Saturday, November 22, 2025

இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை - வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.

Prime Minster Jawaharlal Nehur   - Prime Minister D.S.Senanayaka
 ராதா மனோகர்
: இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளி மக்களின் இலங்கை குடியுரிமை  பற்றி இந்த நிமிடம் வரை ஏராளமான வரலாற்று பொய்கள் கட்டமைக்கப்படுகிறது.
அதில் கவனிக்க வேண்டிய சில விடயங்களை பற்றி இப்போது பாப்போம்.
இலங்கை இந்தியா பாகிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளும் பிரித்தானியாவிடம் இருந்து ஏறக்குறைய சமகாலத்தில் சுதந்திரம் பெற்ற நாடுகளாகும்.
இந்த மூன்று நாடுகளின் பல பிரச்சனைகள் பெரிதும் பொதுவானவை.
அந்த பிரச்சனைகள் எப்படி எதிர்கொள்ள பட்டன என்பது ஆய்வுக்கு உரியது.
இந்தியாவும் பாகிஸ்தானும் ( பங்களாதேஷ் உள்ளிட்ட) ஒரு போர்முனையில் பிரியவேண்டிய சூழ்நிலை உருவானது.
இரு பகுதி எல்லைகளும் பிரிக்கப்பட்ட போது இரத்த ஆறு ஓடியது.
மேற்கு பாகிஸ்தான்  எல்லையிலும் கிழக்கு பாகிஸ்தான்  எல்லையிலும் ஒரு வரை ஒருவர் வெட்டி கொன்றார்கள்.
இதில் சுமார் இரண்டு இலட்சம் மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது 

Wednesday, November 19, 2025

திருகோணமலை புத்த சிலை - வழிபாட்டு தலமல்ல ..அது ஒரு உணவகம்

 ராதா மனோகர் :  இலங்கை ஏறக்குறைய 70 ஆண்டுகளாக இனவாத மதவாத ஜாதிவாத  சேற்றுக்குள் இருந்து மெதுவாக மேலெழுந்து வருகிறது!
இப்போது என்ன காரணம் கொண்டும் வெறுப்பு அரசியலை தூண்டி விடுவது சரியல்ல.
எல்லாவற்றிலும் மேலாக பௌத்தம் தமிழர்களின் மதமும்தான் சிங்கள மொழியும் தமிழர்களின் மொழிதான்.
அது பௌத்தத்தை பார்ப்பனர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்ட ரகசிய மொழி,
பார்ப்பனர்கள் கடலை கடக்க கூடாது என்ற அந்த காலத்து வழக்கப்படி அவர்கள் இலங்கைக்கு வரவில்லை.
எனவே இலங்கையில் அவர்களால் ஆபத்து இல்லை. 
இந்த காரணத்தால்தான் அது ஓரளவு மக்கள் பேசும் மொழியாக பரிணாம வளர்ச்சி அடைந்தது .
மேலும் தமிழ் மொழியை சைவர்கள் கைப்பற்றி தமிழும் சைவமும் ஒன்று என்ற ரீதியில் மன்னர்களின் ஆதரவோடு அதை நடைமுறைப்படுத்தினர்.

Friday, November 7, 2025

இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை கொடுக்க வந்த சுப்பிரமணியம் சாமி . தடுத்த சந்திரஹாசன்

May be an image of one or more people
No photo description available.

 ராதா மனோகர் : திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் 10 November 1990 – 21 June 1991 காலப்பகுதியில் இந்திய சட்ட அமைச்சராக பணியாற்றினார்!
இந்தியாவில் தங்கி இருந்த இலங்கை தமிழர்களை பொறுத்தவரை இது ஒரு முக்கியமான காலக்கட்டம்,
(மேலே குறிப்பிட்ட காலப்பகுதியைவிட மேலும் சில மாதங்கள் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் காபந்து அரசிலும் care taker government அதே பதவியில் இருந்தார்)
அப்போதுதான் திரு சுப்பிரமணியம் சாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் இந்தியாவில் தங்கி இருந்த சுமார் ஒரு இலட்சத்திற்கு அதிகமான இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க முன்வந்தார்.
அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பதில் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று திரு.எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் மகன் திரு எஸ் சி சந்திரகாசனிடம் தெரிவித்தார்.

Sunday, November 2, 2025

சோவியத்தின் ஸ்டோர் ரூம் - டெத் ஆப் ஸ்டாலின் சினிமா விமர்சனம்

May be an image of the Oval Office and text that says '期明! SOVIET STORE ROOM imgflip.com imgflip. com INSANELY FUNNY. THE POUTICAL SATIRE WT NEED RIGHT NOW. La Weakly'

  ராதா மனோகர்  : சோவியத் ஸ்டோர் ரூம்!
பிரான்ஸ் பிரிட்டன் ஹாலந்து கூட்டு தயாரிப்பான டெத் ஆப் ஸ்டாலின் திரைப்படம் ஒரு சில ஆண்டுகளுக்கு முன்புதான் வெளியானது.
லா மோர்த் து ஸ்டாலின் la mort de staline என்ற பிரெஞ்சு வரலாற்று நாவல் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருக்கிறது.
சோவியத் அதிபர் ஸ்டாலினின் Joseph Stalin மறைவும் அதற்கு பின்பு எப்படி குருஷேவ் Nikita Khrushchev பதவிக்கு வந்தார்.
அதுவும் சர்வ வல்லமை பொருந்திய இரகசிய படை தலைவன் பெரியா NKVD head Lavrentiy Beria ஒரு புறம்
ஸ்டாலினுக்கு எல்லா விதத்திலும் இரண்டாவது இடத்தில் இருந்த மலங்கோவ் Deputy Chairman Georgy Malenkov போன்றவர்களையும் மெதுவாக ஒதுக்கி தள்ளிவிட்டு மேலே வருவது என்பது திகைப்பையும் திகிலையும் ஊட்டும் சம்பவமாகும்.

No photo description available.


ரேசர் பிளேட்டின் மீது நடப்பது போன்ற சாகசம் அது.
கொஞ்சம் தவறினாலும் தலை போய்விடும்
அப்படித்தான் குருஷேவ் அதிபர் பதவியை நோக்கி மேலே நடந்து வரும்போதே பெரியா இதர கூட்டாளிகளால் போட்டு தள்ளப்பட்டார்
அவரோடு அதுவரை கூட இருந்து (ஒரு சமாந்திர அதிகார பீடத்தின்) சோவியத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்து கொண்டிருந்தவர்களும் போட்டு தள்ளப்பட்டார்கள்.