![]() |
![]() |
ராதா மனோகர் : தமிழ் தேசியத்தை தோண்ட தோண்ட கிடைப்பது எல்லாம் சுயநல அடையாள வரலாற்று வடுக்கள் மட்டுமே!
இன்றுவரை
புகழ் பெற்ற வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழ் தேசியத்தின் அடுத்த
கட்ட பாய்ச்சல் என்றுதான் பலரும் நம்பி கொண்டிருக்கிறார்கள்.
அது உண்மையில் தேர்தல்களில் தோற்றுப்போன ஏழு தலைவர்களின் நாடாளுமன்ற மீள் வரவுக்கானது மட்டுமே!
அன்று வரை பச்சை மண்ணும் சுட்ட மண்ணும் ஒரு போதும் ஒன்றாக சேராது என்று சொல்லி வந்த எஸ்ஜேவி.செல்வநாயகம்,
திரு ஜி ஜி பொன்னம்பலத்தின் வீடு தேடி சென்று ஒற்றுமையை வலியுறுத்தியதாக கதை அளப்பார்கள்!
வட்டுக்கோட்டை தீர்மானம் என்பது தமிழரின் உரிமை போராட்டத்தின் மைல் கல் என்று நம்பினார்கள் பலர்!