Thursday, July 10, 2025

திரு .அல்பிரட் துரையப்பாவின் தலைமீது எஸ்ஜேவி ல்செவநாயகம் வைத்த முள்கிரீடம்

ராதா மனோகர்   யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவாவதை எஸ்ஜேவி செல்வநாயகமும் அவரின் தமிழரசு கட்சியும் ஏன் மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள்?
தமிழர்களின் கல்வி சார்ந்த இவ்விடயத்தை  வரலாற்று ஆய்வுக்கு உட்படுத்த வேணடும்,.
தமிழரசு கட்சியின் மேட்டுக்குடி பாசிசம் அம்பலமாகுவதை தெளிவாக காணலாம்! 
ஆரம்பம் முதலே யாழ்ப்பாண பல்கலை கழகம் அமைவதை இவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள் என்பதை இப்போது நம்புவது மிகவும் சிரமமாக இருக்கும்.
அந்த அளவு இவர்கள் மோசமானவர்களா என கருத தோன்றும் ,
இது ஒரு அதிர்ச்சி அளிக்கும் விடயமாகும்!
இலங்கை தமிழ் தேசியர்கள் அடிப்படையில் சித்தாந்த ரீதியில் வெறுமையானவர்கள் என்பதை முதலில் ஞாபகத்தில் இருத்தி கொள்ளவேண்டும்.


இவர்களின் வெறுப்பு அரசியல் சித்தாந்தத்திற்கு மக்கள் கல்வி அறிவு பெறுவது என்பது உகந்தது அல்ல என்பதுவும் ஒரு முக்கிய காரணமாகும்..

Tuesday, July 8, 2025

குலக்கல்வியை இலங்கையில் முன்னெடுத்த தமிழரசு கட்சி - எஸ்ஜேவி செல்வநாயகம் - 1960

May be an image of 1 person and text

 ராதா மனோகர் : குழந்தைகளுக்கு படிப்பிப்பதோடு (குல) தொழிலையும் சொல்லியும் தரவேண்டுமாம்!
குல தொழிலில் என்ன வசை இருக்கிறது ?
1960 ஆம் ஆண்டு எஸ்ஜேவி செல்வநாயகத்தின் இலங்கை தமிழரசு கட்சி,
தமிழர் உரிமைக்காக மாபெரும் சத்தியா கிரக போராட்டம் நடத்தியதாக கூறப்படும்,
அந்த காலகட்டத்தில் தமிழரசு கட்சியின் சுதந்திரன் பத்திரிகையில் வந்த செய்தி இது!
அப்போது சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் பெயர் மகேஸ்வர சர்மா.
குலுக்க பட்டர்களின் அசல் வாரிசுகள் இவர்கள் 
அழிந்து கொண்டிருக்கும் ஜாதியை அழியவிடாமால் பாதுகாப்பதற்கு குழந்தைகளுக்கு குலத்தொழிலை கற்பிப்பதுதான் ஒரே வழி என்று ராஜாஜி முன்னெடுத்து செருப்படிவாங்கியது வரலாறு!
அன்று ராஜாஜி முன்னெடுத்த குலத்தொழில் சதி முயற்சியை முறியடித்தது திராவிட  இயக்கம்!