுகள் காரணமாக இவர் ் இலங்கை அரசாங்கத்தால் தேடப்படும் குற்றவாளியாக இந்தியாவில் இ பி ஆர் எல் எபின் ஆதரவில் தங்கி இருந்தார்

Tuesday, November 19, 2024

செல்வநாயகம் அமைதியானார் சேருவிலை தொகுதி உருவானது!


Parliament of Sri Lanka - Sellathambu, Xavier Mark
X,M,Sellathambu
ராதா மனோர் : 1970 க்கும் 1977 க்கும் இடைப்பட்ட காலத்தில்தான் கிழக்கு மாகாணத்தில் சேருவிலை தொகுதி உருவாக்கப்பட்டது
இத்தொகுதியனது வடக்கு மாகாணத்திற்கு கிழக்கு மாகாணத்திற்கு இடையில் சிங்கள வாக்காளர்களை பெரும்பான்மையராக கொண்ட ஒரு தொகுதியாகும்.
வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரிக்கும் ஒரு முயற்சியாக இது அப்போது கருதப்பட்டது.
ஆனால் இதற்கு எஸ் ஜே வி  செல்வநாயகம் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை
ஏன் தெரியுமா?
T. Sivasithamparam - Wikipedia
T.Sivasithambaram
அந்த காலக்கட்டங்களில்தான் தமிழரசு கட்சியும் காங்கிரஸ் கட்சியும் தமிழர் விடுதலை கூட்டணியாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.
அப்போது வவுனியா எம்பியாக தமிழரசு கட்சியை சேர்ந்த எக்ஸ் எம் செல்லத்தம்பு இருந்தார்
அதுவரை வவுனியா எம்பியாக இருந்த டி சிவசிதம்பரம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்.1977 தேர்தலில் வவுனியா எம்பி எக்ஸ் எம் செல்லத்தம்புவிற்குதான் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
மறுபுறத்தில் எல்லைக்காவலர் என்று புகழ் பெற்ற வவுனியா சிவசிதம்பரத்திற்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.
முன்னாள் எம்பி திரு டி சிவசிதம்பரம் ஏற்கனவே அடங்கா தமிழன் சுந்தரத்திலிங்கத்தை தோற்கடித்து எம்பியானவர், மூன்று தடவை எம்பியாக வெற்றி பெற்றவர்

1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்


ராதா மனோகர்

  : 1946 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 60000 அறுபதினாயிரம் இந்தியர்கள் இலங்கையில் குடியேறி உள்ளார்கள்
ஒரு வருடத்தில் இலங்கையில் உள்ள இந்திய மக்கள் தொகை சுமார் 60000 ஆக  அதிகரித்துள்ளது!
இலங்கை அரசு பதிவாளர் ஜெனரல் திரு டேவிட்சன் வெளியிட்ட முக்கிய புள்ளி விவரத்தின் ஆரம்ப அறிக்கையின்படி,
டிசம்பர் 31 ஆம் தேதி 1945 ஆம் ஆண்டு மக்கள் தொகை 6606000 ஆக இருந்தது.
டிசம்பர் 31-1946 இல் அந்த மக்கள்தொகையின் மொத்த மதிப்பீடு (இராணுவம்  மற்றும் கப்பல் ஊழியர்கள்  தொகையைத் தவிர்த்து) 6784000 ஆக இருந்தது

Thursday, November 7, 2024

துரையப்பாவை துரோகி என்று தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை

 ராதா மனோகர் : இலங்கையில் தமிழ்மொழியை தமிழர்களின் வரலாற்றை காப்பதாக உரத்து முழங்குவோர்கள் திரு அல்பிரட் தங்கராஜா துரையப்பாவின் பெயரை கேட்டாலே நடுங்குகிறார்கள்
இந்த தமிழ் தேசியர்களின் ஆவணகாப்பகங்களில் மட்டுமல்ல இணையத்தளங்களில் கூட திரு அல்பிரட் துரையப்பாவின் பெயரை வலிந்து காணாமல் போக செய்துள்ளார்கள்!
இலங்கை தமிழ் ஆளுமைகள் என்ற வரிசையில் வெறும் கிராமசபை அங்கத்தவர்கள் மற்றும் சோப்பு சீப்பு கண்ணாடி விற்பவர்கள் பெயர்கள் மற்றும் சுருக்கமான வரலாறுகள்கூட இடம் பெற்றுள்ளது
ஆனால் இன்றைய யாழ்ப்பாணத்தை கட்டி எழுப்பியதில் பெரும் பங்காற்றிய திரு அல்பிரட் துரையப்பாவின் பெயர் மட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்படுகிறது.
ஏன் தெரியுமா இந்த இருட்டடிப்பு?
இவர்களின் தமிழ் தேசியம் என்று குறிப்பிடப்படும் முதலில்லா வியாபாரத்தின் தாங்கு தூணே துரோகி என்ற சொல்தானே!
துரையப்பாவை துரோகி என்று கட்டமைத்துத்தானே இவர்களின் அரசியல் வசூல் வேட்டை நடக்கிறது!
நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு!

Monday, October 21, 2024

Cadillac.car - சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்

May be an image of 1 person and text

May be an image of 1 person and text

ராதா மனோகர் சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது

Wednesday, October 16, 2024

நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் மலையக தலைவர்களை பார்த்து......

  ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களை பார்த்து நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் கேட்டபொழுது
நாங்கள் இலங்கையில் இடதுசாரி சோஷலிச அரசை நிறுவுவோம்  அங்கு சிங்களவர் தமிழர் பிரச்சனையே இருக்காது
எனவே இதைக்காட்டி நீங்கள் (பிரிட்டிஷ்) இங்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள் இடதுசாரிகள்.
அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாக்குவங்கி மூலம் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ்காரன் தரவந்த பாதுகாப்பு விடயங்களை உதாசீனம் செய்து . நீ போ நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்றார்கள் இந்த இடதுசாரிகள்
சிங்கள மக்கள் மத்தியில் பெறமுடியாத செல்வாக்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளால் ஈடு கட்ட முடியும் என்று நம்பி ஒரே கல்லில் பிரிட்டிசாரையும் பகைத்து சிங்கள மக்களையும் பகைத்து தங்களை நம்பிய இந்திய வம்சாவளி (மலையகம்) மக்களின் வாழ்வை சூறையாடிய வரலாற்று குற்றவாளிகள் இந்த இடது சாரிகள்.

Thursday, October 3, 2024

மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில்... வந்து விழுந்தது!

 ராதா மனோகர்  : ! .திரு .ஜி ஜி பொன்னம்பலத்தை துரோகி என்று  மக்களை நம்பவைப்பதில்  திரு.எஸ்ஜேவி செல்வநாயகம் வெற்றி பெற்றார்!
2 . திரு .அல்பிரட் துரையப்பாவை துரோகி என்று மக்களை நம்பவைப்பதில் திரு அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார்!
3 .  எல்லா அரசியல் காட்சிகளையும் இயக்கங்களையும் தலைவர்களையும் மற்றும் ஏராளமான தமிழர்களை துரோகிகள் என்று மக்களை நம்பவைப்பதில் திரு .வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றி பெற்றார்!
இந்த மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் தலைகளில் வந்து விழுந்தது!

Monday, September 30, 2024

FLOATING PEOPLE - இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக சிக்கி தவிக்கும் மக்கள்

ராதா மனோகர்  ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தமும்  இந்திய ஒன்றிய அரசும்  
FLOATING PEOPLE  -  இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நூற்றாண்டுகளாக மக்கள் அங்கும் இங்குமாக போய்வந்தனர் என்பது வரலாறு!
இலங்கை சுதந்திரம் அடைந்த பின்பு இப்படியாக போக்கு வரவு செய்துகொண்டிருந்த மக்களின் தொகையானது இலங்கையில் . குறிப்பாக சிங்கள மக்களிடையே ஒரு குடிப்பரம்பல் அச்ச உணர்வை உண்டாக்கியது.
இதன் காரணமாகவே ஒரு இந்திய எதிர்ப்பு மனநிலை அங்கு உருவானது.
பல்வேறு தொழில்கள் காரணமாகவும் வியாபார நோக்கங்களுக்காகவும் ஏறக்குறைய ஐம்பதுகள் வரை இந்த போக்கு வரத்து வாழ்வியல் தொடர்ந்தது.
இலங்கையில் ஆட்சிக்கு வந்த அத்தனை அரசுகளும் இது தொடர்பாக இந்திய அரசோடு பல தடைவைகள் பேச்சுக்களை நடத்தி இருந்தன..
ஸ்ரீமாவோ சாஸ்திரி ஒப்பந்தம் இது விடயத்தில் ஒரு தீர்வை நோக்கி இருந்தது

Sunday, April 21, 2024

யாழ்தேச வெறுப்பு அரசியலும் - ஜாதி அரசியலும்

ராதா மனோகர் : யாழ்ப்பாண மக்கள்  கண்ணுக்கு தெரியாத ஒரு  invisible Segregation   வெறுப்பு முள் வேலிக்குள் சிறைப்பட்டிருக்கிறார்கள்!
யாழ்ப்பாணத்தில் உண்மையான சமூகவியல் ஆய்வாளர்கள் என்று யாராவது இருக்கிறார்களா என்று உருப்பெருக்கி கண்ணாடி கொண்டு பார்க்கவேண்டி உள்ளது!
இந்த கேள்வியை வெறும் கேலியாகவோ அல்லது கோபமாகவோ நான் எழுப்பவில்லை.
நம் சமூகத்தின் பொதுப்புத்தி பற்றிய எனது பார்வையை மட்டுமே இங்கே குறிப்பிடுகிறேன்.
எனது பார்வை சரியா தவறா என்பதை காலம்தான் கூறவேண்டும்
கடந்த நூற்றாண்டுகளாக மெதுவாக ஆனால் ஆழமாக திட்டமிட்டு அடிப்படை மனித விழுமியங்களுக்கு எதிரான கோட்பாடுகள் யாழ்ப்பாணத்தில் புகுத்த பட்டுள்ளதாக நான் கருதுகிறேன்

ஜாதிய கட்டுமானத்தை தக்க வைப்பதற்காகவே   மனித விழுமியங்களுக்கு பொருந்தாத பல கோட்பாடுகள்  யாழ்ப்பாணத்தின் பொதுப்புத்தியில் ஆழமாக பதிக்கப்பட்டுள்ளது.

சிங்கள மக்கள் நம்மை விட தரம் குறைந்தவர்கள், படிக்காதவர்கள்,   கொடூரமானவர்கள் என்பது போன்ற ஒரு மோசமான பொதுபுத்தி யாழ்ப்பாணத்தில் எப்படி  உருவானது?    
சிங்கள மக்கள் ஒரு போதும் நமக்கு இணையானவர்கள் அல்ல என்பது போன்ற கருத்துக்கள் அந்த காலங்களில் மிகவும் அதிகமாக ஒலித்தது!

தற்போது அது குறைந்துள்ளது .. ஆனால் யாழ்ப்பாண கூட்டு உளவியலில் அந்த பொதுப்புத்தி இன்னும் கொஞ்சமாவது ஒட்டியிருக்கும்  என்ற சந்தேகம் எனக்குள்ளது.

Sunday, April 7, 2024

சினிமாஸ் குணரத்தினம் ஏன் சுட்டு கொல்லப்பட்டார்? இனவாதிகளா? இடதுசாரிகளா? யார் குற்றவாளிகள்?

ராதா மனோகர்  :  இலங்கை திரையுலகின் பிதா மகன் என்றழைக்கப்பட்ட திரு கனகசபை குணரத்தினம் 20 July 1917 – 27 August 1989) அவர்களின் வரலாறு இலங்கை  மக்களால் ஏன் போதியளவு நினைவு கூறப்படுவதில்லை?
இவர் கொழும்பில் வைத்து ஒரு ஆயுத குழுவால் (ஜேவிபி)   சுட்டு கொல்லப்பட்டதாக அந்த காலக்கட்டங்களில் எல்லா ஊடகங்களும் கூறின!
கே குணரத்தினம் இலங்கை திரைப்பட உலகின் ஆதார தூணாக விளங்கியவர் . இது வெறும் அலங்கார வார்த்தை அல்ல.!
32  சிங்கள திரைப்படங்களை தயாரித்து இயக்கி உள்ளார்
அதில்  25 படங்கள் வெற்றி படங்கள், ( Box office hit) . இலங்கையில் வேறு எந்த இயக்குனரும் தயாரிப்பாளரும்  இந்த சாதனைக்கு அருகில் கூட வரமுடியாது.
இலங்கை முழுவதும் பல திரையரங்குகளை சொந்தமாக வைத்திருந்தார்.




இலங்கை திரைப்படங்களை வியாபார ரீதியில் வெற்றிகரமாக்க இவரது திரையரங்குகள் பெரும் வாய்ப்பாக அமைந்தது
அது மட்டுமல்லாமல் ஹெந்தல வத்தலையில் இவர் அமைத்த விஜயா ஸ்டியோ நவீன வசதிகளுடன் கூடியது. அங்கு ஹாலிவூட் படங்களின் படப்பிடிப்புகளும் நடந்தன.

கச்சத்தீவு ஸ்ரீமாவோ - இந்திரா காந்தி - Smiling Buddha -- அணு குண்டு!

ராதா மனோகர் :     கச்சத்தீவு  ஒப்பந்தம் பற்றிய புரிந்துணர்வுக்கு  சில விடயங்களை ஆழமாக ஆய்ந்து பார்ப்பது அவசியம்.

குறிப்பாக தெற்கு ஆசியாவில் இலங்கையின் வகிபாகம் பற்றிய வரலாறு பற்றிய ஆய்வும் முக்கியமான தொன்றாகும்!
இலங்கை ஒரு சிறிய நாடக இருந்தாலும் அது பூகோள முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் உள்ளது.
அதன் பழைய வரலாறும் சரி அண்மைக்கால வரலாறும் சரி நுட்பமாக கவனிக்க தக்கது
குறிப்பாக  தெற்காசிய பிராந்தியத்தின் முக்கியமான ஒரு தளமாக காலனித்துவ காலங்களிலும் சரி இன்றும் சரி இலங்கை விளங்குகிறது.
இந்த கோணத்தில் சில விடயங்களை பாப்போம்!   
இந்துமாக்கடல் பகுதியை  அணு ஆயுதங்கள் அற்ற ஒரு பகுதியாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை சுதந்திரம் அடைந்த காலங்களில் இருந்தே வலியுறுத்தி வந்துள்ளது.
 May 1954 இல் தெற்கு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மாநாடு கொழும்பில் நடந்தது
அந்த மாநாட்டில் இலங்கை பிரதமர் சேர் ஜான் கொத்தலாவலை *Sri Lanka’s Prime Minister Sir John Kotelawala)  அவர்கள் இது பற்றி கூறுகையில்:
உலகில் பெரும் நாசத்தை விளைவிக்க கூடிய அணு ஆயுத போட்டி பற்றி ஊடகங்களை இருட்டடிப்புக்களையும் தாண்டி சில கவலைக்குரிய செய்திகளை அறிகிறோம்.
உலக மக்களின் கரிசனையை மனதில் கொண்டு அமெரிக்கா ரஷியா பிரித்தானிய போன்ற நாடுகள் இது பற்றிய செய்திகளை வெளிப்படையாக கூறவேண்டும் என்று வலியுறுத்தினார்
1958 ஆம் ஆண்டு ஐநாவில் இலங்கை சார்பாக கலந்து கொண்ட அமைச்சர் டி பி சுபாசிங்கா இது பற்றி ஐநாவில் பேசும்பொழுது  : “For all countries, whether large or small, has a right to protest against policies which endangered their very existence” 



சிறிய நாடுகளாக இருந்தாலும் பெரிய நாடுகளாக இருந்தாலும் தங்களின் இருப்புக்கு சவாலாக  இருக்க கூடிய திட்டங்களை எதிர்க்கும் உரிமை உண்டு என்று குறிப்பிட்டார்.