ஸ்ரீ சின்னத்தம்பி ராமநாதன் சொன்ன சாட்சியம்
மிஸ்டர்ர் ஹெயிலி : நல்லூர் கந்தசாமி கோயிலை பற்றி உமக்கு தெரியுமல்லவா? ஆம்
கோயிலுக்கும் உமது வீட்டிற்கும் எவ்வளவு தூரம் இருக்கும்? 100 யார் இருக்கும்
அங்கே எவ்வளவு காலம் இருந்திருக்கிறீர்? 27 வருட காலம்
நீர் கந்தசாமி கோயிலுக்குள் கிரமாமாய் போவதா? ஆம்
எவ்வளவு காலமாய் போய் வருகிறீர்? 32 வருட காலமாக
கிரமமாய் போய் வருகிறீர்? இங்கே இருக்கும் வரையில் தினமும் போய்வந்தேன்.
உமது தகப்பனார் அங்கே இருந்தவரா? மண்டைதீவில் இருந்தவர்
உம்முடைய மனைவி பகுதியார் கிரமமாய் கோயிலுக்கு போகிறவரல்லவா ? ஆம் மாமனாரும் (பெண் தந்த) ஒரு பிரசித்த நொத்தாரிசாக இருந்தவர் . சங்கரப்பிள்ளை அவர் மூலமாகவே பல உறுதியை முடிப்பித்து இருக்கிறார்
சங்கரப்பிள்ளையை உமக்கு நேரே தெரியுமா? ஆம்
இந்த் மாப்பாணர் குடும்பத்தில் உம்முடைய காலத்திலுள்ளவர்களை உமக்கு தெரியுமா? ஆம்
சுயமரியாதை அற்ற மனிதர்கள் மொழியின் பெயராலும் ஜாதி மதங்களின் பெயராலும் வர்க்கத்தின் பெயராலும் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்வார்கள் Self Respect - Social Justice - Free Thinking
Tuesday, August 30, 2022
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு - 1928 - part 4
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆம் ஆண்டு part 3
இந்த கோயிலுக்கும் அதற்கு ஏதும் தொடர்புண்டா? தம்பையா குருக்கள் முந்தி கந்தசாமி கோயில் பூசகருள் ஒருவராக இருந்தவர் . பூசையை விட்டபின் அந்த கோயிலை எதிரிக்கு கட்டினார்.
அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை
அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்
அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம்
அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று மேற்கில் உள்ளதொன்று.
மூன்றாவது காணி 13 ஆம் திருவிழா செலவிற்கு ஒருவரால் தரும சாதனஞ்செய்ய பட்டது . 50 பரப்பு கொண்டது
நீங்கள் குடியிருக்கும் வளவு ஊரவர்கள் தந்ததல்ல? இல்லை
பூந்தோட்டம் இருக்கும் வளவுக்கு பெயரென்ன? குருக்கள் வளவு
தோம்பிலே குருக்கள் வளவு என்று சொல்லப்பட்டது எதனை? மேற்கு தெருவின் மேற்புறத்துள்ள நிலத்தை
தோம்பிலே குறிக்கப்பட்ட நிலம் இதுதான் என்று காட்ட உம்மால் முடியுமா? முடியாது
அவர்களுக்கு ஒரு தொடர்பும் இல்லையா ? இல்லை
அம்போடு வளவில் நீங்கள் குடியிருக்கும் காணி எத்தனை பரப்பு? இருபத்தியேழு இருபத்தியெட்டு பரப்பிருக்கும்
அதெப்படி உங்களுக்கு வந்தது? என் தாயாரின் சீதனம்
அம்போடு வளவு என்னும் பெயரோடு எத்தனை காணிகள் உண்டு? மூன்று , நாங்கள் இருபத்தொன்று . தம்பையா குருக்களுக்கு உரியதொன்று மேற்கில் உள்ளதொன்று.
மூன்றாவது காணி 13 ஆம் திருவிழா செலவிற்கு ஒருவரால் தரும சாதனஞ்செய்ய பட்டது . 50 பரப்பு கொண்டது
நீங்கள் குடியிருக்கும் வளவு ஊரவர்கள் தந்ததல்ல? இல்லை
பூந்தோட்டம் இருக்கும் வளவுக்கு பெயரென்ன? குருக்கள் வளவு
தோம்பிலே குருக்கள் வளவு என்று சொல்லப்பட்டது எதனை? மேற்கு தெருவின் மேற்புறத்துள்ள நிலத்தை
தோம்பிலே குறிக்கப்பட்ட நிலம் இதுதான் என்று காட்ட உம்மால் முடியுமா? முடியாது
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு -- part 2
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு 1928 ஆண்டு உரிமை தத்துவ வழக்கிலும் உம்மை கோர்ட்டில் விளங்கியதல்லவா? ஆம்
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று முந்தி சொன்னீரா? இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது
ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை
பொதுக்கோயில் என்ற எண்ணத்திற்றானே ஊரவர்கள் ஏதும் தானம் செய்து வந்தார்கள்? இல்லை
1916 இற்கு முந்தி கோயிற் பரிபாலனத்தை பற்றி ஒரு உறுதியுமில்லையல்லவா? ஒரு உறுதி முன்பிருந்து ஆனால் இப்போது எங்கள் கைவசம் இல்லை
நீதிபதி : என்ன உறுதி ? கோயிலிருக்கும் நிலத்தை பற்றிய உறுதி
ஸ்ரீ குலசிங்கம் : கோயிற் பரிபாலனத்தை பற்றிய முதல் உறுதி உம்முடைய தாயாரால் 1916 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதா? ஆம் தாயாரும் தமையனாரும் சேர்ந்து முடித்த உறுதியாகும்
நீங்களும் உரிமை தத்துவத்திற் கோயிலாதனங்களை சேர்க்கவில்லையா? தரும சொத்தானபடியால் சேர்க்கவில்லை
கோயில் தரும பொருள் வகுப்பை சேர்ந்ததென்று முந்தி சொன்னீரா? இல்லை அது சொந்த பொருள் சிலருடைய வணக்கத்திற்காக கட்டப்பட்டது
ஆனால் ஆதியில் கோயில் பொதுக்கோயிலாகதான் கட்டப்பட்டதல்லவா? இல்லை
பொதுக்கோயில் என்ற எண்ணத்திற்றானே ஊரவர்கள் ஏதும் தானம் செய்து வந்தார்கள்? இல்லை
1916 இற்கு முந்தி கோயிற் பரிபாலனத்தை பற்றி ஒரு உறுதியுமில்லையல்லவா? ஒரு உறுதி முன்பிருந்து ஆனால் இப்போது எங்கள் கைவசம் இல்லை
நீதிபதி : என்ன உறுதி ? கோயிலிருக்கும் நிலத்தை பற்றிய உறுதி
ஸ்ரீ குலசிங்கம் : கோயிற் பரிபாலனத்தை பற்றிய முதல் உறுதி உம்முடைய தாயாரால் 1916 ஆம் ஆண்டு முடிக்கப்பட்டதா? ஆம் தாயாரும் தமையனாரும் சேர்ந்து முடித்த உறுதியாகும்
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday = part 1 -- இந்து சாதனம் பத்திரிகை
நல்லூர் கந்தசாமி கோயில் வழக்கு August - 6 - 1928 Monday
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம் 6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா? இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை
டாக்குத்தர் கந்தையா சில துஷ்டர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு குடிக்க கொடுத்து கலக்கம் விளைவிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுது எனது தகப்பனாரும் சிலரை வைத்திருந்தார்
உமது தகப்பனார் கோயிலடியில் கலகத்திற்காக ஆள் சேர்த்ததுண்டா?
மேற்படி கோயில் வழக்கு சென்ற ஜூலை மாதம் 6 திங்கள் கிழமையும் செவ்வாய் கிழமையும் புதன் கிழமையும் பெரிய நீதி தலத்தில் (டிஸ்த்திரிக் கோர்ட்டில்) நீதிபதி மிஸ்ட்ரர் J C W றொக் முன்னிலையில் நிகழ்ந்தது.
1 ஆம் பிரதிவாதியாக ஸ்ரீ ரகுநாத மாப்பாண முதலியார் கூறியவை. (முற்றோடர்)
ஊரவர்களுடைய உதவியிருந்தால் தமக்கு நன்மையாக இருக்கும் என்று உமது தகப்பனார் நினைத்திருக்க கூடுமா? இல்லை
டாக்குத்தர் கந்தையாவுக்கு மாறாகத்தான் ஊரவர்களுடைய உதவியை பெறவேண்டும் என்று உம்முடைய தகப்பனார் முயற்சி செய்யவில்லையா? அப்படிஇல்லை
டாக்குத்தர் கந்தையா சில துஷ்டர்களை சேர்த்து கொண்டு அவர்களுக்கு குடிக்க கொடுத்து கலக்கம் விளைவிக்க வேண்டும் என்று முயற்சி செய்த பொழுது எனது தகப்பனாரும் சிலரை வைத்திருந்தார்
உமது தகப்பனார் கோயிலடியில் கலகத்திற்காக ஆள் சேர்த்ததுண்டா?
Friday, August 19, 2022
இலங்கை சீனா ரப்பர் அரிசி பண்டமாற்று 70 ஆண்டு நிறைவு rubber-rice barter agreement with China
ராதா மனோகர் : இலங்கை சுதந்திரம் அடைந்த காலக் கட்டத்தில் உணவு உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது
இப்போது இருக்கும் பெரும்பாலான விவசாய குடியேற்றத்திட்டங்கள் அப்போது இருக்கவில்லை
அரிசி தட்டுப்பாடு பயங்கரமாக இருந்தது அன்று இந்தியாவின் உணவு உற்பத்தியும் மிக மோசமான நிலையிலேயே இருந்தது இந்த பின்னணியில் இலங்கையின் அரிசி தேவையில் சீனாவின் பங்களிப்பு என்னவாக இருந்தது என்று தெரிந்து கொள்வது நல்லது
அன்று சீனா மாவோ தலைமையில் அமைந்த ஒரு தீவிர கம்யூனிச தேசமாக கருதப்பட்டது பல நாடுகள் சீனாவை அங்கீகரிக்கவே இல்லை
![]() |
அன்று இலங்கையின் அரிசி தேவையை நிறைவு செய்யகூடிய ஒரு நிலையில் சீனா இருந்தது . இலங்கையின் ரப்பர் சீனாவுக்கு தேவையாக இருந்தது ஆனால் அமெரிக்க பிரிட்டன் இந்தியா உட்பட பல நாடுகள் இலங்கை சீனாவோடு ஒரு வியாபார ஒப்பந்தம் செய்ய முயலும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்காத நிலைமை இருந்தது ..
இந்த பின்னணியில் இருந்து ரப்பர் அரிசி டீல் பற்றி தெரிந்து கொள்வது நல்லது
ஆசியா டைம்ஸ் : 1952 October 4 இல் இலங்கை அரசு மிகவும் துணிச்சலாக சீனாவுடன் ரப்பர்-அரிசி பண்டமாற்று ஒப்பந்தம் செய்து கொண்டது
Sunday, August 14, 2022
யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி சில முக்கிய செய்திகள்.. 1961 ஈழநாடு யாழ்ப்பாணம்..
ராதா மனோகர் : யாழ்ப்பாண பல்கலை கழகம் உருவான வரலாறு பற்றி பல செய்திகள் இன்னும் பொது வெளிக்கு வரவில்லை என்றே கருதுகிறேன்
சேர் பொன்னம்பலம் ராமநாதன் அவர்கள் ராமநாதன் கல்லூரியையும் பரமேஸ்வரா கல்லூரியையும் கட்டும்பொழுதே அவை ஒரு பல்கலை கழகமாக உருவாக்கி வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தார் என்று அவரின் செயலாளராகவும் அன்பு நண்பராகவும் இருந்த மறைந்த திரு சங்கரப்பிள்ளை அய்யா அவர்கள் தனது அந்திம காலங்களில் பலரிடம் கூறியிருக்கிறார்.
அடியேன் சிறுவயதில் அவரின் வீட்டிற்கு செல்வதுண்டு . சங்கரப்பிள்ளை அய்யாவின் மகன்தான் திரு பண்டிதர் ராமச்சந்திரன் அவர்கள் பன்மொழி திறமையும் பேரறிவும் கொண்டவர்
திரு ராமச்சந்திரனை பார்க்கவும் பேசவும் கூட்டங்கள் அலைமோதும்.
அக்கூட்டத்தில் ஒரு சிறுவனாக அடியேனும் இருந்திருக்கிறேன்
யாழ்ப்பாண பல்கலை கழகத்தை பற்றி சேர் பொன்னம்பலம் ராமநாதன் கண்ட கனவு பற்றி நான் அறிந்தது அந்த காலங்களில்தான்.
Saturday, August 6, 2022
அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
ஈழகேசரி . யாழ்ப்பாணம் .. 25 - 05 - 1952
அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மானிப்பாயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அபேட்சகரான திரு சி வன்னியசிங்கம் தமிழரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்க கூடிய ஒரு விடயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார் என அறியக்கிடக்கின்றது
கொழும்பில் உள்ள அமெரிக்கன் எம்பசி என்ற அமெரிக்க ஸ்தானிகர் காரியாலயத்தினர் தமிழரசு கட்சியினரை ஒரு விருந்து உபசாரத்திற்கு அழைத்தார் என்றும் தமிழரின் எதிர்காலத்தை பற்றி தமிழரசு கட்சியினருடன் அமெரிக்கர் சம்பாஷித்தனர் எனவும் திரு சி வன்னியசிங்கம் மானிப்பாய் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரியவருகிறது.
தமிழர் பிரிந்து வாழ்வதாயின் அமெரிக்க உதவ முன்வரும் என்றும் அவர்கள் கூறினார்களாம்.
இவ்விஷயத்தை அமெரிக்க கலாச்சாரத்தில் நல்ல பரிச்சயம் வாய்ந்த திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியினரால் நடப்படும் பத்திரிகை (சுதந்திரன்) காரியாலயத்திற்கு சென்று தெரிவித்தபோது அப்பத்திரிகையை நடத்துபவர்கள் (எஸ் டி சிவநாயகம்) தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கரிடம் தாரைவார்த்து கொடுப்பது அபாயகரமானது என்று நெருப்பெடுத்தார்கள் என பேசப்படுகிறது.
அமெரிக்கா தமிழரசு சமரசம் ! தமிழினத்தை அடைவு வைப்பதா? தலைவர்கள் சூழ்ச்சி அம்பலம்!
சமீபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மானிப்பாயில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தமிழரசு கட்சியை சேர்ந்த ஒரு அபேட்சகரான திரு சி வன்னியசிங்கம் தமிழரின் எதிர்காலத்தை பெரிதும் பாதிக்க கூடிய ஒரு விடயத்தை அவிழ்த்து விட்டிருக்கிறார் என அறியக்கிடக்கின்றது
கொழும்பில் உள்ள அமெரிக்கன் எம்பசி என்ற அமெரிக்க ஸ்தானிகர் காரியாலயத்தினர் தமிழரசு கட்சியினரை ஒரு விருந்து உபசாரத்திற்கு அழைத்தார் என்றும் தமிழரின் எதிர்காலத்தை பற்றி தமிழரசு கட்சியினருடன் அமெரிக்கர் சம்பாஷித்தனர் எனவும் திரு சி வன்னியசிங்கம் மானிப்பாய் கூட்டத்தில் கூறினார் எனவும் தெரியவருகிறது.
தமிழர் பிரிந்து வாழ்வதாயின் அமெரிக்க உதவ முன்வரும் என்றும் அவர்கள் கூறினார்களாம்.
இவ்விஷயத்தை அமெரிக்க கலாச்சாரத்தில் நல்ல பரிச்சயம் வாய்ந்த திரு எஸ் ஜெ வி செல்வநாயகம் அவர்கள் தமிழரசு கட்சியினரால் நடப்படும் பத்திரிகை (சுதந்திரன்) காரியாலயத்திற்கு சென்று தெரிவித்தபோது அப்பத்திரிகையை நடத்துபவர்கள் (எஸ் டி சிவநாயகம்) தமிழ் மக்கள் தங்கள் எதிர்காலத்தை அமெரிக்கரிடம் தாரைவார்த்து கொடுப்பது அபாயகரமானது என்று நெருப்பெடுத்தார்கள் என பேசப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)