Monday, October 21, 2024

Cadillac.car - சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்

May be an image of 1 person and text

May be an image of 1 person and text

ராதா மனோகர் சினிமாஸ் குணரெத்தினமும் ஏவி மெய்யப்ப செட்டியாரும்
ஏவிஎம் நிறுவனம் தயாரித்த மூன்றாவது திரைப்படம் வாழ்க்கை
22 December 1949 இல் இது வெளியானது
மிக பிரமாண்டமான வெற்றியை பெற்றது
பல திரையரங்குகளில் 25 வாரங்களை நிறைவு செய்தது.
இத்திரைப்படத்தை இலங்கையில் ஒரு தமிழ் இளைஞர் வாங்கி வெளியிட்டார்
அந்த இளைஞருக்கு பெரிய பின்னணி கிடையாது
சிலோன் தியேட்டர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி திரைப்படங்கள் பற்றிய அனுபவ அறிவு கொஞ்சம் இருந்தது
அந்த நிறுவனத்திற்காக திரைப்படங்கள் வாங்குவதற்கு சென்னை வந்து சில திரைப்பட தயாரிப்பாளர்களின் அறிமுகமும் கிடைத்திருந்தது

Wednesday, October 16, 2024

நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் மலையக தலைவர்களை பார்த்து......

  ராதா மனோகர் : இலங்கை இந்திய வம்சாவளி மக்களை பார்த்து நாங்கள் போய்விட்டால் உங்கள் பாதுகாப்பு கேள்வி குறியாகிவிடுமே என்று பிரிட்ஷ்காரன் கேட்டபொழுது
நாங்கள் இலங்கையில் இடதுசாரி சோஷலிச அரசை நிறுவுவோம்  அங்கு சிங்களவர் தமிழர் பிரச்சனையே இருக்காது
எனவே இதைக்காட்டி நீங்கள் (பிரிட்டிஷ்) இங்கு தொடர்வதை அனுமதிக்க முடியாது என்று பதிலடி கொடுத்தார்கள் இடதுசாரிகள்.
அதுமட்டுமல்ல மலையக மக்களின் வாக்குவங்கி மூலம் தாங்கள் ஆட்சிக்கு வரமுடியும் என்ற நம்பிக்கையில் பிரிட்டிஷ்காரன் தரவந்த பாதுகாப்பு விடயங்களை உதாசீனம் செய்து . நீ போ நாங்கள் பார்த்துக்கொள்ளுவோம் என்றார்கள் இந்த இடதுசாரிகள்
சிங்கள மக்கள் மத்தியில் பெறமுடியாத செல்வாக்கை இந்திய வம்சாவளி மக்களின் வாக்குகளால் ஈடு கட்ட முடியும் என்று நம்பி ஒரே கல்லில் பிரிட்டிசாரையும் பகைத்து சிங்கள மக்களையும் பகைத்து தங்களை நம்பிய இந்திய வம்சாவளி (மலையகம்) மக்களின் வாழ்வை சூறையாடிய வரலாற்று குற்றவாளிகள் இந்த இடது சாரிகள்.

Thursday, October 3, 2024

மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில்... வந்து விழுந்தது!

 ராதா மனோகர்  : ! .திரு .ஜி ஜி பொன்னம்பலத்தை துரோகி என்று  மக்களை நம்பவைப்பதில்  திரு.எஸ்ஜேவி செல்வநாயகம் வெற்றி பெற்றார்!
2 . திரு .அல்பிரட் துரையப்பாவை துரோகி என்று மக்களை நம்பவைப்பதில் திரு அமிர்தலிங்கம் வெற்றி பெற்றார்!
3 .  எல்லா அரசியல் காட்சிகளையும் இயக்கங்களையும் தலைவர்களையும் மற்றும் ஏராளமான தமிழர்களை துரோகிகள் என்று மக்களை நம்பவைப்பதில் திரு .வேலுப்பிள்ளை பிரபாகரன் வெற்றி பெற்றார்!
இந்த மூன்று பேர்களின் வெற்றிகள்தான் முள்ளிவாய்க்காலில் தமிழர்களின் தலைகளில் வந்து விழுந்தது!