Wednesday, August 6, 2025

4 உலக தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் உண்டாக்கியது தமிழ் குண்டர்கள்தான்


 திருமதி புனிதம் திருச்செல்வம் ( வரவேற்பு குழு தலைவி) போன்றவர்கள் அரங்கேற்றிய 4 உலக  தமிழாராய்ச்சி மாநாட்டில் கலவரம் எப்படி  நடந்தது?
யாழ் தமிழாராய்ச்சி மாநாடு பற்றிய  வரலாற்று சாட்சியங்களை பதிவு செய்யாமல் நாம் அப்படியே  கடந்து போக கூடாது.
இன்றுவரை எத்தனை பொய்கள் பொதுவெளியில் உலா வருகின்றது?
ஒரு அல்பிரட் துரையப்பாவை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக எவ்வளவு மோசமான அக்கிரமத்தை அரங்கேற்றி உள்ளார்கள் இவர்கள்?  
தமிழரசு கட்சியின் தேர்தல் பிரசாரதிற்காக பலி கொடுக்கப்பட்ட அந்த 9 அப்பாவிகளின் சாபம் நீலன் திருச்செல்வம் போன்ற அப்பாவிகளின் தலையில் வந்து விழுந்தது 
Navaratnam Giritharan :  போலீசாரை நோக்கி கற்கள் வீசப்பட, அது கலவரமாகியது  உண்மை. 
அப்பொழுது நான் கோட்டை அகழிச் சுவருக்கண்மையில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

Friday, August 1, 2025

திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும் - திருமதி புனிதம் திருச்செல்வமும் + திரு முருகேசு திருச்செல்வமும்

Punitham Thiruchelvam

 ராதா மனோகர்
: திருமதி புனிதம் திருச்செல்வமும்  + திரு முருகேசு திருச்செல்வமும்  
திரு நீலன் திருச்செல்வத்தின் கொலையும்!
இலங்கை தமிழர்களின் போராட்டம் என்பது இன அடக்கு முறையின் வெளிப்பாடு என்று பொதுப்புத்தியில் கருதப்படுகிறது.
ஆனால் உண்மை அதுவல்ல 
1970 வரை ஆட்சியில் இருக்கும் எந்த கட்சிக்கும் இலங்கை தமிழரசு கட்சியின்  சுமார் பதினைந்து நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேவை இருந்தது.
Alfred duraiyappa srimavo bandaranayake 


ஆனால் 1970 இல் பதவிக்கு வந்த ஸ்ரீ மாவோ அம்மையாரின் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு பதவிக்கு வந்தது . இதன் மூலம் தமிழரசு கட்சி போன்ற சிறுபான்மையினரின் கட்சிகளின் தேவை அவருக்கு இருக்கவில்லை.
அது மட்டுமல்ல அந்த தேர்தலில் தமிழரசு கட்சியின் தலைவர் பொது செயலாளர் உட்பட நான்கு தலைவர்கள் தோல்வி அடைந்தனர். 
தமிழ் காங்கிரஸ் கட்சியின் மூன்று முக்கிய தலைவர்களும் தோல்வி அடைந்தனர் 
மறுபுறத்தில் வெற்றி பெற்ற தமிழரசு கட்சியினரும் மிக சொற்ப வாக்குகளால் ( (உ+ம் = 56 - 69)  மட்டுமே வெற்றி பெற்றிருந்தனர் .
இரு கட்சிகளின் பெருந்தலைவர்கள் தோற்றுவிட  அந்த இடங்களில்  கொஞ்சம் அட்ரஸ் இல்லாத புதியவர்கள் தெரிவாகினர்  .