Thursday, October 30, 2025

ஐந்து இலட்சம் காணி உறுதி மூலபத்திரங்களை அள்ளிச்சென்ற புலிகள் - 1988


 01 ஆக்டொபர்  1988 -   யாழ் காணிப்பதிவு திணைக்களத்தில் இருந்து 
5 இலட்சம் காணி உறுதிகளின் மூலப்பிரதிகள் காணாமல் போய்விட்டன!
காணி மூலப்பதிவேடுகளின் 250  தொகுப்புக்கள் volumes யாழ் காணி பதிவு திணைக்களத்தில் இருந்து சமீபத்திய அசம்பாவிதங்கள் போது காணாமல் போய்விட்டன என்று தெரியவருகிறது.
இந்த பதிவேடுகளில் தொகுப்பு ஒவ்வொன்றிலும் சுமார் இருநூறு காணி மூல பிரதிகள் வரை தொகுத்து வைக்கப்பட்டிருந்தன   என்று கூறப்படுகிறது. 
இதன்படி யாழ் மாவட்டத்தில் சுமார் ஐந்து இலட்சம் காணி உறுதிகளுக்கான மூலப்பிரதிகள் காணாமல் போயிருப்பதாக மதிப்பிட பட்டிருக்கிறது.
கிளிநொச்சி மாவட்டம் உட்பட யாழ் மாவட்டத்தில் உள்ள காணிகளின் மூலப்பிரதிகள் அடங்கிய இரண்டாயிரத்திற்கும் அதிகமான பதிவேட்டு தொகுப்புக்கள் யாழ்ப்பாணம் காணி பதிவு திணைக்களத்தில் வைக்கப்பட்டிருந்தன.

Saturday, October 18, 2025

இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை கருவிலேயே கொன்ற திரு அண்ணாமலை வரதராஜ பெருமாள்

No photo description available.
ராதா மனோகர் : இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்க பெற்ற நன்மைகள் அனைத்தையும்  புலிகளுக்கு முன்பே ஒருவர் தோற்கடித்தார் என்பது தெரியுமா?
புலிகளுக்கு முன்பே முதல் கோணல் முற்றும் கோணல் என்று கூறக்கூடிய அளவு பெரும் தீங்கிழைத்தவர் திரு.வரதராஜ பெருமாள்  ஆகும்.


வடகிழக்கு மாகாண சபையை ஒரு தனி ஈழம் என்பதாக சிங்கள இனவாதிகள் தென்னிலங்கையில் கடுமையாக பிரசாரம் செய்து கொண்டிருந்தார்கள் 
ஜேவியும் பல இனவாத குழுக்களும் தென்னிலங்கையில் மிக பெரிய பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார்கள்! 
காலி மாத்தறை ஆகிய மாவட்டங்கள் ஜேவிபியின் கட்டுப்பாட்டிலேயே இருந்தது என்று கருதும் அளவுக்கு   நிலைமை மோசமாகி விட்டிருந்தது.